search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தேவைகளை முதல்-அமைச்சரிடம் பெற்று பயனடைய வேண்டும்
    X

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவர் கிராமத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீன்பிடி இறங்குதளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி. அருகில் கலெக்டர் விஷ்ணுசந்திரன், எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் மற்றும் பலர் உள்ளனர்.

    குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தேவைகளை முதல்-அமைச்சரிடம் பெற்று பயனடைய வேண்டும்

    • குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தேவைகளை முதல்-அமைச்சரிடம் பெற்று பயனடைய வேண்டும்.
    • மண்டபத்தில் 18-ந்தேதி நடைபெறும் மீனவர்கள் மாநாட்டில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட–ரங்கில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச் சர் அனிதா ஆர்.ராதாகி–ருஷ் ணன் தலைமையில், கலெக் டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் மீனவர்களு–டனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அமைச் சர் அனிதா ஆர்.ராதாகி–ருஷ்ணன் மீனவர்களின் கோரிக்கை குறித்து கேட்ட–றிந்தார். பின்னர் அவர் கூறி–யதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ராமநாதபுரம் மாவட்டத் திற்கு 18.08.2023 அன்று வருகை தந்து மீனவர்களுட–னான மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீனவர்க–ளின் கோரிக்கைகளை நேர–டி–யாக சந்தித்து கேட்டறிகி–றார். மேலும், வளைகுடா பகுதியில் மீன்பிடி தொழி–லையே பிரதான தொழிலாக இருந்து வரும் மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாது–காத்து நலன் காக்கும் முத–லமைச்சராக தமிழ்நாடு முத–லமைச்சர் இருந்து வருகிறார்.

    அவர் ராமநாதபுரம் வருகை தரும் தினத்தில் மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளார். அதன் முன்னேற் பாடாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்களிடம் முக்கிய தேவை–களை குறித்து கேட்டறி–யப்பட்டது. இந்த–நிலை–யில் 20-க்கும் மேற் பட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

    அதில் குறிப்பாக மீன்பிடி இறங்கு தளத்தில் உட்கட்ட–மைப்பு மேம்படுத்துதல், டீசல் மானியம் உயர்த்தி தர வேண்டுதல், மீன்பிடி தடைக்காலம் நாட்களை குறைக்க வேண்டுதல், இலங்கை அரசால் பிடிக்கப் படும் படகுகளை மீனவர்க–ளுடன் சேர்த்து விடுதலை செய்ய வேண்டுதல், மீனவர் க–ளுக்கான ஓய்வூதி–யம் வயது வரம்பை உயர்த்து–தல், அரசு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பதிவு முறை இணையதளத்தில் ஏற்படும் தவறுகளை உட–னுக்குடன் சரி செய்திட வேண்டுதல்,

    நீண்ட நாளாக மீனவர்கள் குடியிருக்கும் பகுதியில் மீனவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுதல் போன்ற கோரிக்கைகள் முன்வைத்ததில் இணைய–தளத்தில் பதிவேற்ற முறை–யில் ஏற்பட்டுள்ள தவறு–களை சிறப்பு முகாம் அமைத்து ஒருவார காலத்திற் குள் சரி செய்து அரசு நிவா–ர–ணத்தொகை பெறாத–வர்களுக்கு வழங்கிட நட–வடிக்கை மேற்கொள்ளப்ப–டும்.

    அதேபோல் மீன் இறங்கு தளம் மற்றும் மீனவர் குடி–யிருப்பு பகுதிகளில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் மூலம் உயர்மட்ட மின் விளக்குகள் அமைத்து தரப்படும், சாலை வசதிகள், குடிநீர் குழாய் இணைப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து கொடுக்கப்படும். மேலும் மீனவர்களுக்கான முக்கிய கோரிக்கைகள் மற்றும் முக்கிய திட்டப்ப–ணிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார்.

    எனவே 18.08.2023 அன்று நடைபெறுகின்ற மீனவர்கள் மாநாட்டில் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு தங்கள் தேவைகளை முதலமைச்சரி–டம் பெற்று பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கும் மற்றும் குந்துகால், நாலுபனை, பாம்பன் பகுதியில் உள்ள மீன்பிடி இறங்குதளத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநா–தபுரம்), செ.முருகேசன் (பரமக்குடி), சென்னை தலைமை பொறியாளர் மீன்பிடி துறைமுகம் வி.–ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் காவல் கண்காணிப் பாளர் காந்தி, உதவி கலெக் டர் (பயிற்சி) சிவானந் தம், மீன்வளத்துறை துணை இயக்குநர்கள் பிரபாவதி, காத்தவராயன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவள்ளி மற்றும் அரசு அலுவலர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×