search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் பயில்வது பெருமை-அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
    X

    விழாவில் ஒரு மாணவிக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஊக்கத்தொகை வழங்கிய காட்சி.

    அரசு பள்ளியில் பயில்வது பெருமை-அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

    • அரசு பள்ளியில் பயில்வது பெருமை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • சிவகங்கை கோட்டையூர் தஞ்சாவூர்அருணாச்சலம் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்-ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தஞ்சாவூர்அருணாச்சலம் செட்டியார்அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    தற்போது அரசுப்பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் பயில்வதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    பெற்றோர்கள் தனியார்பள்ளிகளில் தங்களது குழந்தைகள் கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தினை களைந்து அரசுப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியின் போது, மேற்கண்ட அரசுப்பள்ளியில் 2021-2022-ம் ஆண்டு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் தனது சொந்த நிதியிலிருந்து முதல் பரிசுத்தொகையாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசுத்தொகையாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கினார்.

    விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், பேரூராட்சித் தலைவர் கார்த்திக் சோலை, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், மின்வாரியத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×