என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலைத்திருவிழாப் போட்டி.
திருவையாறு அரசு பள்ளியில் கலைத்திருவிழா
- கலை ஆர்வத்தை வெளிப்ப டுத்தும் மொழித்திறன், வாய்ப்பாட்டு, நடனம், நாடகம், இசைக் கருவிகள் இசைத்தல், கவின் கலை, நுண்கலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
- அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவையாறு:
திருவையாறு ஒருங்கி ணைத்த பள்ளி கல்வித்துறை மற்றும் வட்டார வள மையம் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் கலைத்திருவிழா நடந்தது.
அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி தலைமையாசிரியர் ஹேமலதா, வட்டார கல்வி அலுவலர்கள் விர்ஜின் ஜோனா, தங்கதுரை ஆகியோர் கலை திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதில் மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிப்ப டுத்தும் மொழித்திறன், வாய்ப்பாட்டு, நடனம், நாடகம், இசைக் கருவிகள் இசைத்தல், கவின் கலை, நுண்கலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
திருவையாறு ஒன்றியத்துக்குட்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பா ர்வையாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.






