search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students exam"

    • . 4 பிராந்தியங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மையத்தின் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் லாஸ்பேட்டையில் நடந்தது.

    கிராமிய நடனத்திற்கான நடுவர்களாக திருமுருகன், பாரதியார் பல்கலைக்கூடத்தின் விரிவுரையாளர்கள் பாஸ்கர், வசந்த், பால்ராஜ், மனிஷ்குமார் ஆகியோர் சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர். 4 பிராந்தியங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

    போட்டியின்போது மாணவர்களின் படைப்புகள் குறித்து நடுவர்கள் கேள்வி எழுப்பினர். மாணவர்கள் அளித்த பதிலின் அடிப்படையிலும், அவர்களின் கலை மற்றும் வாழ்வியல் திறன் அடிப்படையிலும் வெற்றியாளர்கள் தேர்வு செய்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்பாளர்கள் டெல்லியில் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். போட்டியை மாநில பயிற்சி மையத்தின் சார்பில் சிறப்பு அலுவலர் கருணா சுகிர்தாபாய் தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு வழங்கினார்.

    • கலைத் திருவிழா போட்டியில் பர்கூர் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • மாவட்டத்தில் முதலிட த்தைப் பெற்று மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    அந்தியூர்:

    பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கலை திருவிழா நடைபெற்று வருகிறது.

    மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி யில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றி யம் பர்கூர் அரசு பழங்குடி யினர் நல உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளி 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாண வர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் தெருக்கூத்து போட்டியில் பங்கேற்று மாவட்டத்தில் முதலிட த்தைப் பெற்று மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாண வர்களை தலைமை ஆசிரி யர் சுப்ரமணி, உதவி தலை மை ஆசிரியர் ராணி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குமரேசன், துணை திட்ட அலுவலர் மெய்வேலு மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டினர்.

    வெற்றி பெற்ற மாண வர்கள் தங்களுக்கு பயிற்சி அளித்த பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ராஜேஷ்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ராஜசேகர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு புளியால் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் பலர் பாராட்டினர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் புளியால் அரசு பள்ளி மாணவர்கள் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். தனிப்போட்டி பிரிவில் 7-ம் வகுப்பு மாணவர் தமிழ் அமுதன் பறை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் ஜெகதீசுவரன் முதலிடமும், ஒயிலாட்ட போட்டியில் ஜீவிதாஷிரி முதலிடமும் பெற்றனர்.

    9-ம் வகுப்பு மாணவர் வாசு பறை இசை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் அருண் முதலிடமும், கீ போர்டு போட்டியில் ஆல்வின் புஷ்பராஜ் முதலிடமும், செவ்வியல் நடனத்தில் சுருதி முதலிடமும், களிமண் சிற்ப போட்டியில் கமலேஷ் முதலிடமும், தனி நடன போட்டியில் முகிதா‌ 2-ம் இடமும், பானை ஓவியப் போட்டியில் ஜெயபாலா 2-ம் இடமும், தலைப்பை ஒட்டி வரைதல் போட்டியில் பால் தினகரன் 2-ம் இடமும், பல குரல் பேச்சு போட்டியில் ஹரி சதிஷ் 2-ம் இடமும் வெற்றி பெற்றனர்.

    குழுப் போட்டியில் விவாத மேடையில் ரித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், சமூக நாடகத்தில் முகமது ஹாரிஸ்‌, நித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், கிராமிய நடனத்தில் வைஷ்ணவி, நிஷா குழுவினர் 2-ம் இடமும் பெற்றனர். அனைவரும் சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான கலைப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜோசப் இருதயராஜ், ஜெயந்தி ஆகியோரையும் தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் பலர் பாராட்டினர்.

    ×