search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் உண்டு உறைவிட பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு
    X

    பர்கூர் உண்டு உறைவிட பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு

    • கலைத் திருவிழா போட்டியில் பர்கூர் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • மாவட்டத்தில் முதலிட த்தைப் பெற்று மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    அந்தியூர்:

    பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கலை திருவிழா நடைபெற்று வருகிறது.

    மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி யில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றி யம் பர்கூர் அரசு பழங்குடி யினர் நல உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளி 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாண வர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் தெருக்கூத்து போட்டியில் பங்கேற்று மாவட்டத்தில் முதலிட த்தைப் பெற்று மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாண வர்களை தலைமை ஆசிரி யர் சுப்ரமணி, உதவி தலை மை ஆசிரியர் ராணி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குமரேசன், துணை திட்ட அலுவலர் மெய்வேலு மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டினர்.

    வெற்றி பெற்ற மாண வர்கள் தங்களுக்கு பயிற்சி அளித்த பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ராஜேஷ்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ராஜசேகர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×