என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலெக்டர் சந்தீப் நந்தூரி"
தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு- இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து தீர்வு காணப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டம் கோரம்பள்ளம் பகுதி - 2 , ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு, கோவில்பத்து, திருச்செந்தூர் வட்டம் சேர்ந்த மங்கலம், சாத்தான்குளம் வட்டம் கருங்கடல், கோவில்பட்டி வட்டம் தோணுகால்,
விளாத்திகுளம் வட்டம் சங்கரலிங்கபுரம், எட்டயபுரம் வட்டம் ராஜாப்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம் ஜெகவீரபாண்டியாபுரம், கயத்தார் வட்டம் காமநாயக்கன்பட்டி, ஏரல் வட்டம் கீழ்பிடாகை கஸ்பா கிராமங்களில் நாளை (7-ந் தேதி) வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
முகாம்களில் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 24-ந் தேதி நாளை அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தாலுகாவில் பேரூரணி கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் மூலக்கரை கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் விட்டிலாபுரம், கோவில்பத்து கிராமத்திலும், சாத்தான் குளம் தாலுகாவில் மீரான் குளம் பகுதி 2 கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் ஜமீன்தேவர்குளம் கிராமத்திலும், விளாத்தி குளம் தாலுகாவில் சின்னூர், மாவிலோடை கிராமங்களிலும், எட்டயபுரம் தாலுகாவில் ஈராச்சி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கீழமுடிமண் கிராமத்திலும், கயத்தாறு தாலுகாவில் தொட்டன்பட்டி கிராமத்திலும், ஏரல் தாலுகாவில் இருவப்ப புரம் பகுதி1 கிராமத்திலும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது.
இந்த முகாமில் மக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக் களை கொடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி காலை 9.13 மணி அளவில் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்துக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி 9.15 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சின்ராம், ஜெபராஜ், பிரகாஷ் உள்பட போலீசார் 36 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி, புறாக்கள், பலூன்களை பறக்கவிட்டார்.
விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 160, கூட்டுறவுத்துறை மூலம் ரூ.8½ லட்சம், வேளாண்மைத்துறை மூலம் ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 250, தாட்கோ மூலம் ரூ.24 லட்சத்து 96 ஆயிரத்து 682, மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.12 லட்சத்து 74 ஆயிரம், மகளிர் திட்டம் மூலம் ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 833 உள்பட மொத்தம் 10 துறைகள் மூலம் 59 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 72 ஆயிரத்து 750-க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி நல்லாயன் செவித்திறன் குறைவுடையோர் பள்ளி, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய கால்நடை குழுமத்தின் 2017-18ம் ஆண்டு திட்டப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு 75 சதவீதம் மானியத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மின்சாரத்தில் இயங்கும் புல்வெட்டும் கருவி வழங்கப்பட உள்ளது.
இந்த கருவியை பெற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் 2 கால்நடைகள் வளர்ப்போர்கள், 0.5 ஏக்கர் புல்வளர்ப்புக்கு இடம் மற்றும் புல்வெட்டும் கருவிக்கு 25 சதவீதம் தொகையை செலுத்த விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும்.
மேலும், சுயஉதவிக்குழு உறுப்பினர் ஒரு கால்நடை வளர்ப்போராகவும், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கால்நடை தீவனப்பயிர் வளர்ப்பவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கு முன்பு இதுபோன்ற சலுகைகளை அரசிடம் இருந்து பெற்றவராக இருக்கக்கூடாது.
மேற்கண்ட தகுதியுடைய, புல்வெட்டும் கருவி தேவைப்படும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அந்தந்த பகுதி கால்நடை மருந்தகத்தில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது நடந்த கலவரம் காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதற்கிடையே ஆலையில் உள்ள கன்டெய்னரில் இருந்து கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டது. கந்தக அமிலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. ஆலையில் இருந்து மொத்தம் 94 டேங்கர் லாரிகள் மூலம் 2,124 டன் கந்தக அமிலம் முற்றிலும் அகற்றப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் சுமார் 5 ஆயிரம் டன் கந்தக அமிலம், சுமார் 3 ஆயிரம் டன் பாஸ்பாரிக் அமிலம், 50 டன் கியாஸ், பர்னஸ் ஆயில், டீசல், குழாய் உடைப்பை சரிசெய்வதற்கான ரசாயனம், தாமிரம் தயாரிக்கப்பட்ட பிறகு கிடைக்கப்பெற்ற விலை உயர்ந்த பொருட் கள் உள்ளிட்டவை உள்ளன.
இந்த ரசாயனங்களை எப்போது அகற்றுவது? அதனை எப்படி அகற்றலாம்? என்பது குறித்து உயர்மட்டக்குழு அறிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
மேலும் அனைத்து தொழிற்சாலைகளும் மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். இந்த விதிகளை ஏதேனும் தொழிற்சாலைகள் மீறி இருந்தால் நோட்டீஸ் கொடுத்து, அதனை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். #Sterlite #CollectorSandeepNanduri
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் மறுபிரேத பரிசோதனை நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கி இன்று காலை 2.30 வரை நடைபெற்றது. மறுபிரேத பரிசோதனையை மாஜிஸ்திரேட்டு, பலியானவர்களின் உறவினர்கள் முன்னிலையில் டாக்டர்கள் சுடலைமுத்து, மனோகரன், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் அம்பிகாபிரசாத், பத்ரா ஆகியோர் செய்திருந்தனர். நேற்று இரவே 3 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை மேலும் 2 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற 2 பேரின் உடல் இன்று மாலைக்குள் ஒப்படைக்கப்படும்.
அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மறுபிரேத பரிசோதனையில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதுகுறித்து 100 சதவீத வீடியோ காட்சிகள் உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை பதிவு வழக்கம்போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #SandeepNanduriIAS
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு பலியான 13 பேரில் 7 பேர்களின் உடல்கள் பிரேதபரிசோதனை நடந்து முடிந்துள்ளது. அந்த உடல்களை மறு பிரேதபரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி கலவரத்தில் பலியான 7 பேரின் உடல்கள் ஐகோர்ட் உத்தரவுப்படி மறு பிரேதபரிசோதனை இன்று மதியம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் வருகிறார். ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர், தமிழக மருத்துவர்கள் 2 பேர் பிரேத பரிசோதனை செய்வார்கள்.
மாஜிஸ்திரேட் மற்றும் பலியானவர்களின் உறவினர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும். இன்று பிற்பகலுக்குள் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மனித உரிமை ஆணைய சிறப்புக்குழு வந்தால் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம். ஒருநபர் விசாரணை கமிஷனுக்கான அலுவலகம் தயார் நிலையில் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் அரசு அறிவித்தபடி நாளை திறக்கப்படும். மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #SandeepNanduri
தூத்துக்குடி:
தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மற்ற பகுதிகளில் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்கள் அன்றாட பணிக்கு திரும்பியுள்ளனர். அத்யாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்ட போலீசாரை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தற்போது 144 தடை உத்தரவு தேவை இல்லை என்பதால் நீட்டிக்கப்படவில்லை. சூழலை கண்காணித்து வருகிறோம்.
தேவைப்பட்டால் மீண்டும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 7 பேரின் உடல் பரிசோதனை முடிவடைந்துள்ளது. எஞ்சிய 6 பேரின் பிரேத பரிசோதனை நடக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார்.
இதையடுத்து தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இவை இல்லாமல் ஆலை இயங்க முடியாது. எனவே பொதுமக்கள் அரசின் உறுதியை ஏற்று முழுவதுமாக இயல்பு நிலை திரும்ப ஒத்துழைக்க வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையை அரசு கண்காணித்து வருகிறது. இணையதள சேவை வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #tuticorinfiring #sandeepnanduri
தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பான தகவல்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் குறுஞ்செய்திகள் மூலமாக பொதுமக்கள் மத்தியில் பரவியது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்கும் விதமாக தமிழக அரசு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய தள சேவையை ரத்து செய்தது.
இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். ஆன்லைன் மூலம் நடைபெறும் சேவைகள் பாதிக்கப்பட்டன. வங்கி பணபரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இனையதள சேவையை தொடங்க வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு கலெக்டர் கூறினார். #SandeepNanduri #Thoothukudi
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
கலெக்டர் வெங்கடேஷ் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மாநில கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதில் நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடிக்கு புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் சென்னை வடக்கு போக்குவரத்து காவல்துறை துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா தூத்துக்குடிக்கு புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோர் தங்களது அலுவலகங்களில் இன்று காலை பதவியேற்று கொண்டனர்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி நகரை இயல்பு நிலைக்கு திரும்ப செய்வதே எனது முதல் பணியாகும். தூத்துக்குடியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளதால் அதுபற்றி கருத்துக்கூற இயலாது. இந்த சம்பவத்தின் போது பலியானவர்கள், காயம் அடைந்தவர்கள், சேதம் அடைந்த பொது சொத்துக்கள் ஆகிய விபரங்கள் இன்று மாலை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #thoothukudi #SandeepNanduri
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்