search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 பேரின் மறுபிரேத பரிசோதனையில் எந்தவித சந்தேகமும் இல்லை- கலெக்டர் சந்தீப் நந்தூரி
    X

    7 பேரின் மறுபிரேத பரிசோதனையில் எந்தவித சந்தேகமும் இல்லை- கலெக்டர் சந்தீப் நந்தூரி

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் மறுபிரேத பரிசோதனையில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #SandeepNanduriIAS
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படி துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் மறுபிரேத பரிசோதனை நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கி இன்று காலை 2.30 வரை நடைபெற்றது. மறுபிரேத பரிசோதனையை மாஜிஸ்திரேட்டு, பலியானவர்களின் உறவினர்கள் முன்னிலையில் டாக்டர்கள் சுடலைமுத்து, மனோகரன், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் அம்பிகாபிரசாத், பத்ரா ஆகியோர் செய்திருந்தனர். நேற்று இரவே 3 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை மேலும் 2 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற 2 பேரின் உடல் இன்று மாலைக்குள் ஒப்படைக்கப்படும்.

    அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மறுபிரேத பரிசோதனையில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதுகுறித்து 100 சதவீத வீடியோ காட்சிகள் உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை பதிவு வழக்கம்போல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #SandeepNanduriIAS
    Next Story
    ×