என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
7 பேரின் மறுபிரேத பரிசோதனையில் எந்தவித சந்தேகமும் இல்லை- கலெக்டர் சந்தீப் நந்தூரி
Byமாலை மலர்1 Jun 2018 6:13 AM GMT (Updated: 1 Jun 2018 6:13 AM GMT)
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் மறுபிரேத பரிசோதனையில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #SandeepNanduriIAS
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் மறுபிரேத பரிசோதனை நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கி இன்று காலை 2.30 வரை நடைபெற்றது. மறுபிரேத பரிசோதனையை மாஜிஸ்திரேட்டு, பலியானவர்களின் உறவினர்கள் முன்னிலையில் டாக்டர்கள் சுடலைமுத்து, மனோகரன், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் அம்பிகாபிரசாத், பத்ரா ஆகியோர் செய்திருந்தனர். நேற்று இரவே 3 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை மேலும் 2 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற 2 பேரின் உடல் இன்று மாலைக்குள் ஒப்படைக்கப்படும்.
அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மறுபிரேத பரிசோதனையில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதுகுறித்து 100 சதவீத வீடியோ காட்சிகள் உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை பதிவு வழக்கம்போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #SandeepNanduriIAS
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் மறுபிரேத பரிசோதனை நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கி இன்று காலை 2.30 வரை நடைபெற்றது. மறுபிரேத பரிசோதனையை மாஜிஸ்திரேட்டு, பலியானவர்களின் உறவினர்கள் முன்னிலையில் டாக்டர்கள் சுடலைமுத்து, மனோகரன், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் அம்பிகாபிரசாத், பத்ரா ஆகியோர் செய்திருந்தனர். நேற்று இரவே 3 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை மேலும் 2 பேரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற 2 பேரின் உடல் இன்று மாலைக்குள் ஒப்படைக்கப்படும்.
அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மறுபிரேத பரிசோதனையில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதுகுறித்து 100 சதவீத வீடியோ காட்சிகள் உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை பதிவு வழக்கம்போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #SandeepNanduriIAS
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X