search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பு"

    • ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய குழுக்கள் சார்பில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    ராசிபுரம்:

    மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதை கண்டித்தும், அங்கு பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாகிடவும், பல தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ஒன்றிய அரசு உடனடியாக வாபஸ் பெற கோரியும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய குழுக்கள் சார்பில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் லலிதா கண்டன உரையாற்றினார்.

    வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரி, ராசிபுரம் ஒன்றிய தலைவர் சாவித்திரி, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஞானசவுந்தர்யா, பொருளாளர் தேவி,துணத்தலைவர் கற்பகவல்லி, திராவிடர் விடுதலை கழகம் நகர அமைப்பாளர் சுமதிமதிவதனி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மணிமாறன், வெண்ணந்தூர் செயலாளர் செங்கோட்டுவேல், திராவிடர் விடுதலைக் கழகம் நகர செயலாளர் பிடல் சேகுவாரா உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.      

    • குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே என்பது முதுமொழி.
    • குலம் தழைக்க வேண்டும், முன்னோர் சாந்தி அடைய வேண்டும்.

    குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழி பாடாகும், பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு கூட செல்வது கிடையாது.

    எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோயில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான். மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகளை மட்டும் செய்வது.

    குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறை களாக நம் முன்னோர் கள் வழிபட்டு வருவது. அய்யனார், சுடலை மாடன் என்று பல (கிராம) தெய்வங்கள் உண்டு. பல ஊர்களில் அங்கு வலுவான ஒரு காரணத்தால் மரணமடைந்தவரின் பெயரில் கோவில் ஒன்றை எழுப்பி அதை அவ்வூரின் ஒரு சாரார் குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர்.பெரும்பாலான குலதெய்வங்களுக்கு பின்னணியில் இம் மாதிரி ஒரு நிகழ்வு இருக்கும்.

    பெரிய கோவில்களுக்கும் இவற்றுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன வென்றால் இந்த மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட சில சமூகம் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும்.

    பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே குலதெய்வ கோவில்களில் வழிபாடுகளும் விழாக்களும் மிக சிறப்பாக நடைபெறும்.

    பொங்கல், கிடா வெட்டு, பலி என்று விழா அமர்க்களப்படும். மற்ற நாட்களில் கேட்பாரின்றி இருக்கும். ஆனாலும் அந்த சாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும் அன்று குலதெய்வ கோவில் பூசாரியைத் தேடிப்பிடித்து கோவிலை திறந்து வழிபட்டு அதன் பின்னரே வேலையைத் தொடங்குவார்கள். அதுவே முறையானதாகும்.

    உங்கள் குலதெய்வத்தை இதுவரை வழிபடாமல் இருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள், குலதெய்வம் எது என்று தெரியாமல் இருந்தால், ஊரில் வயதான பெரியவர்களிடம் கேளுங்கள், சொல்லி விடுவார்கள். அப்படியும் தெரியாவிட்டால் பலரிடம் விசாரித்தால் எப்படியாவது தெரிந்து விடும்.

    குலதெய்வத்திற்காக நடத்தப்படும் பிரத்தியேக வழிபாட்டு முறை, மற்றும் முக்கிய வழிபாட்டு பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு செல்லும் போது மறக்காமல் அந்த பொருளை வாங்கிச் செல்லுங்கள்.

    உதாரணமாக ஒரு சில கோவில்களில் தீபத்திற்கு நல்லெண்ணை, ஏன் சாராயம் கூட இருக்கலாம். தவறாது வாங்கிச் சென்று படையுங்கள்.

    குலத்தை காப்பதால் தான் குலக்கடவுள், மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. குலம் தழைக்க வேண்டும். முன்னோர் சாந்தி அடைய வேண்டும்.

    பின்னோர் செழிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் தவறாமல் பங்குனி உத்தரத்தன்று குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்து ஓடி விடும். பல பிரச்சினைகளில் சிக்கி உழல் பவர்கள் பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குல தெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும். அப்படி செய்தால் தான் பரிகார பூஜைகளில் வெற்றி உண்டாகும்.

    கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம்

    கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.

    அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.

    குலதெய்வத்தின் சிறப்பு

    குலதெய்வம் என்பது ஒரு குலத்தினரால் வழிபடப்படும் தெய்வம் ஆகும். தங்களுடைய குலம் தழைப்பதற்காக உதவியவர்களையும், குலம் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் குலதெய்வங்களாக வணங்குகின்றார்கள். பல்வேறு ஜாதிகளுக்கு பொதுவான குலதெய்வங்கள் காணப்படுகின்றன.

    கருப்பு, ஐயனார், மதுரை வீரர், பெரியசாமி போன்ற தெய்வங்களை பல்வேறு ஜாதியை சேர்ந்த மக்கள் குலதெய்வங்களாக வழிபடுகின்றனர். திருவிழா நாட்களிலும், குலதெய்வ சிறப்பு பூஜைகளிலும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றார்கள்.

    கொல்லிமலை தெய்வமான பெரியசாமியை கொங்கு வெள்ளாளர், சோழிய வெள்ளாளர் என பல ஜாதிகளை சேர்ந்த மக்கள் வணங்குகின்றார்கள். இவர்களுக்கு கோவில் பங்காளிகள் என்ற சிறப்பு பெயர் கிராமத்தில் நிலவுகிறது. குலதெய்வங்கள் தான் தம்மைக் காப்பதாக ஒவ்வொரு குலத்தவரும் நம்புகின்றனர்.

    அவர்தம் குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேஷ நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதல் வைக்கும் பழக்கம் இருக்கிறது.

    திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன் நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து கிடா வெட்டி பொங்கல் வைத்து விழாவை சிறப்பாக செய்கின்றார்கள்.

    `குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே...'

    `குலதெய்வத்தைக் கும்பிட்டு கும்மியடி...'

    என்ற முதுமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் சிறப்புகளை குறிப்பிடுகின்றன.

    • சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர், கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • கடந்த 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகள் படிக்கவும் முடியவில்லை.

    சேலம்:கண்ணில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகம் வந்த தொழிலாளிகள்கண்ணில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகம் வந்த தொழிலாளிகள்

    சேலம் மாவட்டம் ஓமலூர் சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர், கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து ஒருவரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர்.

    இதையடுத்து மனு அளித்துவிட்டு வந்து நிருபர்களிடம் பெரியஅண்ணன் கூறும்போது, எனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன். தற்போது விவசாயம் நலிவடைந்து விட்டதால் விசைத்தறி தொழில் செய்வதற்காக எந்திரத்திற்கு ரூ.10 லட்சம் வங்கியில் கடனை பெற்றேன்.

    இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு மின் இணைப்பு கேட்டு 17 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்திய உள்ளேன். ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. இது குறித்து மின்சாரத்துறை அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தேன்.

    பின்னர் மின்சாரத்துறை சார்பில் மின் இணைப்பு வழங்குவதற்காக அதிகாரி மற்றும் ஊழியர்கள் வருகை புரிந்தனர். அப்போது அருகில் இருந்த வசதி படைத்த மணி உள்ளிட்டோர் மின் இணைப்பு வழங்க கூடாது என தடுத்துள்ளனர். மேலும் மின்சாரத் துறை ஊழியர்களுகடகு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மின்சார துறை அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காமல் சென்று விட்டனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகள் படிக்கவும் முடியவில்லை. வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி வாழ்ந்து வருகிறோம். தற்போது கடன் பெற்ற இடத்தில் ஒரு வருடமாக வட்டி கட்ட முடியாத சூழ்நிலை உள்ளது.

    எனவே தொழில் தொடங்குவதற்கு மின் இணைப்பு அவசியம் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருட்டில் வாழக்கூடிய நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

    மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

    • ரெயில்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.

    ஈரோடு:

    கோவை-ஷீரடி விரைவு ரெயிலை தனியாருக்கு விடுவதை உடனடியாக கைவிட வேண்டும். நாடு முழுவதும் விரைவு ரெயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    ராமாயண யாத்திரை என்ற பெயரில் டெல்லி-நேபால் ரெயிலை ஐ.ஆர்.சி.டி.சி-க்கு விற்றதை வாபஸ் பெற வேண்டும். பாரத் கவுரவ் என்ற பெயரில் சுற்றுலா ரெயில்கள் என்ற பெயரில் 100 விரைவு ரெயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்.

    உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் ஈரோடு கிளை சார்பில் இன்று கறுப்பு தினமாக கடைபிடித்து ஈரோடு ரெயில்வே பணிமனையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வினோத்குமார், செயலாளர் தர்மராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிர்வாகிகள் முனிச்சந்த் மீனா, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×