search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியசாமி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம்.
    • குலதெய்வ வழிபாடு செய்வது மக்களிடையே பெருகி வருகிறது.

    குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை என்ன செய்வது என்று கவலைப்படாதீர்கள். கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவிலுக்கு சென்று, அந்த துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாராம்.

    குல தெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்று விக்கப்பட்டதோ, ஆகாசத்தில் இருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.

    வெள்ளாளர்களின் வரலாறு சொல்லும் பழைய நூல்களில் எல்லாம் நீலி கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தின் ஈடு இணையற்ற வரலாற்று சின்னங்களில் குலதெய்வங்களும் ஒன்று. தமிழர்களின் பழங்கால பண்பாடுகளை எடுத்து சொல்ல இன்னமும் வரலாற்று ஆய்வாளர்கள் குலதெய்வ வழிபாட்டை நம்பியிருக்கிறார்கள்.

    சைவர்களும், வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும், விஷ்ணுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு செய்வது மக்களிடையே பெருகி வருகிறது.

    மதுரைவீரன், கருப்பு, பெரியசாமி, செல்லாயி, மருதாயி என நம் முன்னோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த குலதெய்வ வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குதான் தெரியும்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும், திமுக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிடும்.
    • தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் இன்று நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும், தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிடும். அதற்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.


    பின்னர் அவரிடம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளீர்களா? அவர் கூட்டணியில் இருக்கிறாரா? என்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி அதுபற்றி முதலமைச்சர்தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

    • குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே என்பது முதுமொழி.
    • குலம் தழைக்க வேண்டும், முன்னோர் சாந்தி அடைய வேண்டும்.

    குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழி பாடாகும், பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு கூட செல்வது கிடையாது.

    எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோயில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான். மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகளை மட்டும் செய்வது.

    குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறை களாக நம் முன்னோர் கள் வழிபட்டு வருவது. அய்யனார், சுடலை மாடன் என்று பல (கிராம) தெய்வங்கள் உண்டு. பல ஊர்களில் அங்கு வலுவான ஒரு காரணத்தால் மரணமடைந்தவரின் பெயரில் கோவில் ஒன்றை எழுப்பி அதை அவ்வூரின் ஒரு சாரார் குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர்.பெரும்பாலான குலதெய்வங்களுக்கு பின்னணியில் இம் மாதிரி ஒரு நிகழ்வு இருக்கும்.

    பெரிய கோவில்களுக்கும் இவற்றுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன வென்றால் இந்த மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட சில சமூகம் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும்.

    பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே குலதெய்வ கோவில்களில் வழிபாடுகளும் விழாக்களும் மிக சிறப்பாக நடைபெறும்.

    பொங்கல், கிடா வெட்டு, பலி என்று விழா அமர்க்களப்படும். மற்ற நாட்களில் கேட்பாரின்றி இருக்கும். ஆனாலும் அந்த சாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும் அன்று குலதெய்வ கோவில் பூசாரியைத் தேடிப்பிடித்து கோவிலை திறந்து வழிபட்டு அதன் பின்னரே வேலையைத் தொடங்குவார்கள். அதுவே முறையானதாகும்.

    உங்கள் குலதெய்வத்தை இதுவரை வழிபடாமல் இருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள், குலதெய்வம் எது என்று தெரியாமல் இருந்தால், ஊரில் வயதான பெரியவர்களிடம் கேளுங்கள், சொல்லி விடுவார்கள். அப்படியும் தெரியாவிட்டால் பலரிடம் விசாரித்தால் எப்படியாவது தெரிந்து விடும்.

    குலதெய்வத்திற்காக நடத்தப்படும் பிரத்தியேக வழிபாட்டு முறை, மற்றும் முக்கிய வழிபாட்டு பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு செல்லும் போது மறக்காமல் அந்த பொருளை வாங்கிச் செல்லுங்கள்.

    உதாரணமாக ஒரு சில கோவில்களில் தீபத்திற்கு நல்லெண்ணை, ஏன் சாராயம் கூட இருக்கலாம். தவறாது வாங்கிச் சென்று படையுங்கள்.

    குலத்தை காப்பதால் தான் குலக்கடவுள், மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. குலம் தழைக்க வேண்டும். முன்னோர் சாந்தி அடைய வேண்டும்.

    பின்னோர் செழிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் தவறாமல் பங்குனி உத்தரத்தன்று குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்து ஓடி விடும். பல பிரச்சினைகளில் சிக்கி உழல் பவர்கள் பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குல தெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும். அப்படி செய்தால் தான் பரிகார பூஜைகளில் வெற்றி உண்டாகும்.

    கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம்

    கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.

    அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.

    குலதெய்வத்தின் சிறப்பு

    குலதெய்வம் என்பது ஒரு குலத்தினரால் வழிபடப்படும் தெய்வம் ஆகும். தங்களுடைய குலம் தழைப்பதற்காக உதவியவர்களையும், குலம் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் குலதெய்வங்களாக வணங்குகின்றார்கள். பல்வேறு ஜாதிகளுக்கு பொதுவான குலதெய்வங்கள் காணப்படுகின்றன.

    கருப்பு, ஐயனார், மதுரை வீரர், பெரியசாமி போன்ற தெய்வங்களை பல்வேறு ஜாதியை சேர்ந்த மக்கள் குலதெய்வங்களாக வழிபடுகின்றனர். திருவிழா நாட்களிலும், குலதெய்வ சிறப்பு பூஜைகளிலும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றார்கள்.

    கொல்லிமலை தெய்வமான பெரியசாமியை கொங்கு வெள்ளாளர், சோழிய வெள்ளாளர் என பல ஜாதிகளை சேர்ந்த மக்கள் வணங்குகின்றார்கள். இவர்களுக்கு கோவில் பங்காளிகள் என்ற சிறப்பு பெயர் கிராமத்தில் நிலவுகிறது. குலதெய்வங்கள் தான் தம்மைக் காப்பதாக ஒவ்வொரு குலத்தவரும் நம்புகின்றனர்.

    அவர்தம் குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேஷ நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதல் வைக்கும் பழக்கம் இருக்கிறது.

    திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன் நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து கிடா வெட்டி பொங்கல் வைத்து விழாவை சிறப்பாக செய்கின்றார்கள்.

    `குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே...'

    `குலதெய்வத்தைக் கும்பிட்டு கும்மியடி...'

    என்ற முதுமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் சிறப்புகளை குறிப்பிடுகின்றன.

    ×