search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிடம்"

    • நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • பாரம்பரிய நகர்மன்ற கட்டிடம் விரைவில் புனரமைக்கப்படும் என உறுதி கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகர்மன்ற அலுவலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அதில், நகராட்சியை தரம் உயர்த்துதல், பாரம்பரிய நகர்மன்ற கட்டிடத்தை புனரமைத்தல், பாரதி மார்க்கெட் மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல் ஆகிய திட்டப் பணிகள் குறித்து விவாதிக்க ப்பட்டது.

    அப்போது, நகராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாக்கடை பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ வலியுறுத்தினார். மேலும் பாரம்பரிய நகர்மன்ற கட்டிடம் விரைவில் புனரமைக்கப்படும் என உறுதி கூறினார்.

    கலந்தா ய்வுக் கூட்ட த்தில், நகர்மன்றத் தலைவர் இரா.மாரி முத்து, நகர்ம ன்றத் துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்கு மார், நகராட்சி ஆணையர் ப.திருமால் செல்வம், நகராட்சி செயற்பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கருவூலத்துறை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரியும் நிலை உள்ளது.
    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகம் எதி ரில் உள்ள மாவட்ட கருவூ லத்துறை கட்டிடத்தில் தபால் அலுவலகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், கூட்டு றவு இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், கனிம வளத்துறை அலுவலகம், கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குனர் அலுவல கம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் செயல்படுகின்றன.

    கட்டிடத்தில் பல இடங் களில் சிமின்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலை யில் உள்ளது. முறையான பராமரிப்பின்றி சேத மடைந்த பகுதியில் மரங்களும் முளைத்து வருகின்றன.

    இதனால் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில்தான் உள்ளது.

    இதனால் இங்கு பணி யாற்றும் ஊழியர்கள் அச்சத் தில் உள்ளனர். எனவே, உடனடியாக சேதமடைந்த கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் செய்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். என அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • உயிரிழந்தவர்களில் 260 பேர் குழந்தைகள் மற்றும் 230 பேர் பெண்கள் ஆவர்.
    • நகரின் பல பகுதிகள் இடிபாடுகளால் சிக்கி உள்ளது. 24 மணி நேரத்தில் 450 இலக்குகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டது.

    இஸ்ரேல், காசா படை மோதலில் இதுவரை 2,265 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேரும். காசாவில் 1,050 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 260 பேர் குழந்தைகள் மற்றும் 230 பேர் பெண்கள் ஆவர்.

    காசாவில் மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலிய விமானப்படை காசாவில் ஒரு பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக கட்டிடங்களை குண்டுவீசி தரைமட்டமாக்கி வருகிறது.

    இதனால், நகரின் பல பகுதிகள் இடிபாடுகளால் சிக்கி உள்ளது. 24 மணி நேரத்தில் 450 இலக்குகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டது.

    இத்தாக்குதல்களால் காசா மக்கள் பள்ளிகளில் ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் தங்குமிடங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    அனைத்து சாலைகளும் அழிக்கப்பட்டுள்ளன' என ஹமாஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2,50 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். 4 லட்சம் மக்கள் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    • அரூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை.
    • 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது அச்சல்வாடி ஊராட்சி. இதில் 9 வார்டுகள் உள்ள ஊராட்சியில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அச்சல்வாடி ஊராட்சியில் கல்லடிப்பட்டி குடுமியாம்பட்டி ஓட்டுமில், ஒடசல்பட்டி, பெரு மாள்கோவில், கதவனேரி ஆகிய குக்கிரா மங்களை உள்ளடக்கியது.

    அச்சல்வாடி ஊராட்சி மன்ற கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் ஆங்காங்கே பெயர்ந்து விழும் நிலையிலும் மழை பெய்தால் தண்ணீர் உள்ளே புகுந்து ஆவணங்கள் மழை நீரில் நனைந்து அழியும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றச் சாட்டை முன்வைக்கின்றனர்.

    இந்த ஊராட்சிக்கு அடிப்படை தேவைகளான நூலகம் மற்றும் சமுதாயக் கூடம், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் ஆகியவை அமைத்து தர வேண்டுமென பலமுறை தருமபுரி மாவட்ட நிர்வாகத்திறகு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டை முன்வைக் கின்றனர்.

    இன்று நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தில் இது குறித்து பொதுமக்கள் கேள்விகளை எழுப்பு வார்கள் என்று தெரிகிறது. இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் செய்ய வேண்டுமா? என விவாதித்தனர்.
    • கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி தொடக்கப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி கட்டடங்கள், சமையல் கூடம் கட்டடம் ஆகியவற்றினை நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், ஆணையர் ஹேமலதா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    பருவமழை தொடங்க வுள்ளதால் கட்டடங்களில் உறுதித்தன்மை எவ்வாறு உள்ளது? முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் செய்ய வேண்டுமா ? என்பது குறித்து விவாதித்தனர். தொடர்ந்து சீர்காழி பழையபேருந்து நிலையம் பகுதியில் ரூ.4 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்ட நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், போக்குவரத்திற்கு ஏதுவாக பணிகளை தரமாக விரைந்து முடித்திட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    • ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது.
    • 8 ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளில் நூற்று க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு போதிய கட்டட வசதி இல்லாத நிலையில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

    இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலி ன் காணொளி காட்சி மூலமாக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அதனையடுத்து பள்ளியில் நடந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம்க மாலூதீன்,திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பா ளர் முருகன், ஒன்றிய பொறியாளர் கலையரசன் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்களுக்கு இனிப்பு கள் வழங்கினர்.

    இதேபோல் செம்மங்குடி ஊராட்சியில் ரூ.27லட்சத்தி ல் புதிதாக 2வகுப்பறை களுடன் கூடிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு அவை தமிழகமுதல்வரால் காணொளிகாட்சி மூலம் திறந்துவைக்கப்பட்ட நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன்,துணை தலைவர் ரமணிசந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினர்.

    கொள்ளிடம் அருகே தொடுவாய் மீனவர் கிராமத்தில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 27 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகள் அடங்கிய இரண்டு வகுப்பறைகள்வுடனான புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து கொள்ளிடம் ஒன்றிய பெரு ந்தலைவர் ஜெயபிரகாஷ் கலந்துகொண்டு புதிய வகுப்பறைகளை குத்துவி ளக்கேற்றி துவக்கி வைத்தார். ஒன்றிய ஆணையர் தியாகரா ஜன்,வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தமிழ்ச்செல்வன், வட்டார வள மைய மேற்பா ர்வையாளர் ஞான புகழேந்தி , தலைமை ஆசிரியர் தங்கசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கொள்ளிடம் அருகே மகேந்திர பள்ளி, உமையாள்பதி, பழைய பாளையம், பண்ணங்குடி, பச்சபெருமா ள்நல்லூர், அரசூர், ஓலையாம்புத்தூர் உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் ரூ 2 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டிருந்த பள்ளி கட்டடங்கள் துவக்கி வைக்கப்பட்டன.

    • ராஜஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    மார்த்தாண்டம்:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பாலப்பள்ளம் பேரூராட்சியில் உள்ள மத்திக்கோடு எல்.எம். அரசு தொடக்க பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர், அப்பகுதி பொது மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அந்த பள்ளி யில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட் டத்தில் இருந்து ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நிறைவுப் பெற்றதையடுத்து வகுப்பறை கட்டிடங்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கிள்ளி யூர் கிழக்கு வட்டார காங் கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், பாலப்பள்ளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெபர்சன், வார்டு உறுப்பினர்கள் ஹெலன் மேரி, மேரி பிரிதா, பாலப்பள்ளம் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லதீஷ், மற்றும் சூசை மிக்கேல், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சாலையை அளவெடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை இடித்து அகற்றினர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணி செயல் அலுவலர் சரவணவேல் தலைமையில், கும்பகோணம் வருவாய் ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் முன்னிலையில் நடை பெற்றது.

    இதில் பணியாளர்கள் சாலையை அளவெடுத்து ஆக்கிரமித்து கட்டப்ப ட்டுள்ள கட்டிடத்தை ஜெ.சி.பி. எந்திரம் கொண்டு இடித்து அப்புறப்படுத்தினர்.

    சுவாமிமலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையி லான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பூதலூர் ஒன்றியத்தில் ரூ.92.79 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் ரூ.92.79 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், திருக்காட்டு ப்பள்ளி மற்றும் அகரப்பே ட்டையில் ரூ.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம், கூடநாணல் கிராமத்தில் ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை அலுவலக கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன் மற்றும் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்
    • விதிமீறல் கட்டிடங்களை கணக்கெடுத்து ‘சீல்’ வைக்க நடவடிக்கை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட மட்டகண்டி பகுதியில் ஒருவர் அரசு அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி பிரமாண்டமாக நான்கு அடுக்குமாடி கட்டடம் கட்டி வருதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன,

    இதைத் தொடா்ந்து கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலா் ரவிகுமாா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் அந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்படுவது உறுதியானது. இதைதொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகள், மஞ்சூா் போலீசார் உதவியுடன் அந்தக் கட்டடத்துக்கு 'சீல்' வைத்தனா்.

    கீழ்குந்தா பேரூராட்சியில் விதிமீறி கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு 'சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
    • கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமரு கல் அடுத்த கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜ புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், ஊராட்சி தலைவர் சரவணன், ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • திட்டச்சேரி பேரூராட்சியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
    • திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக நாகப்பட்டினம் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகமது ஷா நவாஸ் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை அளித்தார்.

    அதில் கூறியிப்பதாவது:-

    155 ஆண்டுகள் பழமையான நாகப்பட்டினம் நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும். நாகப்பட்டினம் நகராட்சியில், பாரம்பரிய நகர்மன்ற கட்டடம் பாழடைந்து உள்ளது. தொன்மையான அந்தக் கட்டடத்தை பாதுகாக்கும் வகையில் புனரமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம் நகராட்சி பாரதி மார்க்கெட் மிகவும் பழுதடைந்துள்ளது.

    அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும். நாகூர் பேருந்து நிலையம் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம் புதிய கடற்கரை மற்றும் நாகூர் சில்லடி கடற்கரையில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

    நாகையில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். நாகையில் தமிழறிஞர் மறைமலை அடிகள் நினைவாக, கலையரங்கம் கட்ட வேண்டும்.

    நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் அவசர சிகிச்சைப் பிரிவை, நாகை மக்களின் நலன்கருதி தொடர்ந்து அங்கேயே இயங்கச் செய்ய வேண்டும்.

    நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது.

    இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.

    நாகப்பட்டினம் சூடாமணி விகாரம் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை காட்சிப்படுத்தும் வகையில், கீழடி போல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

    திட்டச்சேரி பேரூராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலை உள்ளது.

    எனவே, அங்கு சிறப்பு கவனம் செலுத்தி, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி வட்டமாக (தாலுகா) அறிவிக்க வேண்டும்.

    திருச்செங்காட்டங்குடி அருள்மிகு உத்திராபதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.

    ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×