search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    காசாவில் கட்டிடங்களை குண்டு வீசி அழிக்கும் இஸ்ரேலிய படை
    X

    காசாவில் கட்டிடங்களை குண்டு வீசி அழிக்கும் இஸ்ரேலிய படை

    • உயிரிழந்தவர்களில் 260 பேர் குழந்தைகள் மற்றும் 230 பேர் பெண்கள் ஆவர்.
    • நகரின் பல பகுதிகள் இடிபாடுகளால் சிக்கி உள்ளது. 24 மணி நேரத்தில் 450 இலக்குகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டது.

    இஸ்ரேல், காசா படை மோதலில் இதுவரை 2,265 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேரும். காசாவில் 1,050 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 260 பேர் குழந்தைகள் மற்றும் 230 பேர் பெண்கள் ஆவர்.

    காசாவில் மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலிய விமானப்படை காசாவில் ஒரு பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக கட்டிடங்களை குண்டுவீசி தரைமட்டமாக்கி வருகிறது.

    இதனால், நகரின் பல பகுதிகள் இடிபாடுகளால் சிக்கி உள்ளது. 24 மணி நேரத்தில் 450 இலக்குகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டது.

    இத்தாக்குதல்களால் காசா மக்கள் பள்ளிகளில் ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் தங்குமிடங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    அனைத்து சாலைகளும் அழிக்கப்பட்டுள்ளன' என ஹமாஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2,50 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். 4 லட்சம் மக்கள் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    Next Story
    ×