

சுவாமிமலை:
சுவாமிமலை பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணி செயல் அலுவலர் சரவணவேல் தலைமையில், கும்பகோணம் வருவாய் ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் முன்னிலையில் நடை பெற்றது.
இதில் பணியாளர்கள் சாலையை அளவெடுத்து ஆக்கிரமித்து கட்டப்ப ட்டுள்ள கட்டிடத்தை ஜெ.சி.பி. எந்திரம் கொண்டு இடித்து அப்புறப்படுத்தினர்.
சுவாமிமலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையி லான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.