கீழ்குந்தா பேரூராட்சியில் விதிமுறை மீறிய 4 மாடி கட்டிடம்

பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர் விதிமீறல் கட்டிடங்களை கணக்கெடுத்து ‘சீல்’ வைக்க நடவடிக்கை
கீழ்குந்தா பேரூராட்சியில் விதிமுறை மீறிய 4 மாடி கட்டிடம்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட மட்டகண்டி பகுதியில் ஒருவர் அரசு அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி பிரமாண்டமாக நான்கு அடுக்குமாடி கட்டடம் கட்டி வருதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன,

இதைத் தொடா்ந்து கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலா் ரவிகுமாா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் அந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்படுவது உறுதியானது. இதைதொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகள், மஞ்சூா் போலீசார் உதவியுடன் அந்தக் கட்டடத்துக்கு 'சீல்' வைத்தனா்.

கீழ்குந்தா பேரூராட்சியில் விதிமீறி கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு 'சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com