search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டம்"

    • புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
    • பாம்பைப்பார்த்த மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப் பாளையம் புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது   மேலும் இந்த பஸ் நிலையத்தில் வாரம் தோறும் புதன்கிழமை வாரசந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று புதன்கிழமை என்பதால் கச்சிராய பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள் காய்கறி வாங்குவதற்காக அதிக அளவில் வார சந்தையில் கூடியிருந்தனர். வாரச் சந்தை நடக்கும் இடம் அருகே டாஸ்மாக் மதுபான கடையும் உள்ளது

    .இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் மதுபானம் வாங்குவதற்காக மதிப்பிரியர்கள் கடை முன்பு வரிசையில் நின்று கொண்டி ருந்தனர். அபோது மதுபான கடைக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளிய வந்தது. இதை பார்த்த மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மதுப் பிரியர்கள் ஓடுவதை பார்த்து விட்டு சந்தையில் காய்கறி வாங்க வந்த பெண்களும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மது வாங்க வந்த ஒருவர் பாம்பை பிடித்து அருகில் உள்ள குன்று பகுதியில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    பீளமேடு,

    கோவை மாதா கோவில் வீதி சவுரிபாளையத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது தங்கை மகளின் கணவர் ஆண்டனி. பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.இதுகுறித்து பேசுவதற்கு விஜயலட்சுமி தனது மகனுடன் ஆண்டனி வீட்டிற்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆன்டனி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயலட்சுமியின் மகன் சவுந்தர்ராஜனை குத்த முயன்றார். அப்போது விஜயலட்சுமி தடுக்க முயன்றபோது அவரது வலது கையில் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த விஜயலட்சுமியை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விஜயலட்சுமி பீளமேடு போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து ஆண்டனி மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர்.
    • காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கோவிலில் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பக நல அலுவலர் தனபாக்கியம், சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். சிறுமியை கடலூர் காப்பக அலுவலகத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு தனது மகளை கண்டுப்பிடித்து தரக்கோரி பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது அங்கு இருந்த போலீசார் பொதுமக்கள், உறவினர்கள் அவரை மீட்டனர். இதையடுத்து காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டு முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தற்போது சிறுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • முன்னாள் காதலனுடன் இளம் பெண் ஓட்டம் பிடித்தார்

    திருச்சி:

    திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியை சேர்ந்த வாலிபருக்கு 25 வயதில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மனைவி தனது குழந்தைகளுடன் திடீரென்று மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் கணவர் தேடிபார்த்தும் எங்கும் காணவில்லை . இது குறித்து அந்த பெண்ணின் தாய் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் திருமணத்திற்கு முன்பு ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், தற்பொழுது அவருடன் மாயமாகிவிட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இரண்டு குழந்தைகளின் தாய்,கணவனை தவிக்க விட்டு காதலுடன் ஒடிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.





    • 3 குழந்தைகளுடன் கணவர் தவிப்பு
    • போலீசில் புகார்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள செங்க–னம் பகுதியைச் சேர்ந்த–வர் கந் தன் மனைவி மங்கை–யர்க்க–ரசி (வயது 36) (இருவ–ரின் பெயர்களும் மாற்றப்பட் டுள்ளன). இந்த தம்பதிய–ருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இந்த நிலையில் மங்கை–யர்க்கரசிக்கு தைராய்டு பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு அவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வழக்கம் போல் கடந்த 24-ந்தேதி துறையூர் மருத்துவமனைக்கு செல்வதாக புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கணவர் கந்தன் மனைவியை பல் வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.

    இருந்தபோதிலும் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கி–டையே கடந்த மூன்று மாதங் களுக்கு முன்பு மங்கை–யர்க்கரசி இதேபோன்று திடீரென மாயமாகி உள் ளார். பின்னர் 3 நாட்கள் கழித்து வீடு திரும்பினார். அதேபோன்று வீட்டிற்கு வந்து விடுவார் என கந்தன் எண்ணியிருந்தார்.ஆனால் தற்போது 15 நாட்களுக்கு மேல் ஆகியும் மனைவி வீடு திரும்பாததால் ஜம்புநாதபுரம் போலீசில் கந்தன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தினர். இதில் மாயமான மங்கையர்க்கரசி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரு–கேயுள்ள மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்த வீரா (21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு இருப்பது தெரிய–வந்தது.இதில் மீண்டும் அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு அவர் ஓட்டம் பிடித்து இருக்கலாம் சந்தே–கிக்கப்படுகிறது. மேலும் இருவரின் செல்போன்க–ளும் சுவிட்ச் ஆப் செய் யப்பட்டுள்ளதால் போலீ–சாருக்கு சந்தேகம் வலுத் துள்ளது. மூன்று குழந்தை–களின் தாயான 36 வயது பெண்மணி 21 வயது வாலி–பருடன் ஓட்டம் பிடித் துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப–டுத்தியுள்ளது.

    • சுவர் ஏறி குதித்து ஓட்டம்
    • வழக்கு பதிந்து தேடி வரும் போலீசார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கரடிகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் ஞானசுந்தர்(வயது 24). மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த மாதம் ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மூலம் சிகிச்சைக்காக விளாங்குடி வேலா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் ஞானசுந்தர் நேற்று முன்தினம் வேலா கருணை இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பித்து சென்றுவிட்டாராம். இதுகுறித்து விடுதி காப்பாளர் கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தாரமங்கலம் அருகி லுள்ள கருக்கல்வாடி கிரா மம், எருமைக்காரன் வளவு பகுதியில் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு சின்ன மாமனாருடன் பெண் ஓட்டம்.
    • தகவல் அறிந்து வந்த சின்னம்மாள் முத்துசாமி மீது தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள கருக்கல்வாடி கிரா மம், எருமைக்காரன் வளவு பகுதியைசேர்ந்த பழனிசாமி முத்துசாமி (வயது 33) நெசவு தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த அண்ணன் மருமகள் உறவு முறை கொண்ட சுரேஷ்குமாரின் மனைவி கோமதி (27) என்பவருடன் கள்ள தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 10-ந்தேதி முத்துசாமியும், கோமதியும் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது, இதுபற்றி கோமதியின் மாமியார் சுந்தராம்பாள் பாணா புரத்தில் உள்ள கோமதியின் தாய் சின்னம்மாளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த சின்னம்மாள் முத்துசாமி மீது தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோமதிக்கு 2 குழந்தை கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 குழந்தைகளை தவிக்க விட்டு அவர் ஓடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்றார்.
    • ஆசாமிகள் லாட்டரி சீட்டுகளை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்றார்.

    அப்போது அப்பகுதியில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்த 2 ஆசாமிகள் லாட்டரி சீட்டுகளை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    லாட்டரி சீட்டுகளை கைப்பற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம், தப்பி ஓடிய அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ரவி (வயது 52), மல்லேஷ் (60) ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    இதே போல ராயக்கோட்டை பகுதியில் போலீசாரைக்கண்டதும் லாட்டரி சீட்டுகளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்த அம்மா பூங்கா பகுதியை சேர்ந்த முத்து (45), கெலமங்கலம் பகுதியில் போலீசாரை கண்டதும் லாட்டரி சீட்டுகளை வீசிவிட்டு ஓட்டம் பிடித்த ஆஞ்சநேயர்கோவில் பகுதியை சேர்ந்த விஜி ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • புதுப்பெண் கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார்
    • கணவர் வெளிநாட்டில் ேவலை பார்க்கிறார்

    திருச்சி:

    சமயபுரம் அருகேயுள்ள சிறுகனூர் பகுதியில் 8 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். சிறுகனூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வர்ஷினி (வயது19). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    பின்னர் வேலை நிமித்தமாக பெரியசாமி அரபு நாட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் தாய் வீடு திரும்பிய வர்ஷினி வீட்டில் இருந்து மாயமானார். அவர் சங்கர் என்ற வாலிபருடன் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வர்ஷினியின் தாய் வினோதினி சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
    • இதை பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதை பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    மாரத்தான் ஓட்டம் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி பள்ளி சாலை ,திருவள்ளூர் சாலை ,பழைய தேசிய நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை அடைந்தது. இதில் பரமத்திவேலூர் உட்கோட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், பரமத்தி, நல்லூர், வேலகவுண்டன்பட்டி ஆகிய 5 காவல் நிலையங்களை சேர்ந்த காவலர்கள், பரமத்தி வேலூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், செந்தில்வேல் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75- வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் 6.8.2022 தொடங்கி 12.8.2022 வரை நடைபெற்று வருகின்றது.
    • அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75- வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் 6.8.2022 தொடங்கி 12.8.2022 வரை நடைபெற்று வருகின்றது.

    அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி மாணவிகள் மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் அமுதப்பெருவிழா மற்றும் அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சி முகாமில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினிமராத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மல்லிகா, நாமக்கல் நகராட்சித்தலைவர் கலாநிதி முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமையில் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனர். இந்த பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் நாமக்கல் உழவர் சந்தை, ஆஞ்சிநேயர் கோவில், சேலம் ரோடு, திருச்செங்கோடு சாலை, நாமக்கல் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் குளக்கரைத்திடல் வந்தடைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பால்கிரேஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் அம்பிகா உள்பட கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதனை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர்.
    • அகஸ்தியன் பள்ளி உப்புசத்திய கிரக நினைவு ஸ்தூபியில் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதனை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர்.

    அதன்படி வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன் பள்ளி உப்புசத்திய கிரக

    நினைவு ஸ்தூபியில் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார். கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் வரவேற்றார்.

    இந்த ஜோதி ஓட்டமானது சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் தொடங்கி தலைஞாயிறு, கீவளுர், வேளாங்கண்ணி வழியாக நாகை சென்றடைகிறது. தலைஞாயிறுக்கு வந்தபோது பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா ,நகரமன்ற தலைவர் புகழேந்தி, துணை தலைவர் மங்களநாயகி, நகர மன்ற ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம், தாசில்தார் ரவிச்சந்திரன்ரூ, பேராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ்செல்வி, துணைத்தலைவர் கதிரவன் , செஸ் விளையாட்டு வீரர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் , வணிகர்கள், சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ×