search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே காதலனுடன் ஓட்டம் பிடித்த சிறுமி மீட்பு
    X

    பண்ருட்டி அருகே காதலனுடன் ஓட்டம் பிடித்த சிறுமி மீட்பு

    • ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர்.
    • காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கோவிலில் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பக நல அலுவலர் தனபாக்கியம், சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். சிறுமியை கடலூர் காப்பக அலுவலகத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு தனது மகளை கண்டுப்பிடித்து தரக்கோரி பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது அங்கு இருந்த போலீசார் பொதுமக்கள், உறவினர்கள் அவரை மீட்டனர். இதையடுத்து காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டு முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தற்போது சிறுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×