search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி மீட்பு"

    • பெற்றோர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் பூபதி, கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி புத்திப்பிரியா என்ற மனைவியும், 2 வயதில் மிதுளாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

    நேற்று மிதுளாஸ்ரீ வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அருகில் சில்வர் தண்ணீர் பாத்திரம் இருந்தது. இந்த சில்வர் பாத்திரத்திற்குள் சிறுமி இறங்கினாள். அப்போது எதிர்பாராத விதமாக மிதுளாஸ்ரீ உள்ளே மாட்டிக் கொண்டார்.

    பாத்திரத்தில் இருந்து வெளியே வர முடியாமல் கதறி அழுதது. அழுகுரல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், குழந்தை சில்வர் பாத்திரத்திற்குள் மாட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் குழந்தையை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து பெற்றோர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில், நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாத்திரத்தில் மாட்டியிருந்த குழந்தையின் தலையை வெளியே எடுக்க முயன்றனர்.

    பின்னர் கட்டிங் எந்திரத்தைகொண்டு பாத்திரத்தை இரண்டாக வெட்டி பிளந்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

    வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிறுமியை விசாரித்தபோது, தன்னை அடைத்து வைத்திருந்த வீட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் இருந்ததாக தெரிவித்தார்.
    • ரெஜி பத்தனம்திட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஆயூர் பயப்பள்ளியை சேர்ந்தவர் ரெஜி ஜான். இவரது மகள் அபிகேல் சாரா (வயது 6). கடந்த 27-ந்தேதி மாலை டியூசன் வகுப்புக்கு சென்றபோது காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டார்.

    கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், சிறுமியை விடுவிக்க கடத்தல் கும்பலினர் ரூ.15 லட்சம் வரை பேரம் பேசினர். போனில் பணம் கேட்டு மிரட்டியது பெண் என்பதால் போலீசார் அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், மறுநாள் கொல்லம் ஆசிராமம் பகுதியில் உள்ள மைதானம் அருகே சிறுமி தனித்து நிற்பதாக தகவல் கிடைத்தது. அவரை மீட்ட போலீசார், சிறுமியிடம் விசாரித்தபோது, தன்னை இங்கு ஒரு பெண் விட்டுச்சென்றதாகவும், உனது தந்தை வந்து விடுவார் என அவர் கூறிச்சென்றதாகவும் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து கடத்தல் கும்பலை பிடிக்க கேரள போலீஸ் டி.ஐ.ஜி. நிசாந்தினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமி அபிகேல் சாராவிடம் விசாரித்தபோது, தன்னை அடைத்து வைத்திருந்த வீட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் இருந்ததாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் 3 சந்தேக நபர்களின் ஓவியங்களை போலீசார் வெளியிட்டனர். அவர்களது நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் 94979 80211 என்ற எண்ணுக்கு தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தினர்.

    இந்த சூழலில் திடீர் திருப்பமாக சிறுமி அபிகேல் சாராவின் தந்தை ரெஜியை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அவரது செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ரெஜி, பத்தனம்திட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். மேலும் ஐக்கிய செவிலியர் சங்கத்தின் பத்தனம்திட்டா மாவட்ட பிரிவின் தலைவராகவும் உள்ளார்.

    எனவே செவிலியர்கள் ஆட்சேர்ப்பு மற்றும் செவிலியர் படிப்புகளுக்கான சேர்க்கை தொடர்பான நிதி பரிவர்த்தனைகள் காரணமாக சிறுமி கடத்தப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக ரெஜி கூறுகையில், போலீசார் என்னிடம் விசாரித்தனர். ஆனால் செல்போனை பறிமுதல் செய்யவில்லை. வீட்டில் குழந்தைகள் கேம் விளையாடுவதை தடுக்க வைத்திருந்த போனை அவர்கள் கைப்பற்றி உள்ளனர் என்றார்.

    • குழந்தைகள் காணாமல்போன வழக்குகளை தீர்ப்பதில் கேரள போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது
    • குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் மிகுந்த கவலை அளிக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூரை சேர்ந்தவர் ரெஜி. இவரது மகள் அபிகேல் சாரா ரெஜினா (வயது 6). இவர் தனது 8 வயது அண்ணன் ஜோனதானுடன் டியூசன் வகுப்புக்கு சென்றபோது, நேற்று முன்தினம் காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டார்.

    கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சிறுமியை விடுவிக்க ரூ.15 லட்சம் கேட்டு கடத்தல் கும்பல் மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் சிறுவன் ஜோனா தெரிவித்த அடையாளங்களை வைத்து கடத்தல் நபரின் படத்தை வரைந்து அதனை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    இந்த சூழலில் நேற்று மதியம் கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் கடத்தப்பட்ட சிறுமி அபிகேல் சாரா ரெஜினா தனித்து நின்றார். இதனை பார்த்த கல்லூரி மாணவ-மாணவிகள் சிலர், சிறுமியிடம் பேச்சு கொடுத்தபோது, அவர் தான் கடத்தப்பட்ட அபிகேல் சாரா ரெஜினா என தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    முன்னதாக போலீசார் அவரை விசாரித்தபோது, இரவில் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் தன்னை ஒரு பெரிய வீட்டில் தங்க வைத்ததாகவும், நேற்று பகல் கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் தன்னுடன் வந்த பெண் இறக்கி விட்டதாகவும், அந்த பெண் மீண்டும் வருவதாக கூறிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

    சிறுமியை மீட்ட மாணவ-மாணவிகள் கூறுகையில், நாங்கள் தேர்வு எழுதி விட்டு வரும்போது சிறுமி தவிக்கும் நிலையை கண்டோம். அவள் சோர்வாக இருந்ததால் பிஸ்கட் மற்றும் தண்ணீர் கொடுத்தோம். அப்போது அந்த பகுதியில் இருந்து மஞ்சள் சுடிதார் அணிந்து வெள்ளை சால்வையால் முகத்தை மூடிய ஒரு பெண் புறப்பட்டுச் சென்றதை பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட சிறுமி தாயுடன் இருக்கும் காட்சி.

    மீட்கப்பட்ட சிறுமி தாயுடன் இருக்கும் காட்சி.

    எனவே அவர் தான் சிறுமி அபிகேல் சாரா ரெஜினாவை அங்கு விட்டுச்சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவரை டி.ஐ.ஜி. நிஷாந்தினி தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்டவர் சீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்ட ப்பட்டவர் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரை தேடி வீட்டுக்குச் சென்றபோது அங்கு அவர் இல்லை. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண், அவரது உறவுக்காரர் என்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த சூழலில், கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை 62 குழந்தைகள் மாயமாகி உள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இவர்களில் 43 பேர் சிறுவர்கள், 19 பேர் சிறுமிகள். குழந்தைகள் காணாமல்போன வழக்குகளை தீர்ப்பதில் கேரள போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது. இவற்றில் சில வழக்குகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவற்றை முடித்து வைக்க கோர்ட்டுகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த சம்பவம் குறித்து கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் கூறுகையில், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் மிகுந்த கவலை அளிக்கிறது. பெரும்பாலான சம்பவங்களில் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், போலீசார் இன்னும் சில வழக்குகளை கண்டுபிடிக்கவில்லை. ஓயூரை சேர்ந்த சிறுமி அபிகேல் சாரா ரெஜினா கடத்தல் விவகாரத்தில் விசாரணை நடத்தியது போல் அனைத்து வழக்குகளிலும் போலீசார் செயல்பட வேண்டும் என்றார்.

    கடந்த 2005-ம் ஆண்டு மே மாதம் ஆலப்புழாவில் 7 வயது சிறுவன் ராகுல் கிரிக்கெட் விளையாடியபோது கடத்தப்பட்டுள்ளான். இதனை தற்போது நினைவுகூர்ந்த அவனது தாயார் மினி ராஜூ, சிறுமி அபிகேல் சாரா ரெஜினா மீட்கப்பட்டது சந்தோஷம் தருகிறது. குறைந்தபட்சம் ஒரு தாயின் கண்ணீராவது துடைக்கப்பட்டிருப்பதில் நான் நிம்மதி அடைகிறேன். என் மகனுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் வரக்கூடாது. அவன் விஷயத்தில், தற்போது செயல்பட்டதுபோல் அனைவரும் அர்ப்பணிப்பு காட்டியிருந்தால், ராகுலை கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால் அவனது வழக்கின் விசாரணை உள்ளூர் அளவிலேயே முடிந்து விட்டது என்றார். இருப்பினும் தன் மகன் உயிருடன் இருப்பார். ஒரு நாள் திரும்பி வருவார் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

    • இவர் அதே கிராமத்தில் உள்ள 14 வயது சிறுமியிடம் வீட்டின் வாசலை ஏன் சுத்தம் செய்யவில்லை என்று கேட்டுள்ளார்.
    • சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் முருகன் (வயது 48). கூலித் தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் உள்ள 14 வயது சிறுமியிடம் வீட்டின் வாசலை ஏன் சுத்தம் செய்யவில்லை என்று கேட்டுள்ளார். மேலும், வீட்டின் வாசலை சுத்தம் செய்வது எப்படி என்று கற்றுத் தருவதாக, சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தினார். சுதாரித்துக் கொண்ட சிறுமி கூச்சலிட்டார்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வீட்டிற்குள் சென்று சிறுமியை மீட்டனர். கூலித் தொழிலாளி முருகனை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஓப்படைத்தனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அது தொடர்பாக போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்
    • வாலிபரை எச்சரித்து அனுப்பினர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 17-ந் தேதி மதரஸாபள்ளியில் உள்ள டியூஷனுக்கு சென் றார். இரவாகியும் மகள் வீட்டிற்கு வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் டியூஷன் சென்டரில் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு சிறுமி வரவில்லை என்று தெரியவந்தது.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஆந்திர மாநிலம், பலமநேரை சேர்ந்த ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரி யவந்தது.

    இதையடுத்து, போலீசார் இருவரையும் நேற்று பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

    இதில், இருவரும் காத லிப்பதாக தெரிவித்தனர். பெண்ணிற்கு திருமண வயது பூர்த்தியாகாத நிலை யில் போலீசார் சிறுமியை வேலூரில் உள்ள காப்பகத் தில் ஒப்படைத்தனர். சிறு மியை அழைத்து சென்ற வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • சிறுமியை விற்பனை செய்ய முயன்ற பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • சிறுமியை விலைக்கு வாங்க முயன்ற ஆந்திர நபர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தாம்பரத்தை அடுத்த படப்பை அருகே உள்ளது கரசங்கல் கிராமம். இங்கு பழங்குடியின பெண் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 17 வயது சிறுமி 7-வது வகுப்புடன் படிப்பை நிறுத்தி இருக்கிறார். இதன் பிறகு பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் சிறுமியோ நன்றாக படிப்பதற்கு ஆசைப்பட்டுள்ளார். இது பற்றி தனது பெற்றோரிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

    இந்த நிலையில் பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமியை ஆந்திராவை சேர்ந்த ஒருவருக்கு ரூ.1½ லட்சத்துக்கு பெற்றோர் விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர். திருமணம் என்ற பெயரில் ஆந்திராவை சேர்ந்த பணக்காரர் ஒருவருக்கு மகளை விலை பேசியதுடன் அதற்கான நாளையும் அவர்கள் குறித்தனர். இதற்காக சிறுமியை வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்திருந்தனர். இதனால் பதற்றமடைந்த சிறுமி, பெற்றோரின் பிடியில் இருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று திட்டம் போட்டார்.

    இதையடுத்து வீட்டில் இருந்த செல்போன் மூலமாக யாருக்கும் தெரியாமல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உஷாரான மணிமங்கலம் போலீசார் உடனடியாக கரசங்கல் கிராமத்தில் உள்ள சிறுமியின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். போலீசாருடன் குழந்தைகள் நல அலுவலர்களும் சென்று விசாரித்தனர். போலீசார் மற்றும் அதிகாரிகளை பார்த்ததும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிரண்டு போனார்கள். அவர்கள் எதுவும் தெரியாதது போல முதலில் நாடகமாடினர். இதை தொடர்ந்து போலீசார் பெற்றோரின் பிடியில் இருந்த சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போதுதான் சிறுமியை ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை செய்ய பெற்றோர் முயற்சி செய்ததும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வசதிபடைத்த வாலிபர் ஒருவர் சிறுமியை வாங்கிச் செல்வதற்கு திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிறுமியின் மனதில் என்ன உள்ளது? என்பதை அறிவதற்காக விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது சிறுமி பெற்றோர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்தார். என்னை படிக்க விடாமல் பெற்றோர் தடுக்கிறார்கள். யார் என்றே தெரியாத ஆந்திராவை சேர்ந்த நபருடன்தான் இனி இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

    தற்போதைய நிலையில் பெற்றோருடன் இருக்க விருப்பம் இல்லை எனவும் சிறுமி பரபரப்பான வாக்குமூலத்தை அளித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட போலீசார் சிறுமியை காஞ்சிபுரத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். அங்கிருந்தபடியே சிறுமி படிக்க விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை விற்பனை செய்ய முயன்ற பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமியை விலைக்கு வாங்க முயன்ற ஆந்திர நபர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர்.
    • காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கோவிலில் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பக நல அலுவலர் தனபாக்கியம், சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். சிறுமியை கடலூர் காப்பக அலுவலகத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு தனது மகளை கண்டுப்பிடித்து தரக்கோரி பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது அங்கு இருந்த போலீசார் பொதுமக்கள், உறவினர்கள் அவரை மீட்டனர். இதையடுத்து காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டு முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தற்போது சிறுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காப்பகத்தில் ஒப்படைத்தனர்
    • பெற்றோர், ஊர் விவரம் தெரியவில்லை

    கலவை:

    கலவையை அடுத்த பாத்திக்காரன் பட்டி கிராமம் அருகே வழி தெரியாமல் சிறுமி தவித்துக்கொண்டிருந்தாள். பொது மக்கள் அளித்த தகவலின்பேரில் சிறுமியை திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மீட்டு வேலூர் அல்லாபுரம் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்ல காப்பகத்தில் ஒப்படைத் தார்.

    அந்த சிறுமி தனது பெயர் ரேணுகா என கூறினாள். ஆனால் பெற்றோர், ஊர் விவரம் தெரியவில்லை.

    • போலீசாரின் தீவிர விசாரணையில் குழந்தையை அழைத்து சென்றது சில்லாம்பட்டியை சேர்ந்த குமார்-மகேஷ்வரி தம்பதி என தெரிய வந்தது.
    • வீட்டுக்கு அழைத்து சென்ற ஜனனிக்கு அவர்கள் சாப்பாடு கொடுத்து பின்னர் பாட்டியிடம் ஒப்படைக்க இருந்தனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் அதே பகுதியில் கோழிக்கறி கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 4 வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை உள்ளது. இவள் வீட்டின் அருகே உள்ள மழலையர் பள்ளியில் படித்து வருகிறாள்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் தீனாவிலக்கில் உள்ள பாட்டி வீரம்மாள் வீட்டுக்கு ஜனனியை பெற்றோர் அழைத்து சென்றனர். அதன் அருகிலேயே பார்த்தசாரதிக்கு சொந்தமான கோழிக்கறி கடை உள்ளது. பிற்பகல் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்து ஒரு தம்பதியினர் கறி வாங்கினர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஜனனியிடம் அவர்கள் பேச்சு கொடுத்து எங்கள் வீட்டுக்கு வருகிறாயா? என அழைத்துள்ளனர். சிறுமியும் வருவதாக தலையசைத்துள்ளார்.

    இதனையடுத்து ஜனனியை அந்த தம்பதி மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றனர். இதை அறியாத பெற்றோர் மகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் அழைத்து சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி, தனது மகள் கடத்தப்பட்டிருக்கலாம் என நினைத்து உடனடியாக உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்தனர். டி.எஸ்.பி. நல்லு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். மேலும் மதுரை-உசிலம்பட்டி-தேனி ரோட்டில் உள்ள சோதனைச்சாவடிகள் உஷார்படுத்தப்பட்டது.

    குழந்தை கடத்தல் சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். புகார் கொடுத்த சில மணி நேரத்தில் உசிலம்பட்டி போலீஸ் நிலையமே பரபரப்பானது. குழந்தையை மீட்க போலீசார் அனைத்து பகுதிகளுக்கும் ரோந்து சென்றனர்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் குழந்தையை அழைத்து சென்றது சில்லாம்பட்டியை சேர்ந்த குமார்-மகேஷ்வரி தம்பதி என தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு தம்பதியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    அங்கு அவரிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையின் பாட்டி வீரம்மாளும் குழந்தையை அழைத்து சென்ற தம்பதியும் நன்கு பழக்கமானவர்கள். நேற்று கறிக்கடைக்கு வந்த மகேஷ்வரி வீரம்மாளின் பேத்தியை பார்த்ததும் ஆசையுடன் கொஞ்சியுள்ளார். அப்போது வீட்டுக்கு வருகிறாயா என கேட்க, குழந்தையும் அவருடன் சென்றுள்ளது.

    ஆனால் இந்த தகவலை குமார்-மகேஷ்வரி தம்பதியினர் பாட்டி, பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இதனால்தான் குழந்தை கடத்தப்பட்டதாக நினைத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    வீட்டுக்கு அழைத்து சென்ற ஜனனிக்கு அவர்கள் சாப்பாடு கொடுத்து பின்னர் பாட்டியிடம் ஒப்படைக்க இருந்தனர். அதற்குள் காலதாமதமானதால் இந்த விவகாரம் போலீஸ் வரை சென்று உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த தம்பதியை எச்சரித்து அனுப்பினர்.

    • நடுவழியில் தவித்த சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
    • எங்கே செல்வது என்று தெரியாமல் வேப்பூர் கூட்டு சாலையில் அழுது கொண்டு இருந்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மேற்கு மாவட்டம் வேப்பூர் கூட்டு சாலையில் தனிமையில் அழுது கொண்டிருந்த 12 வயது சிறுமியை வேப்பூர் போலீஸ் ஏட்டு தென் எழிலன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திராவிடம் ஒப்படைத்தார். இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா சிறுமியிடம் விசாரணை செய்தபோது, சிறுமி திட்டக்குடி வட்டம் கல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிழக்கு தெருவில் வசித்து வரும் நல்லதம்பி -சங்கீதாவின் தம்பதி மகள் நவநீதா என்றும், அவர் மா.புடையூர் சந்ததோப்பு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார் என தெரிவித்தார். சிறுமியின் தந்தை நல்லதம்பி சென்னையில் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார் என்றும், சிறுமி நவநீதாவின் பாட்டி பவுனு என்பவர், தனது உறவுக்காரர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சிறுமியின் பாட்டி பவுனு, சிறுமியின் அத்தை உமா, மற்றும் சிறுமியின் தம்பி குரல்எழிலன் ஆகிய 3 பேரும் கல்லூர் கிராமத்திலிருந்து சென்னைக்கு சென்றுள்ளனர். இதனால் நானும் சென்னைக்கு வருகிறேன் என்று சிறுமி நவநீதா அழுதுள்ளதாகவும், நீ வர வேண்டாம் அம்மாவுடன் வீட்டில் இரு, என்று கூறிவிட்டு,  சென்றுவிட்டனர்.

    மேலும் சிறுமி நவநீதாவின் தாய் சங்கீதா மாடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சிறுமி நவநீதா, தனது பாட்டியிடம் சென்னைக்கு செல்லும் எண்ணத்தில் கல்லூர் கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேப்பூர் கூட்டு சாலை வரையில் நடந்தே வந்ததாகவும் கூறியுள்ளார். பிறகு அங்கிருந்து எங்கே செல்வது என்று தெரியாமல் வேப்பூர் கூட்டு சாலையில் அழுது கொண்டு இருந்துள்ளார். அப்போது வேப்பூர் காவல் நிலையத்திலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தென்எழிலன் என்பவர் சிறுமி நவநீதாவை அழைத்து வந்து வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திராவிடம் ஒப்படைத்துள்ளார்.

    ×