search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டை சுத்தம் செய்ய கற்று கொடுப்பதாக கூறி 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி கைது
    X

    வீட்டை சுத்தம் செய்ய கற்று கொடுப்பதாக கூறி 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி கைது

    • இவர் அதே கிராமத்தில் உள்ள 14 வயது சிறுமியிடம் வீட்டின் வாசலை ஏன் சுத்தம் செய்யவில்லை என்று கேட்டுள்ளார்.
    • சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் முருகன் (வயது 48). கூலித் தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் உள்ள 14 வயது சிறுமியிடம் வீட்டின் வாசலை ஏன் சுத்தம் செய்யவில்லை என்று கேட்டுள்ளார். மேலும், வீட்டின் வாசலை சுத்தம் செய்வது எப்படி என்று கற்றுத் தருவதாக, சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தினார். சுதாரித்துக் கொண்ட சிறுமி கூச்சலிட்டார்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வீட்டிற்குள் சென்று சிறுமியை மீட்டனர். கூலித் தொழிலாளி முருகனை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஓப்படைத்தனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அது தொடர்பாக போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×