search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl kidnapping"

    • குழந்தைகள் காணாமல்போன வழக்குகளை தீர்ப்பதில் கேரள போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது
    • குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் மிகுந்த கவலை அளிக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூரை சேர்ந்தவர் ரெஜி. இவரது மகள் அபிகேல் சாரா ரெஜினா (வயது 6). இவர் தனது 8 வயது அண்ணன் ஜோனதானுடன் டியூசன் வகுப்புக்கு சென்றபோது, நேற்று முன்தினம் காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டார்.

    கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சிறுமியை விடுவிக்க ரூ.15 லட்சம் கேட்டு கடத்தல் கும்பல் மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் சிறுவன் ஜோனா தெரிவித்த அடையாளங்களை வைத்து கடத்தல் நபரின் படத்தை வரைந்து அதனை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    இந்த சூழலில் நேற்று மதியம் கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் கடத்தப்பட்ட சிறுமி அபிகேல் சாரா ரெஜினா தனித்து நின்றார். இதனை பார்த்த கல்லூரி மாணவ-மாணவிகள் சிலர், சிறுமியிடம் பேச்சு கொடுத்தபோது, அவர் தான் கடத்தப்பட்ட அபிகேல் சாரா ரெஜினா என தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    முன்னதாக போலீசார் அவரை விசாரித்தபோது, இரவில் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் தன்னை ஒரு பெரிய வீட்டில் தங்க வைத்ததாகவும், நேற்று பகல் கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் தன்னுடன் வந்த பெண் இறக்கி விட்டதாகவும், அந்த பெண் மீண்டும் வருவதாக கூறிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

    சிறுமியை மீட்ட மாணவ-மாணவிகள் கூறுகையில், நாங்கள் தேர்வு எழுதி விட்டு வரும்போது சிறுமி தவிக்கும் நிலையை கண்டோம். அவள் சோர்வாக இருந்ததால் பிஸ்கட் மற்றும் தண்ணீர் கொடுத்தோம். அப்போது அந்த பகுதியில் இருந்து மஞ்சள் சுடிதார் அணிந்து வெள்ளை சால்வையால் முகத்தை மூடிய ஒரு பெண் புறப்பட்டுச் சென்றதை பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட சிறுமி தாயுடன் இருக்கும் காட்சி.

    மீட்கப்பட்ட சிறுமி தாயுடன் இருக்கும் காட்சி.

    எனவே அவர் தான் சிறுமி அபிகேல் சாரா ரெஜினாவை அங்கு விட்டுச்சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவரை டி.ஐ.ஜி. நிஷாந்தினி தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்டவர் சீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்ட ப்பட்டவர் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரை தேடி வீட்டுக்குச் சென்றபோது அங்கு அவர் இல்லை. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண், அவரது உறவுக்காரர் என்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த சூழலில், கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை 62 குழந்தைகள் மாயமாகி உள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இவர்களில் 43 பேர் சிறுவர்கள், 19 பேர் சிறுமிகள். குழந்தைகள் காணாமல்போன வழக்குகளை தீர்ப்பதில் கேரள போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது. இவற்றில் சில வழக்குகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவற்றை முடித்து வைக்க கோர்ட்டுகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த சம்பவம் குறித்து கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் கூறுகையில், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் மிகுந்த கவலை அளிக்கிறது. பெரும்பாலான சம்பவங்களில் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், போலீசார் இன்னும் சில வழக்குகளை கண்டுபிடிக்கவில்லை. ஓயூரை சேர்ந்த சிறுமி அபிகேல் சாரா ரெஜினா கடத்தல் விவகாரத்தில் விசாரணை நடத்தியது போல் அனைத்து வழக்குகளிலும் போலீசார் செயல்பட வேண்டும் என்றார்.

    கடந்த 2005-ம் ஆண்டு மே மாதம் ஆலப்புழாவில் 7 வயது சிறுவன் ராகுல் கிரிக்கெட் விளையாடியபோது கடத்தப்பட்டுள்ளான். இதனை தற்போது நினைவுகூர்ந்த அவனது தாயார் மினி ராஜூ, சிறுமி அபிகேல் சாரா ரெஜினா மீட்கப்பட்டது சந்தோஷம் தருகிறது. குறைந்தபட்சம் ஒரு தாயின் கண்ணீராவது துடைக்கப்பட்டிருப்பதில் நான் நிம்மதி அடைகிறேன். என் மகனுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் வரக்கூடாது. அவன் விஷயத்தில், தற்போது செயல்பட்டதுபோல் அனைவரும் அர்ப்பணிப்பு காட்டியிருந்தால், ராகுலை கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால் அவனது வழக்கின் விசாரணை உள்ளூர் அளவிலேயே முடிந்து விட்டது என்றார். இருப்பினும் தன் மகன் உயிருடன் இருப்பார். ஒரு நாள் திரும்பி வருவார் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

    • டியூஷன் வகுப்புக்கு சென்ற சிறுமி சாராவை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது.
    • சிறுமியின் தாயாருக்கு போன் செய்த கடத்தல்காரர்கள் ரூ.10 லட்சம் தரும்படி மிரட்டினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஒயூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அபிஹல் சாரா ரிஜி. இந்தச் சிறுமி நேற்று மாலை 5 மணியளவில் தனது சகோதரனுடன் வீட்டில் இருந்து டியூஷன் வகுப்புக்கு நடந்து சென்றபோது, இருவரையும் பின்தொடர்ந்து சென்ற கும்பல் சிறுமி சாராவை காரில் கடத்திச் சென்றது.

    அதன்பின், சிறுமியின் தாயாருக்கு போன் செய்த அந்த கும்பல் சிறுமியை விடுவிக்க ரூ.10 லட்சம் கொடுக்கும்படி மிரட்டியுள்ளது. மேலும், போலீசாருக்கு தகவல் கொடுத்தால் விபரீதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை மீட்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    சி.சி.டி.வி. கேமரா பதிவு உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்த போலீசார், சிறுமி மருதனப்பள்ளி பகுதியில் வெள்ளை நிற காரில் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.


    சிறுமியின் சகோதரன் மற்றும் போன் கொடுத்த கடைக்காரர்கள் உள்ளிட்டோர் கூறிய தகவல்களின் அடிப்படையில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு நபரின் வரைபடத்தை போலீசார்வரைந்தனர். அந்த வரைபடம் கேரளாவில் உள்ள அனைத்து போலீஸ நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டள்ளது.

    இந்நிலையில், சுமார் 20 மணி நேரத்துக்குப் பிறகு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். இன்று மதியம் கொல்லத்தில் உள்ள பொது மைதானத்தில் சிறுமி தனியாக அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு போலீசார் விரைந்து சென்று தனியாக இருந்த சிறுமியை மீட்டனர். கடத்தல்காரர்கள் சிறுமியை அந்த இடத்தில் விட்டுச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடத்தப்பட்ட சிறுமியை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • வரைபடம் அனைத்து போலீஸ நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஓயூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜி. இவரது மனைவி சிஜி. இவர்களுக்கு ஜோனதன்(வயது9) என்ற மகனும், அபிகேல் சாரா(6) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

    தினமும் மாலை பள்ளிக்கு சென்று வந்ததும், தங்களின் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டுக்கு டியூசனுக்கு செல்வார்கள். அதேபோல் நேற்று மாலை சிறுவனும், சிறுமியும் சென்றனர். அப்போது காரில் வந்த ஒரு கும்பல், சிறுமி சாராவை கடத்திச் சென்றது.

    அநத கும்பலிடம் சிக்காமல் சிறுவன் ஜோனதன் தப்பி வீட்டுக்கு ஓடிவந்து, நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்தான். சிறுமியை மர்ம நபர்கள் காரில் கடத்திச்சென்ற சம்பவம் குறித்து பூயப்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கடத்தப்பட்ட சிறுமியை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அது மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சிறுமி கடத்தல் தொடர்பாக தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்ட னர்.

    இந்நிலையில் சிறுமியின் தாய்க்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய பெண், உங்களின் மகள் எங்களிடம் பத்திரமாக இருக்கிறார். அவரை மீண்டும் உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ.5லட்சம் தரவேண்டும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    அந்த போனின் எண்ணை வைத்து உரிமையாளரின் முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றனர். அப்போது அந்த போன், பாரப்பள்ளி குளமடையில் உள்ள கடைக்காரரின் போன் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்த போது ஆட்டோ ரிக்சாவில் வந்த இருவர், தங்களது போனை இரவல் வாங்கி பேசிவிட்டு திரும்பி தந்துவிட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் அவர்கள் கடையில் இருந்து சற்று தூரமாகச்சென்று பேசியதால் யாரிடம் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என தெரிவித்தனர். கடத்தல்காரர்கள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சம்பந்தம் இல்லாத கடைககாரர்களிடம் போனை வாங்கி பேசி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    சிறுமியின் சகோதரனிடம் நடத்திய விசாரணையில் கடத்தல் கும்பலில் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் சிறுமியை கடத்த பயன்படுத்திய கார் அடையாளம் காணப்பட்டது.

    ஆனால் அதில் போலி பதிவு எண்ணை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனால் அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது.


    இந்நிலையில் நேற்று இரவு மேலும் ஒரு போன் அழைப்பு கடத்தல்காரர்களிடம் இருந்து சிறுமியின் தாய்க்கு வந்தது. அப்போது சிறுமியை ஒப்படைக்க ரூ.10லட்சம் வேண்டும் என்றும், போலீசிடம் செல்லக்கூடாது எனவும் கூறியுள்ளனர். அப்போதும் அவர்கள் சம்பந்தம் இல்லாத ஒரு நபரிடம் போனை வாங்கி பேசியிருக்கிறார்கள்.

    கடத்தல்காரர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதால் கடத்தல்காரர்கள் கேரளாவில் இருந்து தப்பிச்செல்ல வாய்ப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் கடத்தல்காரர்கள் பற்றி அவர்கள் போன் வாங்கிய பேசிய கடைக்காரர்கள் மற்றும் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தது தெரியவந்தது. சிறுமியின் சகோதரன் மற்றும் போன் கொடுத்த கடைக்காரர்கள் உள்ளிட்டோர் கூறிய தகவல்களின் அடிப்படையில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு நபரின் வரைபடத்தை போலீசார் வரைந்தனர்.

    அந்த வரைபடம் கேரளாவில் உள்ள அனைத்து போலீஸ நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. அதனை வைத்து கடத்தல்காரர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சி.சி.டி.வி. மேராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்க்கும் போது, சிறுமி சாராவை கடத்தல்காரர்கள் திட்டமிட்டு கடத்திச்சென்றது உறுதியாகி இருக்கிறது. பிணயத்தொகையை உயர்த்தியபடி இருப்பதால் பணத்துக்காகவே சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    சிறுமியின் தந்தை ரெஜி பத்தனம்திட்டாவில் உள்ள மருத்துவமனையில் ஊழியராகவும், தாய் சிஜி கொட்டியத்தில் உள்ள மருத்துவமனையில் நர்சாகவும் பணிபுரிகின்றனர். அவர்களது குழந்தைகள் தினமும் மாலையில் டியூசனுக்கு தனியாக சென்று வருவதை நோட்டமிட்டு கடத்தல்காரர்கள் சிறுமியை கடத்தி சென்றிருக்கின்றனர்.

    சிறுவன் ஜோனதனையும் கடத்தவே கடத்தல்காரர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் அவன் அவர்களது பிடியில் சிக்காதவாறு தள்ளி நின்றதால், அவன் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பியிருக்கிறான். சிறுமி கடத்தப்பட்டு வெகுநேரம் ஆவதால், அவரை மீட்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை ரகசியமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    தஞ்சை அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற திருநங்கை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சிற்றம்பலம்:

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சி, மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி காந்திமதி.

    சம்பவத்தன்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர், காந்திமதியின் கால் வலிக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இரவு நேரம் ஆனதால், திருநங்கை காந்திமதி வீட்டிலேயே தங்கிவிட்டார். மறுநாள் அதிகாலையில் வீட்டில் தூங்கிய திருநங்கையும், காந்திமதியின் மகள் அதிர்ஷ்டமேரியும் (வயது21) காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திமதி பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் 2 பேரையும் காணவில்லை.

    இந்த நிலையில், திருநங்கை விட்டுச் சென்ற செல்போன் சிம்கார்டை பரிசோதனை செய்து பார்த்த போது திருநங்கையின் படமும் அவரது பெயர் முனியம்மா என்பதும் தெரியவந்தது. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை

     இந்த சம்பவம் குறித்து காந்திமதி திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார். திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிர்ஷ்டமேரியை கடத்தி சென்ற திருநங்கை முனியம்மாவை தேடி வருகிறார்கள்.
    காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை வீடு புகுந்து உறவினர்கள் காரில் கடத்தினர். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து அவரை மீட்டதோடு 3 பேரை கைது செய்தனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் கருப்பசாமி (வயது 21). திருமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிப்பவர் உசிலம்பட்டியை சேர்ந்த தெய்வேந்திரன் மகள் சுவாதி (20). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுவாதி, காதலனை திருமணம் செய்தார்.

    அதன் பிறகு ஊர் திரும்பிய அவர் கணவர் வீட்டில் தங்கியிருந்தார். இதனை அறிந்த சுவாதியின் சகோதரர் ரமேஷ் (24), தாய்மாமன் அசோக் (38), அவரது நண்பர் ஜெயபிரகாஷ் (39) ஆகியோர் காரில் நல்லம நாயக்கன்பட்டி வந்தனர்.

    அவர்கள் கருப்பசாமியின் வீட்டுக்குள் புகுந்து சுவாதியை இழுத்து வந்து காரில் கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பசாமியின் தாயார் முத்துலட்சுமி, கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார்.

    காரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    டி.விலக்கு பகுதியில் உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியபோது கடத்தல் கார் வந்தது. அதனை மடக்கி சுவாதியை போலீசார் மீட்டனர்.

    அவரை கடத்திய ரமேஷ், அசோக், ஜெயப்பிரகாஷ் ஆகியோரை கள்ளிக்குடி போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.

    கைதான அசோக் மதுரை ஜெய்ஹிந்துபுரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார்.
    தேனி அருகே ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவியை கடத்திசென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேனி:

    தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள்புரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் வைஷ்ணவி (வயது21). உத்தமபாளையத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் கோவிந்தம்பட்டியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் வைஷ்ணவியை அங்குள்ள தனது மற்றொரு மகள் வீட்டில் விட்டுவிட்டு பாண்டி வீட்டிற்கு வந்துவிட்டார்.

    மறுநாள் வீட்டில் இருந்த வைஷ்ணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பாண்டி உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தனது புகாரில் ஓடைப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர்தான் கடத்தி சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் கடத்தப்பட்ட மாணவியையும் அவரை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறனர்.
    திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியத்தைச் சேர்ந்தவர் மூக்குசாமி. இவருடைய மகன் கண்ணன் (வயது 21). இவர்கள் பாலமேடு முருகையா நகரில் வசித்தபோது பக்கத்து வீட்டில் வசித்த 17 வயது பெண்ணுடன், கண்ணணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை பெண்ணின் தாயார் கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த பெண் திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

    அவரை கண்ணன் கடத்திச் சென்றிருக்கலாம் என பாலமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட பெண்ணை தேடி வருகிறார்.

    மதுரை கோவில்பாப்பா குடிமுல்லைத் தெருவைச் சேர்ந்தவர் மீனா (30). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    வீட்டில் தனியாக இருந்த மீனா திடீரென்று மாயமானார். அவரை விக்கிரமங்கலம் அருகே உள்ள எழுவம்பட்டியைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் 3 பேருடன் சேர்ந்து கடத்திச் சென்றிருப்பதாக அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவி உள்பட 4 பேர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகில் உள்ள செங்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமி மகள் முத்துபிரியா (வயது16). 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து 11-ம் வகுப்பு செல்ல உள்ளார். சம்பவத்தன்று பழனிச்சாமி தனது குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டார்.

    அந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சின்னச்சாமி மகன் குமரேசன் (26) என்பவர் முத்துபிரியாவை கடத்தி சென்று விட்டார். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்குபதிவு அவர்களை தேடி வருகிறார்.

    நிலக்கோட்டை அருகில் உள்ள கே.புதூரை சேர்ந்தவர் ஜமாத். இவரது மனைவி கஜிதா (28). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஜமாத் மகாராஸ்டிராவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கஜிதா தனது குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் விசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த கஜிதாவை அவரது குழந்தைகளுடன் சேர்த்து மர்ம நபர்கள் கடத்தி சென்றுவிட்டனர். இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    ×