என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழி தவறி வந்த சிறுமி ணிமீட்பு
- காப்பகத்தில் ஒப்படைத்தனர்
- பெற்றோர், ஊர் விவரம் தெரியவில்லை
கலவை:
கலவையை அடுத்த பாத்திக்காரன் பட்டி கிராமம் அருகே வழி தெரியாமல் சிறுமி தவித்துக்கொண்டிருந்தாள். பொது மக்கள் அளித்த தகவலின்பேரில் சிறுமியை திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மீட்டு வேலூர் அல்லாபுரம் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்ல காப்பகத்தில் ஒப்படைத் தார்.
அந்த சிறுமி தனது பெயர் ரேணுகா என கூறினாள். ஆனால் பெற்றோர், ஊர் விவரம் தெரியவில்லை.
Next Story






