முன்னாள் காதலனுடன் இளம் பெண் ஓட்டம்

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னாள் காதலனுடன் இளம் பெண் ஓட்டம் பிடித்தார்
முன்னாள் காதலனுடன் இளம் பெண் ஓட்டம்
Published on

திருச்சி:

திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியை சேர்ந்த வாலிபருக்கு 25 வயதில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மனைவி தனது குழந்தைகளுடன் திடீரென்று மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் கணவர் தேடிபார்த்தும் எங்கும் காணவில்லை . இது குறித்து அந்த பெண்ணின் தாய் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் திருமணத்திற்கு முன்பு ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், தற்பொழுது அவருடன் மாயமாகிவிட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இரண்டு குழந்தைகளின் தாய்,கணவனை தவிக்க விட்டு காதலுடன் ஒடிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com