search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 குழந்தைகளை தவிக்கவிட்டு சின்ன மாமனாருடன் பெண் ஓட்டம்
    X

    2 குழந்தைகளை தவிக்கவிட்டு சின்ன மாமனாருடன் பெண் ஓட்டம்

    • தாரமங்கலம் அருகி லுள்ள கருக்கல்வாடி கிரா மம், எருமைக்காரன் வளவு பகுதியில் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு சின்ன மாமனாருடன் பெண் ஓட்டம்.
    • தகவல் அறிந்து வந்த சின்னம்மாள் முத்துசாமி மீது தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள கருக்கல்வாடி கிரா மம், எருமைக்காரன் வளவு பகுதியைசேர்ந்த பழனிசாமி முத்துசாமி (வயது 33) நெசவு தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த அண்ணன் மருமகள் உறவு முறை கொண்ட சுரேஷ்குமாரின் மனைவி கோமதி (27) என்பவருடன் கள்ள தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 10-ந்தேதி முத்துசாமியும், கோமதியும் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது, இதுபற்றி கோமதியின் மாமியார் சுந்தராம்பாள் பாணா புரத்தில் உள்ள கோமதியின் தாய் சின்னம்மாளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த சின்னம்மாள் முத்துசாமி மீது தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோமதிக்கு 2 குழந்தை கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 குழந்தைகளை தவிக்க விட்டு அவர் ஓடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×