search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டம்"

    • காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு சமயபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒழுங்காக படிக்குமாறு தங்களது மகளுக்கு அவர்கள் அறிவுரை கூறினர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி தனது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டுக்கு திரும்பி வராததால் அச்சம் அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

    ராமசாமி நகரை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி. இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

    சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி அவரது காதலனுடன் சென்றது தெரிய வந்தது. மாணவியை போலீசார் தேடி வருகிறார்கள். 

    • 23 இடங்களில் இருந்து புறப்பட்டு நாகர். அண்ணா விளையாட்டு அரங்கம் வந்தது
    • இந்த ஆண்டு உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் 26-ந்தேதி உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகத்தொண்டு நிறுவனங்களான திருப்புமுனை போதை நோய் நலப்பணி, போதை நோய் பணிக்குழு, புது வாழ்வு மையம் ஆகியவை இணைந்து கன்னியாகுமரி, குளச்சல், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட 23 இடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பங்கேற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர்கள், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதியை ஏற்றி தொடர் ஓட்ட வீரர்களிடம் வழங்கினார்கள்.

    பின்னர் இந்த ஜோதி ஓட்டம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், போலீஸ் டி.எஸ்.பி.ராஜா, குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்குனர் அருட்பணியாளர் நெல்சன், ஜோதி ஓட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசிறில், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணை தலைவர் ஜெனஸ் மைக்கேல், வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ், முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஜோதி ஓட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மேயர் மகேஷ் ஆகியோர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடினர். இதில் பள்ளி-கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர். காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து புறப்பட்ட ஜோதி ஓட்டம் விவேகானந்தபுரம், கொட்டாரம், பொற்றையடி, ஈத்தங்காடு, வழுக்கம்பாறை, சுசீந்திரம், இடலாக்குடி, கோட்டாறு, மீனாட்சிபுரம் மணிமேடை சந்திப்பு வழியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது. அங்கு உலக போதை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.

    குளச்சல் காணிக்கை அன்னை மருத்துவமனை புதுவாழ்வு இல்லம் சார்பில், அண்ணாசிலை சந்திப்பில் இருந்து ஜோதி ஓட்டம் புறப்பட்டது. புதுவாழ்வு இல்ல பணியாளர் கிறிஸ்டி வரவேற்று பேசினார். குளச்சல் மீன்துறை ஆய்வாளர் கனிசெல்வம் வாழ்த்துரை வழங்கினார். புதுவாழ்வு இல்ல இயக்குனர் அருட்சகோதரி, ஜோதியில் தீபம் ஏற்றினார்.

    நகர்மன்ற தலைவர் நசீர் கொடியசைத்து ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அருட்சகோதரிகள், புதுவாழ்வு இல்ல மக்கள், பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். ஜோதி ஓட்டம், திங்கள்நகர், இரணியல், பரசேரி, சுங்கான்கடை, பார்வதிபுரம் வழியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் சென்றடைந்தது.

    ஆரல்வாய்மொழி முத்துநகர் பகுதியில் இருந்து புறப்பட்ட ஜோதி ஓட்டத்தை தனி துணை கலெக்டர் திருப்பதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தோவாளை தாலுகா தாசில்தார் வினை தீர்த்தான் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஜோதி ஓட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர். முத்து நகர், தோவாளை, வெள்ளமடம், வடசேரி வழியாக இந்த ஜோதி ஓட்டம், அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது.

    போதை ஓழிப்பு குழுநாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடந்த போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில், குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் போதை ஒழிப்பு தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் போதை குறித்.து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான் போதையை ஒழிக்க முடியும்.

    குமரி மாவட்டம் போதையில்லா மாவட்டமாக மாற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போதை பொருட்களை பயன்படுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே போதை பொருட்கள் பயன்படுத்து வோருக்கு பல்வேறு அறிவுரைகளை கூற வேண்டும். அவர்களை நல்வழிப்படுத்துவது நமது கடமையாகும். போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் அவரது ரகசியங்கள் பாதுகாக்கப்படும். விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், விளையாட்டு அதிகாரி ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறந்த தன்னார்வலர்களுக்கு பரிசுகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.

    • இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதி கொண்டனர்.
    • காவலாளிகள், போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி பள்ளிவிளை ரயில்வே தண்டவாளம் பகுதியில் நேற்று வாலிபர்கள் சிலர் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதி கொண்டனர்.

    இதில் மது பாட்டில்களை உடைத்து ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே எதிர்தரப்பை சேர்ந்த 2 பேரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மீண்டும் தாக்கிக்கொண்டனர். இதை பார்த்ததும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த காவலாளிகள், போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    இதுதொடர்பாக இதுவரை எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வாலிபர் குடிபோதையில் இளம்பெண்ணின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார்.
    • பெற்ேறார் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பெரியகடை வீதி போலீசில் புகார் செய்தனர்

    கோவை,

    கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள மணல்மேட்டை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 படிக்கும் போது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். அதன் பின்னர் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.தனது காதலனுக்கு திருமணம் ஆன பின்னரும் இளம்பெண் அவரது பெற்றோருக்கு தெரியாமல் வாலிபருடன் பேசி வந்தார்.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு வாலிபர் குடிபோதையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்தார். அவர் இளம்பெண்ணின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். ஆனால் அவர்கள் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளதால் பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதன்காரணமாக இளம்பெண் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடிததார். அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் இளம் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் அவர்கள் இது குறித்து மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பெரியகடை வீதி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் திருமணமான காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலனின் பெற்றோர் மாணவியை பெண் கேட்டு வீட்டிற்கு வந்தனர்.
    • இது குறித்து மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் காரமடையில் உள்ள அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக சேலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். அப்போது அவர்களிடம் மாணவி தான் இனிமேல் காதலனுடன் பேச மாட்டேன் என கூறினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலனின் பெற்றோர் மாணவியை பெண் கேட்டு வீட்டிற்கு வந்தனர்.

    ஆனால் மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து விட்டனர். சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    அப்போது மாணவி தனது இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • கள்ளக்காதல் விவகாரம் அக்கம்பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள ராமசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 8 வயதில் மகள், 5 வயதில் மகன் ஆகியோர் உள்ளனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது அவர் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    பின்னர் அவர் பேரூர் போலீஸ் நிலையத்தில் தன்னை தவிக்க விட்டு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • இளம்பெண்ணின் காதலன், தனது காதலியின் சகோதரர் மோட்டார் சைக்கிளை பஞ்சராக்கினார்.
    • இதுகுறித்து பெற்றோர் சூலூர் போலீசில் புகார் அளித்தனர்.

    சூலூர்,

    சேலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சூலூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பள்ளியில் படித்த போது, அதே ஊரை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததார். இதையறிந்த அவரது பெற்றோர் தங்களது பெண்ணை கோவையில் வேலைக்கு சேர்த்து விட்டனர். ஆனாலும் அவர் தனது காதலனுடன் பேசி வந்ததாக தெரிகிறது. பணியில் சேர்ந்து 6 மாதங்கள் ஆன நிலையில் வீட்டிற்கு செல்ல இளம்பெண் முடிவு செய்தார்.

    இதனால் பெற்றோரை தொடர்பு கொண்டு தான் ஊருக்கு வர விரும்புவதாக அவர் தெரிவித்தார். அதற்கு பெற்றோர், நீ தனியாக வர வேண்டாம், அண்ணனை அங்கு அனுப்பி வைக்கிறோம், அவனுடன் நீ ஊருக்கு வா என தெரிவித்தனர்.

    அதன்படி அந்த பெண்ணின் சகோதரர் இங்கு வந்தார்.

    அதேசமயம் இளம்பெண் தனது காதலனுக்கும் போன் செய்து அழைத்துள்ளார். அதன்படி இளம்பெண்ணின் காதலனும் அங்கு வந்தார். காதலன் அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்தார்.

    இளம்பெண்ணின் சகோதரர், தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தங்கையை அழைக்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த இளம்பெண்ணின் காதலன் அந்த மோட்டார் சைக்கிளை பஞ்சராக்கினார்.

    அப்பாவியான சகோதரர், தனது தங்கையுடன் வெளியில் வந்த போது, மோட்டார் சைக்கிள் பஞ்சராகி இருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் தங்கையை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளை அருகே உள்ள மெக்கானிக் கடைக்கு செல்வதற்காக தள்ளிக்கொண்டு சென்றார்.

    அப்போது இளம்பெண், அங்கு ஏற்கனவே தயாராக இருந்த தனது காதலன் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.

    இதனை சற்றும் எதிர்பாராத இளம்பெண்ணின் சகோதரர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். உடனே இதுகுறித்து தனது பெற்றோருக்கு புகார் ெகாடுத்தார்.

    அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து பெற்றோர் சூலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அண்ணனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு காதலனுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மாணவியின் பெற்ேறார் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார்.

    இந்தநிலையில் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழனியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் மாணவியை அவரது பெற்றோர் குரும்பபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அவரை அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவியை தேடி வருகிறார்கள்.

    • இளம்பெண் மில்லில் வேலை பார்த்த திருமணமான வாலிபரை காதலித்தார்.
    • காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 24 வயது இளம்பெண்.

    இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலுமச்ச ம்பட்டியில் உள்ள மில்லில் வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெ ண்ணுக்கு அதே மில்லில் வேலை பார்த்த திருமண மான வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. இளம்பெண் அடிக்கடி அந்த வாலிபருடன் பேசி பழகி வந்தார்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெ ண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் திருமணமான வாலிபருடன் பழகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் வேலைக்கு செல்வதயைும் நிறுத்தி விட்டனர். இள ம்பெண்ணி ன் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மணமகனை தேடி வந்தனர். சம்பவ த்தன்று இளம்பெண்ணின் வீட்டிற்கு மணமகனின் வீட்டார் பெண் பார்க்க வருவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வந்தனர்.

    அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இளம்பெ ண்ணை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    எனவே அவர்கள் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம்
    • புது வாழ்க்கை அமைத்து விட்டதாக செல்போனில் தகவல்

    திருச்சி,

    திருச்சி துறையூர் கோம்பை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 33 ) மினி பஸ் டிரைவர். இவருக்கும் நர்சிங் படித்து வந்த நித்யா (23) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. இதை யடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நித்யா அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார்.அதன் பின்னர் அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. 24 மணி நேரமும் செல்போனும் கையுமாக இருந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் நவீன் என்பவர் நித்யாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் கணவருக்கு தெரியாமல் நீண்ட நேரம் அவருடன் அரட்டை அடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை ஒருவரை பார்க்கச் செல்வதாக கூறிச் சென்ற நித்யா வீடு திரும்பவில்லை. இதை யடுத்து புஷ்பராஜ் காதல் மனைவியை தேடி வந்தார். இந்த நிலையில் மனைவியின் செல்போனிலிருந்து நள்ளிரவு அழைப்பு வந்தது.உடனே புஷ்பராஜ் செல்போனை எடுத்துப் பேசினார். எதிர் முனையில் பேசிய நித்யா,புது வாழ்க்கை ஒன்றை அமைத்து விட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறி இணைப்பை துண்டித்தார்.இதைக் கேட்டு புஷ்பராஜ் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.பின்னர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசாரின் விசாரணையில்,மாயமான நித்யா கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.அந்த இன்ஸ்டாகிராம் நம்பர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உறுதியாக தெரியவில்லை. மதுரையைச் சேர்ந்தவர் என பழகி வந்துள்ளார்.

    • விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது
    • விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. மாரத்தான் போட்டிகள் 3 பிரிவாக பிரித்து பள்ளி, பொதுப்பிரிவினர் மற்றும் மாணவ/மாணவிகள், ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளாக 5 கிலோ மீட்டர் தூரமும், திருநங்கைகள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்ட போட்டியும் நடத்தப்ப டவு ள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.1000 மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் 5 பிரிவினர்களுக்கும் பரிசளிக்கப்படும். இப்போ ட்டியில் கலந்துகொண்டு போட்டி தூரத்தை நிறைவு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.    மாரத்தான் போட்டிகள் 01.05.2023 அன்று மாலை 3.30 மணியளவில் புதிய பஸ் நிலையம் அருகில் தளபதி திடல் வளாகத்திலிருந்து தொடங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரினை எம்.ஜி.ஆர் உள்விளை யாட்டரங்கில் பதிவு மேற்கொள்ளலாம்.   இந்த மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ/மாணவி ய ர்கள், பொதுப்பிரிவினர்கள் மற்றும் திருநங்கைகள் பெரு மளவில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டியும் மற்றும் சுற்றுசூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • இளம் பெண்ணுக்கு மிஸ்டு கால் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • கணவர் தனது மனைவியை மீட்டுத் தருமாறு வடக்கி பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் வடக்கிபாளையம் அருகே உள்ள செல்லாண்டி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் இளம் பெண்ணுக்கு மிஸ்டு கால் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதனை இளம் பெண்ணின் கணவர் கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    வேலை முடிந்ததும் மதியம் வீட்டுக்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து கள்ளக்காதலனுடன் ஓடிய தனது மனைவியை மீட்டுத் தருமாறு வடக்கி பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×