search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்
    X

    கோவையில் கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

    • இளம் பெண்ணுக்கு மிஸ்டு கால் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • கணவர் தனது மனைவியை மீட்டுத் தருமாறு வடக்கி பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் வடக்கிபாளையம் அருகே உள்ள செல்லாண்டி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் இளம் பெண்ணுக்கு மிஸ்டு கால் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதனை இளம் பெண்ணின் கணவர் கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    வேலை முடிந்ததும் மதியம் வீட்டுக்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து கள்ளக்காதலனுடன் ஓடிய தனது மனைவியை மீட்டுத் தருமாறு வடக்கி பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×