search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்
    X

    கோவையில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்

    • கள்ளக்காதல் விவகாரம் அக்கம்பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள ராமசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 8 வயதில் மகள், 5 வயதில் மகன் ஆகியோர் உள்ளனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது அவர் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    பின்னர் அவர் பேரூர் போலீஸ் நிலையத்தில் தன்னை தவிக்க விட்டு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×