search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "runs"

    • இளம்பெண்ணுக்கு அந்த பகுதியை சேர்ந்த திருமணமாகாத வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • இளம்பெண்ணின் கணவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள மரப்பாலத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அந்த பகுதியை சேர்ந்த திருமணமாகாத வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    கணவர் மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளகாதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பள்ளிக்கு சென்ற 5 வயது இளைய மகனை அழைத்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் தனது மகனுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். நீண்ட நேரம் ஆகியும் பள்ளிக்கு சென்ற மனைவி வராததால் அவரை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் கள்ளக்கா தலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • வாலிபர் குடிபோதையில் இளம்பெண்ணின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார்.
    • பெற்ேறார் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பெரியகடை வீதி போலீசில் புகார் செய்தனர்

    கோவை,

    கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள மணல்மேட்டை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 படிக்கும் போது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். அதன் பின்னர் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.தனது காதலனுக்கு திருமணம் ஆன பின்னரும் இளம்பெண் அவரது பெற்றோருக்கு தெரியாமல் வாலிபருடன் பேசி வந்தார்.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு வாலிபர் குடிபோதையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்தார். அவர் இளம்பெண்ணின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். ஆனால் அவர்கள் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளதால் பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதன்காரணமாக இளம்பெண் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடிததார். அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் இளம் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் அவர்கள் இது குறித்து மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பெரியகடை வீதி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் திருமணமான காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • இளம்பெண்ணின் காதலன், தனது காதலியின் சகோதரர் மோட்டார் சைக்கிளை பஞ்சராக்கினார்.
    • இதுகுறித்து பெற்றோர் சூலூர் போலீசில் புகார் அளித்தனர்.

    சூலூர்,

    சேலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சூலூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பள்ளியில் படித்த போது, அதே ஊரை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததார். இதையறிந்த அவரது பெற்றோர் தங்களது பெண்ணை கோவையில் வேலைக்கு சேர்த்து விட்டனர். ஆனாலும் அவர் தனது காதலனுடன் பேசி வந்ததாக தெரிகிறது. பணியில் சேர்ந்து 6 மாதங்கள் ஆன நிலையில் வீட்டிற்கு செல்ல இளம்பெண் முடிவு செய்தார்.

    இதனால் பெற்றோரை தொடர்பு கொண்டு தான் ஊருக்கு வர விரும்புவதாக அவர் தெரிவித்தார். அதற்கு பெற்றோர், நீ தனியாக வர வேண்டாம், அண்ணனை அங்கு அனுப்பி வைக்கிறோம், அவனுடன் நீ ஊருக்கு வா என தெரிவித்தனர்.

    அதன்படி அந்த பெண்ணின் சகோதரர் இங்கு வந்தார்.

    அதேசமயம் இளம்பெண் தனது காதலனுக்கும் போன் செய்து அழைத்துள்ளார். அதன்படி இளம்பெண்ணின் காதலனும் அங்கு வந்தார். காதலன் அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்தார்.

    இளம்பெண்ணின் சகோதரர், தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தங்கையை அழைக்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த இளம்பெண்ணின் காதலன் அந்த மோட்டார் சைக்கிளை பஞ்சராக்கினார்.

    அப்பாவியான சகோதரர், தனது தங்கையுடன் வெளியில் வந்த போது, மோட்டார் சைக்கிள் பஞ்சராகி இருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் தங்கையை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளை அருகே உள்ள மெக்கானிக் கடைக்கு செல்வதற்காக தள்ளிக்கொண்டு சென்றார்.

    அப்போது இளம்பெண், அங்கு ஏற்கனவே தயாராக இருந்த தனது காதலன் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.

    இதனை சற்றும் எதிர்பாராத இளம்பெண்ணின் சகோதரர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். உடனே இதுகுறித்து தனது பெற்றோருக்கு புகார் ெகாடுத்தார்.

    அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து பெற்றோர் சூலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அண்ணனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு காதலனுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ×