search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் திருமணமான வாலிபருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்
    X

    கோவையில் திருமணமான வாலிபருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

    • வாலிபர் குடிபோதையில் இளம்பெண்ணின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார்.
    • பெற்ேறார் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பெரியகடை வீதி போலீசில் புகார் செய்தனர்

    கோவை,

    கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள மணல்மேட்டை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 படிக்கும் போது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். அதன் பின்னர் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.தனது காதலனுக்கு திருமணம் ஆன பின்னரும் இளம்பெண் அவரது பெற்றோருக்கு தெரியாமல் வாலிபருடன் பேசி வந்தார்.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு வாலிபர் குடிபோதையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்தார். அவர் இளம்பெண்ணின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். ஆனால் அவர்கள் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளதால் பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதன்காரணமாக இளம்பெண் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடிததார். அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் இளம் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் அவர்கள் இது குறித்து மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பெரியகடை வீதி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் திருமணமான காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×