என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சூலூரில் காதலனுடன் இளம்பெண் ஓட்டம்
- இளம்பெண்ணின் காதலன், தனது காதலியின் சகோதரர் மோட்டார் சைக்கிளை பஞ்சராக்கினார்.
- இதுகுறித்து பெற்றோர் சூலூர் போலீசில் புகார் அளித்தனர்.
சூலூர்,
சேலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சூலூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இவர் பள்ளியில் படித்த போது, அதே ஊரை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததார். இதையறிந்த அவரது பெற்றோர் தங்களது பெண்ணை கோவையில் வேலைக்கு சேர்த்து விட்டனர். ஆனாலும் அவர் தனது காதலனுடன் பேசி வந்ததாக தெரிகிறது. பணியில் சேர்ந்து 6 மாதங்கள் ஆன நிலையில் வீட்டிற்கு செல்ல இளம்பெண் முடிவு செய்தார்.
இதனால் பெற்றோரை தொடர்பு கொண்டு தான் ஊருக்கு வர விரும்புவதாக அவர் தெரிவித்தார். அதற்கு பெற்றோர், நீ தனியாக வர வேண்டாம், அண்ணனை அங்கு அனுப்பி வைக்கிறோம், அவனுடன் நீ ஊருக்கு வா என தெரிவித்தனர்.
அதன்படி அந்த பெண்ணின் சகோதரர் இங்கு வந்தார்.
அதேசமயம் இளம்பெண் தனது காதலனுக்கும் போன் செய்து அழைத்துள்ளார். அதன்படி இளம்பெண்ணின் காதலனும் அங்கு வந்தார். காதலன் அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்தார்.
இளம்பெண்ணின் சகோதரர், தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தங்கையை அழைக்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த இளம்பெண்ணின் காதலன் அந்த மோட்டார் சைக்கிளை பஞ்சராக்கினார்.
அப்பாவியான சகோதரர், தனது தங்கையுடன் வெளியில் வந்த போது, மோட்டார் சைக்கிள் பஞ்சராகி இருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் தங்கையை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளை அருகே உள்ள மெக்கானிக் கடைக்கு செல்வதற்காக தள்ளிக்கொண்டு சென்றார்.
அப்போது இளம்பெண், அங்கு ஏற்கனவே தயாராக இருந்த தனது காதலன் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத இளம்பெண்ணின் சகோதரர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். உடனே இதுகுறித்து தனது பெற்றோருக்கு புகார் ெகாடுத்தார்.
அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து பெற்றோர் சூலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அண்ணனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு காதலனுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்