என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எலான் மஸ்க்"
- முதற்கட்ட சோதனை வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது.
- மனிதர்களிடம் சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
நரம்பியல் நிலைமைகள் அல்லது அதிர்ச்சிகரமான காயங்கள் உள்ள மனிதர்களின் மூளைக்குள் சிப் பொருத்தி, அவர்களை இந்த பாதிப்பில் இருந்து மீட்க எலான் மஸ்க் 'நியூராலின்க்' என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனம் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தும் முதல் முயற்சியின் முதற்கட்ட சோதனை வெற்றிக்கரமாக நடந்து முடிந்திருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கழுத்து பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பக்கவாத பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தப்படும். இதன்மூலம் அவர்களின் எண்ணத்தின் அடிப்படையில் கம்ப்யூட்டரின் கர்சர் மற்றும் கீபோர்டு உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த முடியும்.
கடந்த 2016-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டத்தை மனிதர்களிடம் சோதனை செய்வதற்காக எலான் மஸ்க் அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றிருந்தார்.
அதன்படி பக்கவாதம் பாதிக்கப்பட்டு, இந்த சோதனையில் ஈடுபட தேர்வு செய்யப்பட்ட முதல் நபரிடம் ஆய்வு தொடங்கப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிப் முதன்முதலாக வெற்றிகரமாக மனிதரின் மூளையில் பொருத்தப்பட்டது.
சிப் பொருத்தப்பட்ட நபர் தற்போது குணமடைந்து வருகிறார் என்றும் அவரது எண்ணங்களை பயன்படுத்தி கம்ப்யூட்டர் மவுசை கட்டுப்படுத்துகிறார் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
- மனித மூளையிடும் கட்டளைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது நியூராலிங்க்
- மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் தென்படுவதாக நியூராலிங்க் தெரிவித்தது
அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீசுவரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் நிறுவியது, நியூராலிங்க் (Neuralink) எனும் நிறுவனம்.
மனித மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி செய்ய தொடங்கப்பட்டது நியூராலிங்க்.
கடந்த வருடம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), நியூராலிங்க் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப் எனப்படும் மின்னணு சில்லுகளை பொருத்தி அவற்றின் மூலம் மனித மூளையின் திறனை மேம்படுத்தவும், நோய்களின்றி வாழ வழி செய்யவும் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் முயற்சியாக ஒரு மனிதரின் மூளையில் "சிப் பொருத்துதல்" வெற்றிகரமாக நடந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.
மேற்கொண்டு எந்த தகவலையும் நியூராலிங்க் வழங்கவில்லை.
நியூராலிங்க் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட்டின் துணையுடன், மிக துல்லியமாக நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் இந்த சிப் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்ட பரிசோதனைகளில் இந்த சிப்பில் இருந்து மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் (electrical signal conduction) நடக்க தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பக்கவாதம் போன்ற மனிதர்களை செயலிழக்க செய்யும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள், முகம் உள்ளிட்ட உறுப்புகள் அசைவற்று போய் விடும். அந்நிலையில் உள்ளவர்களுக்கு அவர்களின் மூளை, உடல் உறுப்புகளுக்கு எண்ணங்கள் மற்றும் கட்டளைகளை உடனுக்குடன் அனுப்பும் பரிமாற்றமும் நின்று விடும்.
அத்தகைய குறைபாடு உள்ளவர்களின் மூளையில் மின்னணு சிப் பொருத்தி, அவற்றை எண்ணங்களின் மூலம் கட்டுப்படுத்தி, அதன் பயனாக உறுப்புகளை செயல்பட வைக்க முயல்வதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
தனிப்பட்ட பங்குதாரர்களை கொண்டு மஸ்க் உருவாக்கியுள்ள நியூராலிங்க், தற்போது $5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- 2022ல் எலான் மஸ்க் டுவிட்டர் தளத்தை வாங்கி எக்ஸ் என பெயரை மாற்றினார்
- குழந்தைகள் குறித்த வீடியோக்களை ஆஸ்டின் அலுவலகம் கண்காணிக்கும்
பயனர்களின் உரையாடல்களுக்கான உலகின் முன்னணி சமூக வலைதளம், எக்ஸ் (X).
எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ள பயனர்கள் ஒருவருக்கொருவர் உரை, புகைப்படம், வீடியோ, கோப்பு உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் செய்திகளை பிறருடன் பரிமாறி உரையாட முடியும்.
கடந்த 2022ல், அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.
சில தினங்களுக்கு முன் உலக புகழ் பெற்ற அமெரிக்க பாடகி டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift) தோன்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டீப்ஃபேக் (deepfake) வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகியது. எக்ஸ் நிறுவனத்தில் உடனடியாக புகார்கள் அளிக்கப்பட்டும் அவற்றை நீக்கவே பல மணி நேரங்கள் ஆனது.
இதனையடுத்து, செயற்கை நுண்ணறிவு வீடியோக்களால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனடியாக இத்தகைய தளங்களை நடத்தும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்நிலையில், எக்ஸ், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில ஆஸ்டின் (Austin) நகரில் தளத்தின் உள்ளடக்கத்தில் இது போன்ற வீடியோக்கள் வெளியாகாமல் தடுக்க ஒரு அலுவலகத்தை நிறுவ முடிவு செய்துள்ளது.
100 பணியாளர்களுக்கும் மேல் இந்த அலுவலகத்தில் குழந்தைகள் குறித்து இடம் பெறும் தகாத உள்ளடக்கங்களை கண்டறிந்து உடனுக்குடன் நீக்கும் பணியில் ஈடுபடவுள்ளார்கள்.
- உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார் பெர்னார்ட் அர்னால்ட்.
- அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தின் நிகர மதிப்பு 207.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
உலகளாவிய ஆடம்பர பொருட்கள் நிறுவனமான LVMH இன் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான பெர்னார்ட் அர்னால்ட் இப்போது உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். எலான் மஸ்க்-யை பின்னுக்குத் தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
LVMH இன் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட். 74 வயதான இவர், ஃபெண்டி மற்றும் ஹெனசி போன்ற பிராண்டுகளை நிறுவி அதனை பிரபலமடையவும் செய்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய ஆடம்பரமான பிராண்டாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகின் முதல் பணக்காரராக திகழ்ந்த அர்னால்ட், கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, LVMH பங்குகள் பத்து சதவீதம் வரை சரிவடைந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது. அதன் பிறகு உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எலான் மஸ்க் இருந்து வந்தார்.
இந்நிலையில், அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தின் நிகர மதிப்பு 207.8 பில்லியன் டாலராக உயர்ந்து, உலகின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
- அன்டோனியோ குடெரஸ் சமகால சவால்களை உணர வேண்டும் என கருத்து தெரிவித்தார்
- நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம் பெறாதது ஏன் என ஐசன்பர்க் கேள்வி எழுப்பினார்
டெஸ்லா, எக்ஸ் (முன்னர் ட்விட்டர்), எக்ஸ்ஏஐ (xAI) உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் நிறுவனர், அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான 52 வயதான எலான் மஸ்க் (Elon Musk).
இவர் பல சர்ச்சைக்குரிய விஷயங்களில் தனது வெளிப்படையான அதிரடி கருத்துகளுக்கு பெயர் போனவர்.
இந்நிலையில், ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரஸ், தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் குழுவில் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த எந்த நாட்டிற்கும் இடம் இல்லாதது கவலையளிக்கிறது. 80 வருடங்களுக்கு முன் இருந்த நிலையை உலக அமைப்புகள் கடந்து தற்போது உள்ள சமகால சவால்களையும், உண்மை நிலவரத்தையும் உணர வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க-இஸ்ரேல் வம்சாவளி தொழிலதிபரான மைக்கேல் ஐசன்பர்க் (Michael Eisenberg), "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் அமைப்பில் இந்தியா இடம் பெறாதது ஏன்? ஐக்கிய நாடுகள் (UNO) அமைப்பை கலைத்து விட்டு ஒரு உறுதியான தலைமையின் கீழ் ஒரு புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்" என எக்ஸ் கணக்கில் கருத்து தெரிவித்தார்.
And what about India? ??
— Michael Eisenberg (@mikeeisenberg) January 21, 2024
Better yet is to dismantle the @UN and build something new with real leadership. https://t.co/EYpyooHaH4
ஐசன்பர்கின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் எலான் மஸ்க் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
வருங்காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பையும், அதன் கிளை அமைப்புகளையும் கலைத்துதான் ஆக வேண்டும்.
உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியாவை போன்ற பெரிய நாடு, ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பினராக ஏற்கப்படாதது அறிவற்ற செயல்.
அத்துடன் ஆப்பிரிக்காவிற்கும் அப்பதவி அளிக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன்.
இவ்வாறு மஸ்க் பதிவிட்டார்.
Elon Musk tweets "At some point, there needs to be a revision of the UN bodies...India not having a permanent seat on the Security Council, despite being the most populous country on Earth, is absurd. Africa collectively should also have a permanent seat imo." pic.twitter.com/X8avkRuxf6
— ANI (@ANI) January 23, 2024
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா என 5 நிரந்தர உறுப்பினர் நாடுகளும், 10 நிரந்தரம் அல்லாத உறுப்பினர் நாடுகளும் உள்ளன.
15 நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தில் 5 நிரந்தர உறுப்பினர் நாடுகளில் ஒரு நாடு எதிர்த்து வாக்களித்தாலும், அத்தீர்மானம் தோற்றதாக கருதப்படும்.
- ஆஷ்விட்ஸ் முகாம்களில் ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்தார்
- யூத எதிர்ப்பு சிந்தனைகள் எக்ஸ் தளத்தில் குறைவு என்றார் மஸ்க்
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் அதிபர் அடால்ஃப் ஹிட்லர், அண்டையில் உள்ள போலந்து நாட்டை ஆக்கிரமித்தார்.
யூத மதத்தினரை வெறுத்த ஹிட்லர், போலந்தில் 40க்கும் மேற்பட்ட முகாம்களில் லட்சக்கணக்கான யூதர்களை அடைத்து வைத்து, அவர்களை தனது படையினரை கொண்டு கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தார்.
1945ல், "ஆஷ்விட்ஸ்" (Auschwitz camp) என அழைக்கப்படும் சித்திரவதை முகாம்களில், இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து, ஹிட்லர் உயிரிழந்து, அமெரிக்க-இங்கிலாந்து படைகள் வெற்றி பெற்ற காலத்திலிருந்து, நாஜி படையினரின் கொடுமைகளை உலகிற்கு உணர்த்தும் விதமாக சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் போலந்து நாட்டில் இவற்றை காண வருவது வழக்கம்.
இந்நிலையில் ,உலகின் நம்பர் 1 கோடீசுவரரரும், அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க், போலந்து சென்றார்.
தனது மகனுடன் அங்கு சென்றிருந்த மஸ்க், ஆஷ்விட்ஸ் முகாம்களை பார்வையிட்டு, கொல்லப்பட்ட யூதர்களுக்கான நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார்.
தெற்கு போலந்தில் கிராகோ (Krakow) பகுதியில் ஐரோப்பிய யூதர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றினார் மஸ்க்.
அப்போது பேசும் போது மஸ்க், "மனிதர்கள், சக மனிதர்களுக்கு இப்படி ஒரு கொடுமையை செய்ய முடியும் என்பது மிகவும் சோகமாக இருக்கிறது. துயரத்தில் என் மனம் நெகிழ்ந்து விட்டது. நேரிடையாக நீங்கள் இந்த இடத்திற்கு வந்து பார்த்தால் உங்கள் இதயம் இன்னும் கனத்து விடும். யூதர்களுக்கு எதிரான கருத்துகள் எக்ஸ் இணைய தளத்தில் குறைவு" என தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு குறித்து ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் நடத்தும் கருத்தரங்கில் மஸ்க் கலந்து கொள்கிறார்.
- எக்ஸ் தளத்தில் பகிர்ந்தால் வீடியோ தயாரிப்பு செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும்.
- மிஸ்டர் பீஸ்ட்டின் முதல் வீடியோ நேரடியாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.
உலக அளவில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட். ஜிம்மி டொனால்ட்சன் என்ற இயற்பெயர் கொண்ட இவரது வலைதள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை குவிப்பது வழக்கம்.
ஆனால் இவர் இதுவரை எக்ஸ் தளத்தில் எந்த வீடியோக்களையும் பதிவிட்டது கிடையாது. மிகுந்த பொருட் செலவில் தான் உருவாக்கும் வீடியோக்களை அவர் யூ-டியூப்பில் வெளியிட்டு வந்தார்.
சமீபத்தில் எக்ஸ் தளத்தின் அதிபரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், யூடியூப் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட் ஏன் தனது வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிடுவதில்லை என கேள்வி கேட்டிறிந்தார்.
அதற்கு மிஸ்டர் பீஸ்ட் அளித்த பதிலில், "என்னுடைய ஒவ்வொரு வீடியோவையும் மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கிறேன். எக்ஸ் தளத்தில் அதனை பகிர்ந்தால் வீடியோ தயாரிப்பு செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும் என தனது தயக்கத்தை கூறியிருந்தார்.
அவரது இந்த பதிவை எக்ஸ் தள பயனர்கள் பலரும் வரவேற்றனர். இந்நிலையில் எலான் மஸ்க் கோரிக்கையை ஏற்று மிஸ்டர் பீஸ்ட் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவுடன் அவரது பதிவில், எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ எவ்வளவு விளம்பர வருவாயை ஈட்டுகிறது என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன்.
அடுத்த வாரம் விளம்பர வருவாயாயை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த எலான் மஸ்க் தனது பதிவை மறு பகிர்வு செய்து, மிஸ்டர் பீஸ்ட்டின் முதல் வீடியோ நேரடியாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது என கூறியிருந்தார்.
அவரது மிஸ்டர் பீஸ்ட்டின் வீடியோ மிகவும் வேடிக்கையாகவும், சுவராஸ்யமாகவும் இருந்ததாக பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவரது முதல் வீடியோவை 2.7 கோடி
- ஹெச்1-பி விசா நடைமுறை இந்தியர்களுக்கு பெரிதும் பயனளித்தது
- கள்ளத்தனமாக வருபவர்களுக்கு வசதி செய்திருக்கிறோம் என்கிறார் மஸ்க்
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு உள்ளே நுழைபவர்களை தடுக்க எல்லைகளை பலப்படுவது உள்ளிட்ட பல முயற்சிகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. அதே போல், சட்டரீதியாக அனுமதி பெற்று அங்கு கல்வி பயிலவும், பணியாற்றவும் வருபவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்து பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
உலகின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு, குடியுரிமை இல்லாமல், அயல்நாட்டு பணியாளராக மட்டுமே நீண்ட காலம் அமெரிக்காவில் பணி புரிய வாய்ப்பளித்து வருவது ஹெச்1-பி விசா (H1-B visa) நடைமுறை.
இது இந்தியாவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மிகவும் பயனளித்து வந்தது.
ஹெச்1-பி விசா எண்ணிக்கைக்கும் அரசு உச்சபட்ச அளவை நிர்ணயித்துள்ளது.
கடந்த 2020 ஜூலை மாதம், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புது விசா வழங்கலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
தற்போதைய ஜோ பைடன் அரசு விசா வழங்கலில் கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை.
இந்நிலையில், சுமார் 7 லட்சத்திற்கும் மேல் திறமை வாய்ந்த பணியாளர்கள் அமெரிக்காவிற்கு வர காத்திருக்கும் நிலையில், 85 ஆயிரத்திற்கு மேல் ஹெச்1-பி விசா வழங்கப்படாது என உச்சவரம்பை அமெரிக்கா நிர்ணயித்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அதே போன்று, முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரின் ஆட்சிகளிலும் தற்போது ஜோ பைடனின் ஆட்சியிலும் சட்டவிரோதமாக உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கை குறித்து ஒப்பிட்டு தகவல் வெளியானது.
அதன்படி, கடந்த ஆட்சிகளில் 98,000 என இருந்த சட்டவிரோதமாக உள்ளே நுழைவோரின் எண்ணிக்கை தற்போதைய அதிபர் பைடன் காலத்தில் 2,42,000 என உயர்ந்துள்ளது.
இந்த விவரங்களை ஒப்பிட்டு உலகின் நம்பர் 1 கோடீசுவரரும் டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் விமர்சித்துள்ளார்.
அதில் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:
திருட்டுத்தனமாகவும், சட்டவிரோதமாகவும் அமெரிக்காவிற்கு உள்ளே நுழைவது மிக எளிதாக உள்ளது. ஆனால், சட்டரீதியாக உள்ளே நுழைய விரும்புபவர்களுக்கு அது மிக கடினமாக்கப்பட்டுள்ளது.
நாம் சட்டபூர்வ வழிமுறைகளை கடினமாக்கி, சட்டவிரோத வழிகளை எளிதாக்கி விட்டோம்.
இது அசல் பைத்தியக்காரத்தனம்.
பைடனின் நிர்வாகம் கள்ளத்தனமாக வருபவர்களுக்குத்தான் வசதி செய்து கொடுத்துள்ளது என தரவுகள் உறுதிபடுத்தி உள்ளன.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
While it is trivial to enter the United States illegally, it is insanely difficult for legal immigrants to move to the United States.
— Elon Musk (@elonmusk) January 4, 2024
This is madness! We should shut down illegal immigration and greatly increase legal immigration. https://t.co/ElW9PZaIqh
- 5000 சிறு செயற்கை கோள்களை விண்வெளியில் செலுத்தியுள்ளது.
- ஸ்பேஸ்எக்ஸ் நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதம் என வழக்கறிஞர் கூறினார்.
கடந்த 2002ல் அமெரிக்காவை சேர்ந்த கோடீசுவரரான எலான் மஸ்க், கலிபோர்னியா மாநிலத்தில் தொடங்கிய நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX).
செயற்கை கோள் தயாரிப்பு, விண்வெளியில் செயற்கை கோள்களை நிலைநிறுத்துதல், விண்வெளி ஆராய்ச்சி, தொலை தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அதிவேக இணையவழி சேவைக்காக ஃபால்கன் (Falcon) எனும் ராக்கெட்டுகள் மூலம் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கை கோள்களை செலுத்துவதில் முன்னணியில் உள்ளது.
இதுவரை, இந்நிறுவனம் 5000 சிறு செயற்கை கோள்களை விண்வெளியில் செலுத்தியுள்ளது.
கடந்த 2022ல் ஸ்பேஸ்எக்ஸ் பணியாளர்கள் பலர், பணியிடத்தில் நிலவும் அசாதாரண சூழலை குறித்தும், எலான் மஸ்கின் பொதுவெளி நடவடிக்கைகள் குறித்தும் விமர்சித்து ஸ்பேஸ்எக்ஸ் உயர் அதிகாரி க்வைன் ஷாட்வெல் (Gwynne Shotwell) என்பவருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
அதில் மஸ்கின் நடத்தை, நிறுவனத்தின் பரந்த நோக்கங்களுக்கு எதிராக "கவனத்தை திசைதிருப்பும் இடையூறு" என குறிப்பிட்டிருந்தனர்.
இதை தொடர்ந்து புகார் அளித்த பணியாளர்களில் 8 பேரை ஸ்பேஸ்எக்ஸ் பணிநீக்கம் செய்துள்ளது.
விமர்சனம் செய்ததால் தங்களை முறைகேடாக பணிநீக்கம் செய்ததாக அவர்கள் அமெரிக்காவின் தேசிய பணியாளர் நல வாரியத்திடம் புகாரளித்தனர்.
"எந்தவித விருப்பு வெறுப்புமின்றி நிறுவனத்தின் குறிக்கோளை நிலைநாட்டவும், சக பணியாளர்களின் நலன் குறித்தும், பணியிட சூழல் வசதியை மேம்படுத்த வலியுறுத்தியும் முறையிட, பணியாளர் நல சட்டப்படி ஊழியர்களுக்கு எல்லாவித உரிமைகளும் இருந்த போதிலும் அதனை பயன்படுத்தியவர்களுக்கு எதிராக ஸ்பேஸ்எக்ஸ் நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதம்" என பணியாளர்களின் வழக்கறிஞர் டெபோரா லாரன்ஸ் தெரிவித்தார்.
இதனையடுத்து, நல வாரியத்தின் வழக்கறிஞருடன் ஸ்பேஸ்எக்ஸ் தரப்பு வழக்கறிஞர்கள் விவாதிப்பார்கள். இதில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்தடுத்த நீதிமன்ற வழக்குகளை எலான் மஸ்க் சந்திக்க நேரிடும்.
பணிநீக்கம் சட்டவிரோதம் என உறுதியானால், ஸ்பேஸ்எக்ஸ் மீண்டும் அவர்களை பணியில் சேர்த்து கொள்ளவும், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவை தவிர, சீனாவிலும் ஜெர்மனியிலும் டெஸ்லா உற்பத்தி செய்து வருகிறது
- தொடக்கத்தில் பிஒய்டி, பேட்டரி தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வந்தது
கடந்த 2003ல், அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க் (Elon Musk), தொடங்கிய பேட்டரி கார் நிறுவனம், டெஸ்லா (Tesla).
அமெரிக்காவில் பெருமளவு உற்பத்தி ஆனாலும், பெருகி வரும் வாடிக்கையாளர்களின் தேவைக்காக, இந்நிறுவனம் கார் உற்பத்தியை சீனாவிலும், ஜெர்மனியிலும் நடத்தி வருகிறது.
2023 வருட மூன்றாம் காலாண்டில் மட்டும் 4,30,488 மின்னணு கார்களை உற்பத்தி செய்தது.
கார்கள் விற்பனை மூலம் 2022-ஆம் வருட வருமானமாக டெஸ்லா, $81,462 பில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியது.
இந்நிலையில், சீனாவின் ஷென்சன் (Shenzen) பகுதியை சேர்ந்த மற்றொரு முன்னணி மின்னணு கார் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி (BYD), உலகளவில் முதல் இடத்தை பிடிக்க உள்ளது.
பிஒய்டி, 2023-ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் 5,26,000 கார்களை தயாரித்துள்ளது. 2023 முழு ஆண்டில் 3 மில்லியன் கார்களுக்கு மேல் உற்பத்தி செய்துள்ளது.
1995ல் சீனாவின் ஷென்சன் பகுதியில் வேங் சுவான் ஃபு (Wang Chuanfu) என்பவர் தொடங்கிய பிஒய்டி, முதலில் ஸ்மார்ட்போன், மடிக்கணினி உட்பட பல மின்னணு சாதனங்களுக்கு பேட்டரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தது. விலை உயர்ந்த ஜப்பானிய பேட்டரிகளை விற்பனையில் முந்திய பிஒய்டி பிறகு கார் தயாரிப்பிலும் கால் பதித்தது.
ஒரு மின்னணு கார் அல்லது இரு சக்கர வாகனத்திற்கு முக்கிய பாகமாக கருதப்படுவது அதனை இயக்கும் பேட்டரிதான். பேட்டரி தயாரிக்கும் தொழிலில் மிகுந்த அனுபவம் உள்ள நிறுவனம் என்பதாலும், தங்கள் பேட்டரியை வைத்தே தங்கள் கார்களை தயாரிப்பதால் பெருமளவு செலவினங்கள் குறைவதால், விலை குறைவான கார்களை பிஒய்டி-யால் தயாரிக்க முடிகிறது. குறைந்த செலவில் லாபம் ஈட்டி, அதிவேகமாக கார்களை பிஒய்டி தயாரிக்க இது முக்கிய காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பல வருடங்களாக பேட்டரி கார் தயாரிப்பில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள டெஸ்லா, போட்டியை எவ்வாறு சமாளிக்க போகிறது என பொருளாதார நிபுணர்கள் கவனித்து வருகின்றனர்.
- அதிவேக இணைய சேவைக்கு ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் பயன்படும்
- 70 நாடுகளில் 2.3 மில்லியன் மக்களை ஸ்டார்லிங்க் இணைய சேவை இணைக்கிறது
கடந்த 2002ல் உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், விண்வெளி ஆராய்ச்சிக்காக துவக்கிய நிறுவனம், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX).
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன வல்லுனர்கள், விண்வெளிக்கு மனிதர்களையும், சரக்குகளையும் கொண்டு செல்ல ஃபால்கன்-9 (Falcon-9) எனும் செயற்கை கோள் ஏவும் வாகனத்தை உருவாக்கினர்.
இந்த ஃபால்கன்-9 மூலம் இணைய சேவைகளை வழங்கும் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன.
ஆன்லைன் கேமிங் (online gaming) உட்பட பல அதிவேக இணைய சேவை தேவைப்படும் பயன்பாடுகளை எளிதாக்க கூடிய ஸ்டார்லிங் செயற்கை கோள்கள், 70 நாடுகளில் 2.3 மில்லியன் மக்களை இணைக்க உள்ளது.
இந்நிலையில், 2023 வருடத்திய கடைசி பயணமாக அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்தில் இருந்து ஃபால்கனின் 96-வது பயணத்தில், 23 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களை வெற்றிகரமாக செலுத்தியதாக அதன் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ஸ்பேஸ்எக்ஸ் பதிவிட்டது.
Congrats to the SpaceX team on achieving 96 launches in 2023! https://t.co/RWNJQH8eY3
— Elon Musk (@elonmusk) December 29, 2023
இந்த சாதனைக்கு ஸ்பேஸ்எக்ஸின் நிறுவனர் எலான் மஸ்க், பாராட்டு தெரிவித்துள்ளார்.
2023 ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.
- எக்ஸ் தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் எலான் மஸ்க்.
- பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.
எக்ஸ் தளத்தில் இதுபோன்று பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் எலான் மஸ்க்.
இந்நிலையில், எலான் மஸ்க், "எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:-
எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்