என் மலர்
நீங்கள் தேடியது "software employees"
- கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தான் இனவெறி பாகுபாடு, துன்புறுத்தல், ஊதிய மோசடி மற்றும் சட்டவிரோத பணி நீக்கம் போன்றவற்றை எதிர்கொண்டதாகக் கூறியிருந்தார்.
- பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒரு இனவெறி கொண்ட துப்பறியும் நபர் மற்றும் அவரது குழு தன்னை பின்தொடர்ந்து துன்புறுத்தலில் ஈடுப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவில் இந்திய மென்பொருள் பொறியாளர் அந்நாட்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் மகிபூப்நகரைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (30 வயது)
அமெரிக்காவின் சாண்டா கிளாராவில் கடந்த செப்டம்பர் 3 அன்று அவரது அமெரிக்க அறை நண்பருடன் ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சாண்டா கிளாரா காவல் துறை (SCPD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி , காலை 6:08 மணியளவில் ஒரு வீட்டிற்குள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு 911 என்ற எண்ணில் அழைப்பு வந்தது.
சந்தேக நபர் வீட்டில் ஒரு பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தியதாக அழைப்பாளர் கூறினார். SCPD அதிகாரிகள் வந்து சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் நிஜாமுதீனின் குடும்பத்தினர், அவர் இனவெறியால் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
நிஜாமுதீன், தான் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு லிங்க்ட்இன் தளத்தில் பதிவிட்ட பதிவில், கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தான் இனவெறி பாகுபாடு, துன்புறுத்தல், ஊதிய மோசடி மற்றும் சட்டவிரோத பணி நீக்கம் போன்றவற்றை எதிர்கொண்டதாகக் கூறியிருந்தார்.
மேலும், பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒரு இனவெறி கொண்ட துப்பறியும் நபர் மற்றும் அவரது குழு தன்னை பின்தொடர்ந்து துன்புறுத்தலில் ஈடுப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில், தனது உணவில் விஷம் கலக்கப்பட்டு கொலை முயற்சி நடந்ததாகவும், அநீதிக்கு எதிராகப் போராடியதால் குடியிருப்பை விட்டு வெளியேற்றப்படுவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
நிஜாமுதீனின் குடும்பத்தினர், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் உதவி கோரியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஹெச்1-பி விசா நடைமுறை இந்தியர்களுக்கு பெரிதும் பயனளித்தது
- கள்ளத்தனமாக வருபவர்களுக்கு வசதி செய்திருக்கிறோம் என்கிறார் மஸ்க்
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு உள்ளே நுழைபவர்களை தடுக்க எல்லைகளை பலப்படுவது உள்ளிட்ட பல முயற்சிகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. அதே போல், சட்டரீதியாக அனுமதி பெற்று அங்கு கல்வி பயிலவும், பணியாற்றவும் வருபவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்து பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
உலகின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு, குடியுரிமை இல்லாமல், அயல்நாட்டு பணியாளராக மட்டுமே நீண்ட காலம் அமெரிக்காவில் பணி புரிய வாய்ப்பளித்து வருவது ஹெச்1-பி விசா (H1-B visa) நடைமுறை.
இது இந்தியாவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மிகவும் பயனளித்து வந்தது.
ஹெச்1-பி விசா எண்ணிக்கைக்கும் அரசு உச்சபட்ச அளவை நிர்ணயித்துள்ளது.
கடந்த 2020 ஜூலை மாதம், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புது விசா வழங்கலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
தற்போதைய ஜோ பைடன் அரசு விசா வழங்கலில் கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை.
இந்நிலையில், சுமார் 7 லட்சத்திற்கும் மேல் திறமை வாய்ந்த பணியாளர்கள் அமெரிக்காவிற்கு வர காத்திருக்கும் நிலையில், 85 ஆயிரத்திற்கு மேல் ஹெச்1-பி விசா வழங்கப்படாது என உச்சவரம்பை அமெரிக்கா நிர்ணயித்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அதே போன்று, முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரின் ஆட்சிகளிலும் தற்போது ஜோ பைடனின் ஆட்சியிலும் சட்டவிரோதமாக உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கை குறித்து ஒப்பிட்டு தகவல் வெளியானது.
அதன்படி, கடந்த ஆட்சிகளில் 98,000 என இருந்த சட்டவிரோதமாக உள்ளே நுழைவோரின் எண்ணிக்கை தற்போதைய அதிபர் பைடன் காலத்தில் 2,42,000 என உயர்ந்துள்ளது.
இந்த விவரங்களை ஒப்பிட்டு உலகின் நம்பர் 1 கோடீசுவரரும் டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் விமர்சித்துள்ளார்.
அதில் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:
திருட்டுத்தனமாகவும், சட்டவிரோதமாகவும் அமெரிக்காவிற்கு உள்ளே நுழைவது மிக எளிதாக உள்ளது. ஆனால், சட்டரீதியாக உள்ளே நுழைய விரும்புபவர்களுக்கு அது மிக கடினமாக்கப்பட்டுள்ளது.
நாம் சட்டபூர்வ வழிமுறைகளை கடினமாக்கி, சட்டவிரோத வழிகளை எளிதாக்கி விட்டோம்.
இது அசல் பைத்தியக்காரத்தனம்.
பைடனின் நிர்வாகம் கள்ளத்தனமாக வருபவர்களுக்குத்தான் வசதி செய்து கொடுத்துள்ளது என தரவுகள் உறுதிபடுத்தி உள்ளன.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- அரசு மற்றும் பொது துறைகளில் வாரத்திற்கு 5 நாட்கள்தான் வேலை தினங்கள்
- தற்போது ஐடி துறையில் நாளைக்கு 10-11 மணி நேரம் பணியாற்றுகின்றனர்
இந்திய தகவல் தொடர்பு துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ் (Infosys). இதன் நிறுவனர்களில் ஒருவர், தற்போது 77 வயதாகும் பிரபல இந்திய கோடீசுவரரான என்ஆர் நாராயண மூர்த்தி (NR Narayana Murthy).
கடந்த 2023 அக்டோபர் மாதம், என்ஆர்என், "சில வருடங்களாவது இந்திய இளைஞர்கள் ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்" என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அப்போதே நாடெங்கும் கண்டனங்கள் எழுந்தன.
அரசு துறை, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே பணியாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் விடுமுறை உள்ளது. அவர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பணியாற்ற வேண்டிய கணக்கில், வாரத்திற்கு 40 மணி நேரம் மட்டுமே உழைக்கின்றனர்.
தனியார் துறையில் அனைத்து நிறுவனங்களிலும் சனிக்கிழமை விடுமுறை கிடையாது. அத்துறையில் பணிபுரிபவர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் பணியாற்றுகின்றனர்.
மென்பொருள் துறையில் பல வருடங்களுக்கு முன் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்றினால் போதும் எனும் நிலை இருந்தது.
கொரோனாவிற்கு பின் உலகளவில் பொருளாதாரம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதால் தங்கள் வேலையை காப்பாற்றி கொள்ள ஐடி துறை ஊழியர்கள் 10 அல்லது 11 மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.
இப்பின்னணியில் என்ஆர்என் இது குறித்து மீண்டும் பேசியுள்ளார்.
என்ஆர்என் தெரிவித்திருப்பதாவது:
தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களும் விவசாயிகளும் கடுமையாக உழைக்கின்றனர். உடல்ரீதியான உழைப்பிற்குத்தான் பெரும்பாலான இந்தியர்கள் செல்கின்றனர்.
பொருளாதாரத்தை மேலே கொண்டு வர பட்டம் பெற்று அலுவலகங்களில் அமர்ந்து பணியாற்றும் நாம், உடல்ரீதியாக கடினமாக உழைக்கும் மக்களுக்கு கடன் பட்டிருக்கிறோம் என உணர வேண்டும்.
சமூக வலைதளங்களில் பெரிதும் நான் விமர்சிக்கப்பட்டேன்.
என்னிடம் இது குறித்து பேச வந்திருந்தால் நான் என்ன தவறாக கூறி விட்டேன் என கேட்டிருப்பேன். அவர்கள் எனது துறை சார்ந்துதான் இருக்க வேண்டும் என்பதல்ல; எந்த துறையானாலும் சரி. ஆனால், அவ்வாறு யாரும் வரவில்லை.
இருந்தாலும் சில நல்ல உள்ளங்களும், அயல்நாட்டில் வாழும் இந்தியர்களும் என் கருத்தை வரவேற்றார்கள்.
நான் வாரத்திற்கு ஆறரை நாட்கள் உழைத்தவன். காலை 06:00 மணிக்கு கிளம்பி 06:20 மணிக்கு அலுவலகத்தில் இருப்பேன். மாலை 08:30 மணிக்கு மேல்தான் பணியை முடித்து புறப்படுவேன்.
நான் செய்து பார்க்காத எதையும் அறிவுரையாக பிறருக்கு கூறும் வழக்கம் எனக்கு கிடையாது.
இவ்வாறு என்ஆர்என் கூறினார்.
"என் கணவர் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்கும் வழக்கமுள்ளவர்" என அவர் மனைவி, சுதா மூர்த்தி தெரிவித்தார்.
ஓய்வின்றி உழைப்பதால் ஊழியர்களின் வேலை-வாழ்க்கை சமநிலை (work-life balance) சீர்குலைந்து விடும் என உளவியல் நிபுணர்களும், மனித வள வல்லுனர்களும் எச்சரிக்கின்றனர்.






