search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "X app"

    • பல கணக்குகள், பதிவுகளை தற்காலிகமாக முடக்குவதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • முடக்கப்பட்ட பல கணக்குகள் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையவை

    இந்திய அரசின் உத்தரவுகளை ஏற்று, இந்தியாவிற்குள் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட சில கணக்குகள், பதிவுகளை தற்காலிகமாக முடக்குவதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.

    "இந்திய அரசின் உத்தரவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து நாங்கள் தாக்கல் செய்த ரிட் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், விதிமுறைகளால் அரசின் உத்தரவை இங்கு வெளியிட முடியவில்லை என்றாலும், அதன் வெளிப்படைத்தன்மை தேவை என்பதால் இதனை பொதுவெளியில் தெரியப்படுத்துகிறோம்" என X நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    X நிறுவனத்தால் முடக்கப்பட்ட பல கணக்குகள் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையவை என 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தெரிவித்துள்ளது. 

    • எக்ஸ் தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் எலான் மஸ்க்.
    • பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.

    எக்ஸ் தளத்தில் இதுபோன்று பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் எலான் மஸ்க்.

    இந்நிலையில், எலான் மஸ்க், "எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:-

    எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

    இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×