search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெர்னார்ட் அர்னால்ட்"

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார் பெர்னார்ட் அர்னால்ட்.
    • அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தின் நிகர மதிப்பு 207.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

    உலகளாவிய ஆடம்பர பொருட்கள் நிறுவனமான LVMH இன் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான பெர்னார்ட் அர்னால்ட் இப்போது உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். எலான் மஸ்க்-யை பின்னுக்குத் தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

    LVMH இன் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட். 74 வயதான இவர், ஃபெண்டி மற்றும் ஹெனசி போன்ற பிராண்டுகளை நிறுவி அதனை பிரபலமடையவும் செய்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய ஆடம்பரமான பிராண்டாக இது பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகின் முதல் பணக்காரராக திகழ்ந்த அர்னால்ட், கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, LVMH பங்குகள் பத்து சதவீதம் வரை சரிவடைந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது. அதன் பிறகு உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எலான் மஸ்க் இருந்து வந்தார்.

    இந்நிலையில், அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தின் நிகர மதிப்பு 207.8 பில்லியன் டாலராக உயர்ந்து, உலகின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    • எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
    • 2-வது இடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்.

    டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் போன்ற பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 233 பில்லியன் டாலராக உள்ளது.

    2-வது இடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 202 பில்லியன் டாலராக உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எலான் மஸ்க் அங்கு சென்றிருந்தார். அங்கு அவரை பெர்னார்ட் அர்னால்ட் சந்தித்தார். இருவரும் மதிய உணவு விருந்தில் ஒன்றாக பங்கேற்றனர். இந்த சந்திப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பி இருந்த நிலையில், மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திராவின் மனைவிக்கு ஒரு வித்தியாசமான சந்தேகம் கிளம்பி உள்ளதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மகிந்திராவின் பதிவில், பெர்னார்ட் அர்னால்டும், எலான் மஸ்கும் சந்தித்து மதிய உணவு அருந்தி இருந்தாலும், இந்த விருந்துக்கான செலவை யார் ஏற்பது என தனது மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை பார்த்த வலைதள பயனர்கள் தங்களது கற்பனை பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    ×