search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்பேஸ்எக்ஸ்"

    • ஹெச்1-பி விசா நடைமுறை இந்தியர்களுக்கு பெரிதும் பயனளித்தது
    • கள்ளத்தனமாக வருபவர்களுக்கு வசதி செய்திருக்கிறோம் என்கிறார் மஸ்க்

    சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு உள்ளே நுழைபவர்களை தடுக்க எல்லைகளை பலப்படுவது உள்ளிட்ட பல முயற்சிகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. அதே போல், சட்டரீதியாக அனுமதி பெற்று அங்கு கல்வி பயிலவும், பணியாற்றவும் வருபவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்து பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

    உலகின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு, குடியுரிமை இல்லாமல், அயல்நாட்டு பணியாளராக மட்டுமே நீண்ட காலம் அமெரிக்காவில் பணி புரிய வாய்ப்பளித்து வருவது ஹெச்1-பி விசா (H1-B visa) நடைமுறை.

    இது இந்தியாவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மிகவும் பயனளித்து வந்தது.

    ஹெச்1-பி விசா எண்ணிக்கைக்கும் அரசு உச்சபட்ச அளவை நிர்ணயித்துள்ளது.

    கடந்த 2020 ஜூலை மாதம், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புது விசா வழங்கலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

    தற்போதைய ஜோ பைடன் அரசு விசா வழங்கலில் கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை.

    இந்நிலையில், சுமார் 7 லட்சத்திற்கும் மேல் திறமை வாய்ந்த பணியாளர்கள் அமெரிக்காவிற்கு வர காத்திருக்கும் நிலையில், 85 ஆயிரத்திற்கு மேல் ஹெச்1-பி விசா வழங்கப்படாது என உச்சவரம்பை அமெரிக்கா நிர்ணயித்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    அதே போன்று, முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரின் ஆட்சிகளிலும் தற்போது ஜோ பைடனின் ஆட்சியிலும் சட்டவிரோதமாக உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கை குறித்து ஒப்பிட்டு தகவல் வெளியானது.

    அதன்படி, கடந்த ஆட்சிகளில் 98,000 என இருந்த சட்டவிரோதமாக உள்ளே நுழைவோரின் எண்ணிக்கை தற்போதைய அதிபர் பைடன் காலத்தில் 2,42,000 என உயர்ந்துள்ளது.

    இந்த விவரங்களை ஒப்பிட்டு உலகின் நம்பர் 1 கோடீசுவரரும் டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் விமர்சித்துள்ளார்.

    அதில் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:

    திருட்டுத்தனமாகவும், சட்டவிரோதமாகவும் அமெரிக்காவிற்கு உள்ளே நுழைவது மிக எளிதாக உள்ளது. ஆனால், சட்டரீதியாக உள்ளே நுழைய விரும்புபவர்களுக்கு அது மிக கடினமாக்கப்பட்டுள்ளது.

    நாம் சட்டபூர்வ வழிமுறைகளை கடினமாக்கி, சட்டவிரோத வழிகளை எளிதாக்கி விட்டோம்.

    இது அசல் பைத்தியக்காரத்தனம்.

    பைடனின் நிர்வாகம் கள்ளத்தனமாக வருபவர்களுக்குத்தான் வசதி செய்து கொடுத்துள்ளது என தரவுகள் உறுதிபடுத்தி உள்ளன.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


    • 5000 சிறு செயற்கை கோள்களை விண்வெளியில் செலுத்தியுள்ளது.
    • ஸ்பேஸ்எக்ஸ் நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதம் என வழக்கறிஞர் கூறினார்.

    கடந்த 2002ல் அமெரிக்காவை சேர்ந்த கோடீசுவரரான எலான் மஸ்க், கலிபோர்னியா மாநிலத்தில் தொடங்கிய நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX).

    செயற்கை கோள் தயாரிப்பு, விண்வெளியில் செயற்கை கோள்களை நிலைநிறுத்துதல், விண்வெளி ஆராய்ச்சி, தொலை தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அதிவேக இணையவழி சேவைக்காக ஃபால்கன் (Falcon) எனும் ராக்கெட்டுகள் மூலம் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கை கோள்களை செலுத்துவதில் முன்னணியில் உள்ளது.

    இதுவரை, இந்நிறுவனம் 5000 சிறு செயற்கை கோள்களை விண்வெளியில் செலுத்தியுள்ளது.

    கடந்த 2022ல் ஸ்பேஸ்எக்ஸ் பணியாளர்கள் பலர், பணியிடத்தில் நிலவும் அசாதாரண சூழலை குறித்தும், எலான் மஸ்கின் பொதுவெளி நடவடிக்கைகள் குறித்தும் விமர்சித்து ஸ்பேஸ்எக்ஸ் உயர் அதிகாரி க்வைன் ஷாட்வெல் (Gwynne Shotwell) என்பவருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

    அதில் மஸ்கின் நடத்தை, நிறுவனத்தின் பரந்த நோக்கங்களுக்கு எதிராக "கவனத்தை திசைதிருப்பும் இடையூறு" என குறிப்பிட்டிருந்தனர்.

    இதை தொடர்ந்து புகார் அளித்த பணியாளர்களில் 8 பேரை ஸ்பேஸ்எக்ஸ் பணிநீக்கம் செய்துள்ளது.

    விமர்சனம் செய்ததால் தங்களை முறைகேடாக பணிநீக்கம் செய்ததாக அவர்கள் அமெரிக்காவின் தேசிய பணியாளர் நல வாரியத்திடம் புகாரளித்தனர்.

    "எந்தவித விருப்பு வெறுப்புமின்றி நிறுவனத்தின் குறிக்கோளை நிலைநாட்டவும், சக பணியாளர்களின் நலன் குறித்தும், பணியிட சூழல் வசதியை மேம்படுத்த வலியுறுத்தியும் முறையிட, பணியாளர் நல சட்டப்படி ஊழியர்களுக்கு எல்லாவித உரிமைகளும் இருந்த போதிலும் அதனை பயன்படுத்தியவர்களுக்கு எதிராக ஸ்பேஸ்எக்ஸ் நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதம்" என பணியாளர்களின் வழக்கறிஞர் டெபோரா லாரன்ஸ் தெரிவித்தார்.

    இதனையடுத்து, நல வாரியத்தின் வழக்கறிஞருடன் ஸ்பேஸ்எக்ஸ் தரப்பு வழக்கறிஞர்கள் விவாதிப்பார்கள். இதில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்தடுத்த நீதிமன்ற வழக்குகளை எலான் மஸ்க் சந்திக்க நேரிடும்.

    பணிநீக்கம் சட்டவிரோதம் என உறுதியானால், ஸ்பேஸ்எக்ஸ் மீண்டும் அவர்களை பணியில் சேர்த்து கொள்ளவும், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிவேக இணைய சேவைக்கு ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் பயன்படும்
    • 70 நாடுகளில் 2.3 மில்லியன் மக்களை ஸ்டார்லிங்க் இணைய சேவை இணைக்கிறது

    கடந்த 2002ல் உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், விண்வெளி ஆராய்ச்சிக்காக துவக்கிய நிறுவனம், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX).

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன வல்லுனர்கள், விண்வெளிக்கு மனிதர்களையும், சரக்குகளையும் கொண்டு செல்ல ஃபால்கன்-9 (Falcon-9) எனும் செயற்கை கோள் ஏவும் வாகனத்தை உருவாக்கினர்.

    இந்த ஃபால்கன்-9 மூலம் இணைய சேவைகளை வழங்கும் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன.

    ஆன்லைன் கேமிங் (online gaming) உட்பட பல அதிவேக இணைய சேவை தேவைப்படும் பயன்பாடுகளை எளிதாக்க கூடிய ஸ்டார்லிங் செயற்கை கோள்கள், 70 நாடுகளில் 2.3 மில்லியன் மக்களை இணைக்க உள்ளது.


    இந்நிலையில், 2023 வருடத்திய கடைசி பயணமாக அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்தில் இருந்து ஃபால்கனின் 96-வது பயணத்தில், 23 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களை வெற்றிகரமாக செலுத்தியதாக அதன் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ஸ்பேஸ்எக்ஸ் பதிவிட்டது.

    இந்த சாதனைக்கு ஸ்பேஸ்எக்ஸின் நிறுவனர் எலான் மஸ்க், பாராட்டு தெரிவித்துள்ளார்.

    2023 ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.

    • 2022ல் டுவிட்டரை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்
    • ராக்கெட் வெடித்து சிதறும் செய்தியையே கேட்டு கொண்டவன் நான் என்றார் மஸ்க்

    பன்னாட்டு நிறுவனங்களில், தலைமை பொறுப்பில் உள்ளவரில் தொடங்கி கடைநிலை பொறுப்பில் உள்ளவர்கள் வரை அனைத்து ஊழியர்களும் பங்கு பெறும் "ஆல் ஹேண்ட்ஸ் மீட்" (all-hands meet) எனப்படும் சந்திப்பு கூட்டங்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.

    இச்சந்திப்புகளில் நிறுவனங்களின் செயல் திட்டங்கள், வழிமுறைகள், எதிர்கால லட்சியங்கள் மற்றும் அவ்வப்போது திடீரென எழும் சிக்கல்கள் ஆகியவை உள்ளிட்ட அனைத்தும் அலசப்படும்.

    உலகின் நம்பர் 1. பணக்காரரான எலான் மஸ்க், புகழ் பெற்ற உரையாடல்களுக்கான இணையவழி சமூக வலைதளமான டுவிட்டர் (Twitter) நிறுவனத்தை 2022ல் விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் பெயரை 'எக்ஸ்' (X) என மாற்றி பல அதிரடி முடிவுகளை எடுத்து வரும் மஸ்க், தனது ஊழியர்களுடன் "ஆல் ஹேண்ட்ஸ் மீட்" ஒன்றை நடத்தினார். அந்த சந்திப்பில் மஸ்க் பல ஆச்சரியமான வழிமுறைகளை வலியுறுத்தியுள்ளார்.

    அந்த சந்திப்பில் மஸ்க் பேசியதாவது:

    நான் ஒரு விஷயத்தை வெளிப்படையாக கூற விரும்புகிறேன். இனி வரும் காலங்களில் எந்த சந்திப்புகளிலும், நிறுவனம் சம்பந்தபட்ட ஒரு கெட்ட செய்தியையாவது பணியாளர்கள் தெரிவிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கெட்ட செய்தியை கூட கூறலாம். நல்ல செய்தியை மெதுவாகவும் தாமதமாகவும் கூறுங்கள்; ஆனால், கெட்ட செய்தியை உரக்க, உடனடியாக, பல முறை கூறுங்கள். எனது 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் போது அவை பல முறை தோல்வியுற்ற செய்தியையே நான் கேட்டு கொண்டவன். ஒரு ராக்கெட் வெடித்து சிதறுவதை விட கெட்ட செய்தியை இது போன்ற நிறுவனங்கள் தந்து விட முடியாது. உங்களுக்குள்ளேயே நடைபெறும் சந்திப்புகளிலும் கூட இதை ஒரு வழிமுறையாக பின்பற்றுங்கள். எனது 'டெஸ்லா' மற்றும் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களும் சந்திப்புகளில் முதலில் கெட்ட செய்தியைத்தான் பகிர்ந்து கொள்வார்கள். அங்கெல்லாம் இந்த வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதே போல் இங்கும் நடைமுறைப்படுத்துங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதிரடி முடிவுகளுக்கு பெயர் பெற்ற மஸ்கின் வியப்பூட்டும் இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்படுகிறது.

    • எலான் மஸ்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்வில முன்னணியில் உள்ளது
    • செயற்கைக்கோள் கட்டுமான வசதியை உருவாக்க அமேசான் ஆயிரம் கோடி முதலீடு

    உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்கின் பல நிறுவனங்களில் ஒன்று ஸ்பேஸ்எக்ஸ். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், செயற்கைக்கோள் தகவல் தொடர்பிலும், விண்கல உற்பத்தியிலும் ஏவுகணை தொடர்பான சேவைகளை வழங்குவதிலும் முன்னணியில் உள்ள தனியார் நிறுவனமாக உள்ளது.

    இந்நிறுவனத்திற்கு போட்டியாக விண்வெளி இணையச்சேவையைத் தொடங்கும் தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் நாசாவுக்கு சொந்தமான கென்னடி விண்வெளி மையத்தில் ஒரு செயற்கைக்கோள் கட்டுமான வசதியை உருவாக்க சுமார் ஆயிரம் கோடி ($120 மில்லியன்) முதலீடு செய்யப்போவதாக அமெரிக்காவின் இணையதள வர்த்தக நிறுவனமான அமேசான் தெரிவித்திருக்கிறது.

    அதன் புராஜெக்ட் குய்ப்பர் எனும் திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் சேவை செய்யப்படாத மற்றும் குறைவான சேவைகளையே பெற்று வரும் சமூகங்களுக்கு வேகமான, தடையற்ற, குறைந்த விலையில் பிராட்பேண்ட் சேவைகளை அமேசான் வழங்கும்.

    இதற்காக புவியின் கீழ் சுற்றுப்பாதையில் 3200-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை அமேசான் நிறுவப்போகிறது.

    முழு அளவிலான உற்பத்தி வெளியீடுகள் மற்றும் ஆரம்ப வாடிக்கையாளர்களுக்கான "பைலட்" திட்ட செயலாக்கங்களை அடுத்த ஆண்டு அமேசான் தொடங்கும் என்று இத்திட்டத்தின் துணைத்தலைவர் ஸ்டீவ் மெட்டேயர் தெரிவித்துள்ளார்.

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், 3700-க்கும் மேற்பட்ட செயல்பாட்டு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் முதல் தொகுப்பை 2019-ல் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இத்துறையில் ஈடுபட்டு வரும் மற்றோரு நிறுவனம், இங்கிலாந்தின் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஒன்வெப். தற்போது இப்போட்டியில் அமேசானும் இறங்கியிருக்கிறது.

    இந்த 3 நிறுவனங்கள் மட்டுமல்லாமல், இணைய சேவையுடன் பல்வேறு தொழில்நுட்ப காரணங்களுக்காக சீனா - 13000, கனடா- 300 மற்றும் ஜெர்மனி- 600, ஐரோப்பிய ஒன்றியம்- 170, அமெரிக்கா- 300-லிருந்து 500

    எனும் எண்ணிக்கையில் பல நாட்டு அரசாங்கங்கள் செயற்கைகோள்களை வானில் ஏவ திட்டமிட்டிருக்கிறது.

    • விண்கலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் கடலில் தரையிறங்கியது.
    • விண்வெளி நிலையத்தில் தற்போது 7 விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    கேப் கனரவல்:

    நாசாவின் 4 விண்வெளி வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். விண்வெளி நிலையத்தில் சுமார் 6 மாத காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட அவர்கள், நேற்று பூமிக்கு திரும்பினர். அவர்களின் விண்கலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் கடலில் தரையிறங்கியது.

    விண்கலமானது, விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேறிய சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, புளோரிடாவின் ஜாக்சன்வில்லிக்கு அருகில் கடலில் பாராசூட் மூலம் இறங்கியது. பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக, ஸ்பேஸ்எக்ஸ் கடந்த வாரம் வேறு வீரர்களை அனுப்பியது. தற்போது விண்வெளி நிலையத்தில் 3 அமெரிக்கர்கள், 3 ரஷியர்கள் மற்றும் ஒரு ஜப்பானியர் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஜனவரி மாதமும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக 3 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவியது
    • ராக்கெட்டின் முதல் நிலை ஸ்பேஸ்எக்ஸ் ட்ரோன்ஷிப்பில் செங்குத்தாக தரையிறங்கியது.

    உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி தொடர்பான பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த நிறுவனம் 36 மணி நேரத்தில் 3 ராக்கெட்களை விண்ணில் ஏவி புதிய சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு ஜனவரி மாதமும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக 3 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி சாதனை படைத்து இருந்தது. தொலைத்தொடர்பை மேம்படுத்துவதற்காக புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனவெரல் விண்வெளிப் நிலையத்தில் இருந்து நேற்று தொலைத்தொடர்பு செயற்கைக் கோளுடன் 'பால்கன் 9' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

    புறப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு, ராக்கெட்டின் முதல் நிலை ஸ்பேஸ்எக்ஸ் ட்ரோன்ஷிப்பில் செங்குத்தாக தரையிறங்கியது. ராக்கெட்டில் இருந்து பிரிந்து பயணித்த செயற்கைக் கோள், திட்டமிட்டபடி ஒரு மணி 50 நிமிடங்களில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.

    ×