search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திரம்"

    • உழவு எந்திரம் மற்றும் நிலக்கடலை விதை ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு.
    • நிலக்கடலை விதைக்க விவசாயிகள் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் நாஞ்சிக்கோட்டை, மருங்குளம், குருங்குளம், வெட்டிக்காடு, திருவோணம், ஊரணிபுரம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் 50 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி நடைபெறும்.

    கார்த்திகை மாத பருவத்தில் நிலக்கடலை விதைக்க வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

    தற்போது மானாவாரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், நிலத்தை உழவு செய்வது, அடியுரம் இடுவது, சமன்படுத்துவது, நிலக் கடலையை வாங்கி அதிலிருந்து விதையை உடைத்து எடுப்பது உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறனர்.

    மானாவாரி பகுதியில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் நிலக்கடலை விதைப்புப் பணியில் ஈடுபடுவதால் உழவு இயந்திரம் மற்றும் நிலக்கடலை விதை ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நிலக்கடலை விதையின் விலையும் அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து மருங்குளம் விவசாயிகள் கூறும் போது:-

    மானாவாரி பகுதியில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை விதைத்தால் மகசூல் நன்றாக இருக்கும் என்பதால் அதிக பரப்பளவில் கடலை விதைப்பில் ஈடுபடுவோம்.

    தற்போது இந்த பட்டத்தில் மழையும் பரவலாக பெய்துள்ளதால் இதனை பயன்படுத்தி நிலக்கடலை விதைக்க விவசாயிகள் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் போதிய அளவு நிலக்கடலை விதை இல்லாததால் புதுக்கோட்டை, அரியலூர் போன்ற மாவட்டங்களில் சென்று கூடுதல் விலை கொடுத்து வாங்கி வர வேண்டி உள்ளது.

    எனவே இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு தேவையான தரமான நிலக்கடலை விதையை வேளாண்மை துறை சார்பில் வழங்க வேண்டும்.

    மேலும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நிலக்கடலை விதைக்கும் எந்திரங்களை அதிக அளவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதுடன் துறை சார்பில் வாடகைக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • மாவட்ட வருவாய் அலுவலருக்கு தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.
    • 116 பொக்லின் எந்திரங்கள், நீர் இறைக்கும் எந்திரங்கள் உள்ளிட்டவைகள் கையிருப்பில் உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் உணவு மற்றும் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ், மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது :-

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 24/7 இயங்ககூடிய அளவில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழியாக புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல், தாசில்தார் வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை கலெக்டர் நிலையிலான 10 குழுக்கள் அனைத்து ஒன்றியங்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சரக அளவிலும், கோட்ட அளவிலும் 13 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    எதிர்பாராத வகையில், புயல் சீற்றங்கள் ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தேவையான அளவு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

    மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் 1,லட்சத்து 30 ஆயிரத்து 25, மணல் மூட்டைகளும், 84ஆயிரத்து 500 சாக்குகளும் மற்றும் 5 ஆயிரம் சவுக்கு மரங்களும் தயார் நிலையில் உள்ளது.

    106 மரம் அறுக்கும் எந்திரங்கள், 116 பொக்லின் எந்திரங்கள், நீர் இறைக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • சிறிது நேரத்தில் மளமளவென பரவி தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் வாடி வாசல் கடைத்தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 62). இவர் அதே பகுதியில் தையல் கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் இவர் திருப்பதிக்கு சென்று விட்டு இன்று அதிகாலை தஞ்சைக்கு வந்தார். பின்னர் கடையை திறந்து வாசலில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென கடைக்குள் தீ பற்றியது. சிறிது நேரத்தில் மளமள வென பரவி தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. திடுக்கிட்டு எழுந்த கதிரேசன் ஓடி சென்று வாளியில் தண்ணீர் நிரப்பி ஊற்றினார்.

    இருந்தாலும் தீ மளமளவென எரிந்த தால் கட்டுப்படுத்த முடியவி ல்லை.இது குறித்து தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருந்தாலும் கடையின் பெருமளவு பகுதி எரிந்தது. தையல் எந்திரம் மற்றும் அனைத்து பொருட்கள் எரிந்து சேதமானது.

    இது பற்றிய புகாரின் பேரில் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின் கசிவால் தீப்பிடி த்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் உள்ள டீக்கடை உள்பட 3 கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த செட், மேற்கூரை உள்ளிட்டவற்றை அகற்றக்கோரி சில வாரங்க–ளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் சம்பந்தபட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆனால் முறையாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் இன்று மதியம் மாநகராட்சி நகரமைப்ப அலுவலர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர்கள் கண்ணதாசன், ஆறுமுகம், துப்புரவு ஆய்வாளர் ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.

    பின்னர் அந்த கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து இந்த பணி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • மனித கழிவுகளை அகற்றவும், கழிவு நீர் ஓடை சுத்தம் செய்யும் பணிகளிலும் மனிதர்களை பயன்படுத்த கூடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டம் அமல்படுத்தினார்.
    • பாதாள சாக்கடைத் திட்டத்தில் குழாயில் உள்ள கழிவை அகற்றும் சோதனை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் :

    மனித கழிவுகளை அகற்றவும், கழிவு நீர் ஓடை சுத்தம் செய்யும் பணிகளிலும் மனிதர்களை பயன்படுத்த கூடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டம் அமல்படுத்தினார். அதனை நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்த மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சுத்தம் செய்தல் மற்றும் கழிவு நீர் ஓடை சுத்தம் செய்தல் பணிக்கு எந்திரம் பயன்படுத்த ஆய்வு பணி இன்று நடந்தது. தனியார் நிறுவனம் மூலம் அதற்கான செய்முறை விளக்கம் நடந்தது. அதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தில் குழாயில் உள்ள கழிவை அகற்றும் சோதனை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், சுகாதார அலுவலர் ராம் மோகன், பொது சுகாதார குழு தலைவர் கலா ராணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • கனமழையால் மழைநீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது.
    • ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு மழைநீர் வடிய வைக்கும் பணி.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தோட்ட மானியத்தில் சில மாதங்களுக்கு முன்பு மயான சாலை பேவர் பிளாக் முலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளின் குறுக்கே செல்லும் வடிகால் வாய்கால்கள் பகுதி சாலை போடப்பட்டதால் குறுகியது.

    தற்பொழுது பெய்து வரும் கனமழையால் மழை நீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது இதனால்பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டன மேலும் விசப்பூச்சிகள், பாம்புகள் வருவதால் பேரூராட்சி நிர்வாகம் விரைவாக புதிதாக அமைக்கப்பட்ட சாலை குறுக்கே வடிகால் குழாய்களை அமைத்துமழை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இது குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனால் மயிலாடுதுறை சிதம்பரம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு வெட்டி மழை நீர் வடிய வைக்கப்பட்டது.

    • ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படுத்தல் எந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார எந்திரம் உள்ளிட்டவை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தூய்மை பணியாளரு–க்கென ஓய்வறை வழங்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டார்.

    அந்த அறிவிப்பை அடுத்து நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் ஆலோசனைபடி தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஓய்வறை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த ஓய்வறையை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைப்பதற்காக வருைா தந்தார்.

    திடீரென அவர் அருகில் நின்ற தலைஞாயிறு பேருராட்சி தூய்மை பணியாளர் மாரிமுத்துவைவை அழைத்து கட்டிடத்தை திறக்க வைத்தார் .கட்டிடத்தை திறந்த மாரிமுத்து ஆனந்த கண்ணீர்விட்டார்.

    ஓய்வறையை உடனடியாக கட்டிக்கொடுத்த தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகனை பாராட்டி கலெக்டர் அருண்தம்புராஜ் சால்வை அணிவித்தார்.

    அந்த ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படதையல் இயந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும்உணவு உண்பதற்கான டைனிங் டேபிள், கேரம் போர்டு, தாயங்கட்டை, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் முதலுதவி பெட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார இயந்திரம் உள்ளிட்டவை அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன், துணைத்தலைவர் கதிரவன், பேருராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் பேருராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் துப்பரவு பணியாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    கலெக்டரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தது.

    • ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை கிராமத்தில் பல விவசாய நிலங்களின் முக்கிய வடிகால் வாய்க்காலை தனிநபர் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

    அதனால் மழை காலங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்–பட்டு வந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாபநாசம் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்திருந்தனர்.

    இதுகுறித்த செய்தி மாலைமலரில் வெளியிடப்–பட்டது.

    இதனை தொடர்ந்து பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன், மெலட்டூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், சரக வருவாய் ஆய்வாளர் கணேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் வடிகால் வாய்க்காலில் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

    வடிகாலில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக அன்னப்பன்பேட்டை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் பொதுப்பணித்துறை சார்பில் ஐ.டி.ஐ வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
    • கட்டிட தொழிலாளர்கள் பணிக்கு வந்த போது அங்கு கட்டிட பணிக்காக‌ போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை வெட்டும் எந்திரம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் பொதுப்பணித்துறை சார்பில் ஐ.டி.ஐ வளாகம் கட்டப்பட்டு வருகிறது. வழக்கம் போல் கட்டிட பணியில் ஈடுபட்டு வரும் கட்டிட தொழிலாளர்கள் பணிக்கு வந்த போது அங்கு கட்டிட பணிக்காக‌ போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை வெட்டும் எந்திரம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.

    இது குறித்து பொதுப்ப ணித்துறை காண்ட்ராக்டர் மாதேஸ்வரன் பரமத்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் அருகே மகளிர் குழுவினருக்கு மிளகாய் பொடி தயாரிக்கும் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.
    • மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குதரவை ஊராட்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தலைமையில் நடந்தது.

    மகளிர் சுய உதவிக்குழுவிற்கு சுயதொழில் தொடங்கு வதற்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மிளகாய் பொடி தயாரிக்கும் எந்திரம் வழங்கப்பட்டது. பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    மகளிர்கள் மிளகாய்பொடி மற்றும் சமையல் பயன்பாட்டிற்கான பல்வேறு வகையான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் பணியை தொடங்கி உள்ளது மகிழ்ச்சி தக்க ஒன்றாகும்.

    மகளிர் குழு உறுப்பினர்கள் முழுமையாக கவனம் செலுத்தி தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவதுடன் வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்படும் பொழுது உற்பத்தி திறன் அதிகரிப்பதால் வருமானம் அதிகரிக்கும்.

    இதன் மூலம் குழு உறுப்பினர்களுக்கு போதிய வருவாய் கிடைப்பதால் வங்கியில் பெற்ற கடனை எளிதாக திருப்பி செலுத்துவதுடன் மகளிர் குழுவிற்கும் நிலையான வருவாய் கிடைக்கும். அதேபோல் வங்கியில் கடனை சரியான காலத்திற்குள் செலுத்துவதன் மூலம் மேலும் கடன் உதவிகளை வழங்க வங்கி தயாராக இருக்கும்.

    எனவே இந்த பகுதியில் ஆரம்பித்துள்ள மகளிர் குழுவினர் தயாரிக்கும் பொருளை பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதுடன், வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டு மற்ற மகளிர் குழுக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட அலுவலர் குமரேசன், பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள், தெற்குத்தரவை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சாத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • குளத்தின் வட பகுதியில் மண்ணை தோண்டி எடுக்கும் போது கற்சிலை ஒன்று தென்பட்டது.
    • உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றும் பெண்களின் நினைவாக இது போன்ற சிலைகள் வைக்கப்படுவது வழக்கம்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் உள்ள ருக்குமணி குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்போது குளத்தின் வட பகுதியில் மண்ணை தோன்றிய எடுக்கும் பொழுது கற்சிலை ஒன்று தென்பட்டது. அதனை பாதுகாப்பாக தொழிலாளர்கள் வெளியே எடுத்தனர்.

    அம்மன் சிலை போன்று தோற்றமளித்த இந்த சிலையானது ஒரு பெண் தனது இடுப்பில் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போன்று இருந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சிலையை கைப்பற்றி மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் எடுத்துச் சென்றனர்.

    முந்தைய காலத்தில் தனது உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றும் பெண்களின் நினைவாக இது போன்ற சிலைகள் வைக்கப்படுவது வழக்கம் எனவும் இந்த சிலையும் அது போன்ற ஒரு சிலையாக இருக்கும் எனவும் பெரியோர்கள் தெரிவித்தனர்.

    • கருவேல மரங்கள் அகற்றுதல் மற்றும் நெகிழி ஒழிப்புக்கு தீர்மானம் நிறைவேற்றம்.
    • மயானகரை மற்றும் கோட்டகம் செல்லும் சாலையில் உள்ள கருவேல மரங்கள் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், கட்டுமேடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையிலும், கிராம நிர்வாக அலுவலர் முகமது யூசுப், ஓவர்சியர் மகேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது.

    இதில் கருவேல மரங்கள் அகற்றுதல் மற்றும் நெகிழி

    ஒழிப்புக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானத்தின்படி ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் சாலையோரம் எல்லநாகலடி மயானகரை மற்றும் கோட்டகம் செல்லும் சாலையில் உள்ள கருவேல மரங்கள் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.

    இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாக்யராஜ், செயலர் புவனேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×