search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திரம்"

    • ரூ.1160 மற்றும் பெல்ட் வகை நெல் அறுவடை எந்திரங்களுக்கு ரூ.1880 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
    • வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏக்கர் மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.625 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக விவசாய நிலங்களை சமன் செய்யும் புல்டோசர்கள் மணிக்கு ரூ.1230, உழவுப் பணிகளை மேற்கொள்ள டிராக்டர் உடன் கூடிய இணைப்பு கருவிகளான நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம், வரப்பு செதுக்கி சேறும் பூசும் கருவி, தென்னை மட்டை தூளாக்கும் கருவி, ரோட்டவேட்டர், 5 வரிசை கொத்து கலப்பை, சட்டிக் கலப்பை மற்றும் 9 வரிசை கொத்து கலப்பை ஆகியன மணிக்கு ரூ.300ம், நெல் அறுவடைப் பணிகள் மேற்கொள்ள டயர் வகை இயந்திரங்களுக்கு ரூ.1160 மற்றும் பெல்ட் வகை நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.1880 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வாடகைக்கு வழங்கப்பட்டு வரும் மேற்காணும் கருவிகளுக்கு செலுத்தப்படும் வாடகையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது. இவற்றை விவசாயிகள் பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ளும் சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகப ட்சமாக 5 ஏக்கர் வரை பணிகளை மேற்கொள்ள அல்லது 5 மணி நேரத்திற்கு வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏக்கர் மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.1250 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.

    பாசன நினங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ளும் சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2.5 ஏக்கர் வரை பணிகளை மேற்கொள்ள அல்லது 2.30 மணி நேரத்திற்கு வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏங்கர் மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.625 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.

    மேற்கண்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தேவை ப்படும் விவசாயிகள் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்யும் சமயம் சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றையும் பதிவு செய்து பயன் பெறலாம்.

    செலுத்திய வாடகையில் மானியத்தொகையினை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மானோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர்-613 004 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    இதேபோல் கும்பகோ ணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் -612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டா ரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறி யாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை 614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • மாற்றுத்திறனாளியாயின் அதற்கான சான்று நகல் இணைக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டிற்கான சத்தியவாணி முத்து அல்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 முதல் 40 வயதிற்கு உட்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த இலவச தையல் எந்திரங்களை பெற விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் விவரம் வருமாறு :-

    வருமானச் சான்று நகல் ரூ.72,000-த்திற்குள் இருத்தல் வேண்டும். (தாசில்தாரிட மிருந்து பெறப்பட வேண்டும்). பிறந்த தேதிக்கான வயது சான்று நகல் அல்லது கல்வி சான்று நகல் வேண்டும் (வயது 20 முதல் 40 வரை இருத்தல் வேண்டும்) .

    விதவையாயின் அதற்கான சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெறப்பட வேண்டும். சாதிச் சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெற வேண்டும். கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெற வேண்டும்.

    மாற்றுத் திறனாளியாயின் அதற்கான சான்று நகல் இணைக்கப்பட வேண்டும். தையல் தெரியும் என்பதற்கான சான்று நகல் (இணைக்கப்பட்ட வேண்டும்).

    குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல். பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் 2.மேற்கண்ட ஆவணங்க ளுடன் அவரவர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக த்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலர்/ ஊர்நல அலுவலர் ஆகியோர்களை அணுகி, இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு அறை எண்.303, 3-வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மகளிர் நலனுக்காக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச தையல் பயிற்சி மையம்.
    • 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடியில் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சி மையத்தினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலினர் திறந்து வைத்து பயிற்சி உதவி பொருட்களை வழங்கினார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது :-

    தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மகளிர் உதவும் சங்கங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது .

    அத்தகைய வகையில் தஞ்சாவூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் மகர்நோன்புச்சாவடி வாடிவாசல் வைக்கோல்கார தெருவில் இலவச தையல் பயிற்சி முகாம் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த வயது முதிர்ந்த ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் மகளிர் நலனுக்காக வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் தையல் பயிற்சி அளித்திட இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் செயலாளர் முகமது ரபி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகாதேவி, ஸ்டாலின் பீட்டர் பாபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஸ்கில் இந்தியன் டெல்டாகலை திருவிழா நடைபெற்றது. ஸ்கில் இந்தியன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் போஸ் தலைமை வசித்தார். முதல்வர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாணவிகளுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோலப் போட்டி, நடனம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு செல்வராஜ் எம்.பி, நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஒன்றிய குழுத்தலைவர் பாஸ்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

    முடிவில் டெல்டா கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

    • வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
    • முடிவில் வேளாண் உதவி அலுவலர் சிந்து நன்றி கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சியில் வேளாண் எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்டத்திற்குள்ளான பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

    திருமருகல் வட்டார துணை வேளாண்மை அலுவலர் தெய்வக்குமார் வட்டாரத்தில் நடைமுறைப்படுத்தபடும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.

    வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்கள் குறித்து அலுவலர் ஏழுமலை எடுத்துரைத்தார்.

    காம்கோ கம்பெனி டீலர் சங்கரநாராயணன் தங்கள் நிறுவனத்தில் உள்ள வேளாண் எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து கூறினார்.

    முடிவில் வேளாண் உதவி அலுவலர் சிந்து நன்றி கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடு களை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரபு மற்றும் ராஜ்குமார் செய்திருந்தனர்.

    • களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணி
    • வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குழித்துறை பகுதியில் சட்டவிரோதமாக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பெரிய பெரிய பாறாங் கற்களை உடைத்து கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது குழித்துறை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் ஜாக்கிஅமர் வாகனம் ஒன்று அனுமதி இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளரும் நிலத்தின் உரிமையாளரும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதைத்தொடர்து பறிமுதல் செய்த வாகனத்தை போலீசார் காவல்நிலையம் கொண்டு சென்று வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளர் யார்? நிலத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழித்துறை பகுதியில் சமூக விரோதிகள் அதிகாரிகள் உதவியுடன் பெரிய பெரிய பாறைகளை உடைத்து கடத்துவது தொடர்கதையாக நடந்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • ரேசன்கடையில் எடை எந்திரம் சரியாக இயங்கு–திறதா?
    • புழுங்கல் அரிசி 1050 கிலோ கூடுதலாக இருப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அகரதிருநல்லூர், இலவங்கார்குடி, விளமல், தியானபுரம் ஆகிய பகுதியிலுள்ள நியாய–விலைக் கடையினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    அனைத்து நியாய விலைக்கடையில் எடை எந்திரம் சரியாக இயங்கு–திறதா என்பதையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் இருப்பு விவரம் குறித்த பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

    அதில் தண்டலை ஊராட்சி, விளமல் பகுதியில் இயங்கி வரும் நியாய விலைக்கடையில் புழுங்கல் அரிசி 1050 கிலோ கூடுதலாக இருப்பு இருப்பதனை கண்டறியப்பட்டு ரூ.26 ஆயிரத்து 250 அபாரதம் விதித்தார்.

    இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இவ்ஆய்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, தாசில்தார் நக்கீரன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியை டிரோன் எனும் எந்திரத்தை மூலம் தொடங்கி விட்டனர்.
    • 3 முதல் 4 ஏக்கர் வரை விரைவாக மருந்து தெளிக்கப்படுவதால் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வட்டத்தில் சமீபகாலமாக டிரோன் மூலம் மருந்து தெளிக்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கூலி ஆட்கள் பற்றாகுறை, கூலிதொகை உயர்வு, அதிகரித்து வரும் செலவு‌ போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்போது விவசாய பணிக்கு அதிகளவில் இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    வயல்களை உழவு செய்தல், வரப்பு சீர்செய்தல், நடவு நடுதல் உள்பட அனைத்து விவசாய தேவைக்கும் கடந்த சில வருடங்களாக அதிகளவில் இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணியிலும் டிரோன் எனும் இயந்திரத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர். டிரோன் மூலம் மணிக்கு 3முதல் 4ஏக்கர் வரை விரைவாக மருந்து தெளிக்கப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் டிரோன் மூலம் மருந்து தெளிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

    • கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பிரச்சாரம் குறித்த கூட்டம்.
    • விவசாயிகளின் பார்வைக்கு இடு பொருட்கள் மற்றும் வேளாண் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த வடகாடு கோவிலூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பிரச்சாரம் குறித்த விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் லதா ரவி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் (வே.பொ) முருகதாஸ், தோட்டக்கலை உதவி இயக்குநர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கால்நடை மருத்துவர் மகேந்திரன், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் திவ்யா, வேளாண்மை அலுவலர் சு.திவ்யா, உதவி விதை அலுவலர்கள் விஜய் கதிரேசன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் தொழில்நுட்ப தகவல்களை தெரிவித்து பேசினர்.

    மேலும், இதில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இளங்கோவன், புலவேந்திரன், கலியமூர்த்தி மற்றும் பாரத பிரதமரின் பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் கதிரவன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கப்பட்டது. விவசாயிகளின் பார்வைக்கு இடு பொருட்கள் மற்றும் வேளாண் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது.

    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • செம்மண் கடத்தியவர்கள் தப்பி சென்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே நல்லூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக நல்லூர் கிராம அலுவலர் செலஸ்டின் ராஜீக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது, அங்கு செம்மண் கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் செம்மண் கடத்த பயன்படுத்திய டெம்போ மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தவிட்டு மற்றும் உமி ஆகியவைகள் குடோனில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.
    • குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து இயங்கி வரும் இந்த அரிசி ஆலையின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் இங்கு எடுத்து வரப்பட்டு ஊறல் போடப்பட்டு உலர வைக்கப்பட்டு பின்னர் அரைக்கப்பட்டு ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆலையில் நெல் அரவை செய்யும்போது, அரவை இயந்திரத்தின் மூலம் வெளியேறும் தவிடு மற்றும் உமி ஆகியவைகள் அங்குள்ள குடோனில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியை சேமித்து வைக்கப்பட்டுள்ள குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதனை அறிந்த இரவு நேர அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று திடீரென ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உரிய நேரத்தில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பேராபத்தும் பெரும் நஷ்டமும் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கு.
    • முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஈசானிய தெருவில் அமைந்துள்ளது.

    இந்த குப்பை கிடங்கில் விற்பனை செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை பேக்கிங் செய்து எரிபொருளாக பயன்படுத்த அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்புவதற்கும் அபாயகரமான கழிவுகளை முறையான பாதுகாப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கும் குப்பைகளை அரைத்து உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் நகராட்சி மூலம் வாங்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார்.

    நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார், இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் புதிய எந்திரங்களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பாஸ்கரன், பாலமுருகன், முபாரக் அலி, ராமு, ரமாமணி, ராஜசேகர், ஜெயந்தி பாபு, கிருஷ்ணமூர்த்தி ராஜேஷ், நிர்வாகிகள் பந்தல்முத்து, திருச்செல்வன், மதியழகன், வெற்றி, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×