search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரோதம்"

    • களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணி
    • வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குழித்துறை பகுதியில் சட்டவிரோதமாக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பெரிய பெரிய பாறாங் கற்களை உடைத்து கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது குழித்துறை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் ஜாக்கிஅமர் வாகனம் ஒன்று அனுமதி இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளரும் நிலத்தின் உரிமையாளரும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதைத்தொடர்து பறிமுதல் செய்த வாகனத்தை போலீசார் காவல்நிலையம் கொண்டு சென்று வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளர் யார்? நிலத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழித்துறை பகுதியில் சமூக விரோதிகள் அதிகாரிகள் உதவியுடன் பெரிய பெரிய பாறைகளை உடைத்து கடத்துவது தொடர்கதையாக நடந்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ×