search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெகிழி"

    • நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    • நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி உழவர் சந்தை வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.10 நாணயம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் தானிய இயந்திரம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை அல்லது துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று துண்டு பிரசவங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவ ட்டத்தி லுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கள் , தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 421 மனுக்கள் பெறப்பட்டது.
    • நெகிழி மாசில்லா சுற்றுச்சூழல் மற்றும் பொருட்கள் விழிப்புணர்வு சுவரொட்டியை வெளியிட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 421 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதா ரருக்குதெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து அவர், வருவாய் துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை 2 நபர்களுக்கும், கடந்த ஆண்டு தேர் தீ விபத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகள் மற்றும் புதிய கான்கிரீட் வீடு கட்டுவதற்கான ஆணைகளை 3 நபர்களுக்கு வழங்கினார்.

    பின்னர் நெகிழி மாசில்லா சுற்றுச்சூழல் மற்றும் பொருட்கள் விழிப்புணர்வு சுவரொட்டியினை வெளியிட்டார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்கவேண்டும்.
    • அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி கூடத்தில் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமை வகித்தார்.

    ஆணையர் வாசுதேவன், நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், பொறியாளர் சித்ரா, வருவாய் ஆய்வாளர் சார்லஸ், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் முன்னிலை வகித்தனர்.

    கணக்கர் ராஜகணேஷ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன் பேசுகையில், நகர்மன்ற தலைவர், அதிகாரிகள் வார்டுகளுக்கு ஆய்வு செய்ய செல்லும்போது அந்தப் பகுதியில் உள்ள நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்து செல்லவேண்டும் என்றார்.

    முழுமதி இமயவரம்பன்:

    எனது வார்டில்கொசு த்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்கவேண்டும். பாலமுருகன்: மழைநீர் வடிகால்களில் பெரும்பா லும் செப்டிக்டேங்க் கழிவுநீர் திறந்துவிடப்படகிறது.அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    வேல்முருகன் :

    அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது இதனை முற்றிலும் தடுக்க வேண்டும்.

    நாகரத்தினம்:

    8-வது வார்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    அந்த இடத்தை மீட்க நடவடிக்கை வேண்டும்.

    ஜெயந்திபாபு:

    பதினெண் புராணேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக பணி நடைபெறுவதால் கோயிலுக்கு செல்லும் சாலையை சரி செய்ய வேண்டும்.

    முபாரக்அலி:

    பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் நலன் கருதி பாலத்தை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேவதாஸ்:

    எனது வாடுக்கு துப்புரவு பணி மேற்கொள்ள ஊழியர்கள் வருவதில்லை.

    இதனால் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இரண்டு இடங்களில் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும்.

    ராஜசேகர்:

    சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையத்தில் உள்ள மின்மோட்டார் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகை யில், ஈசான்ய தெருவில் அமைந்துள்ள எரிவாயு தகணமேடை பராமரிப்பு பணிக்கு ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

    மழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறந்து விட்டால் அபராதம் விதிக்கப்படும்.

    நகராட்சி பகுதிகளில்முதற்க ட்டமாக 79 இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்ப டவுள்ளது.

    மின்சாரவாரியம் அனுமதி பெற்று அடுத்து 37 மின்விளக்குகளும் எரியவை க்கப்படும் என்றார்.

    • கருவேல மரங்கள் அகற்றுதல் மற்றும் நெகிழி ஒழிப்புக்கு தீர்மானம் நிறைவேற்றம்.
    • மயானகரை மற்றும் கோட்டகம் செல்லும் சாலையில் உள்ள கருவேல மரங்கள் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், கட்டுமேடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையிலும், கிராம நிர்வாக அலுவலர் முகமது யூசுப், ஓவர்சியர் மகேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது.

    இதில் கருவேல மரங்கள் அகற்றுதல் மற்றும் நெகிழி

    ஒழிப்புக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானத்தின்படி ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் சாலையோரம் எல்லநாகலடி மயானகரை மற்றும் கோட்டகம் செல்லும் சாலையில் உள்ள கருவேல மரங்கள் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.

    இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாக்யராஜ், செயலர் புவனேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×