search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சப்பை"

    • கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
    • நம்ம ஊரு சூப்பரு இயக்க திட்டம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டு முழுமைக்குமான "நம்ம ஊரு சூப்பரு" இயக்க சுகாதார விழிப்புணர்வு செயல்பாடுகள் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு மேற்கொள்வது தொடர்பான செயல்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பள்ளி மற்றும் இதர அலுவலக சுகாதார பணியாளர்களை இணைக்க வேண்டும்.

    மக்களைத்தேடி மருத்துவம் மூலம் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு குறித்தும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து தோட்டங்கள், மரம் நடுதல், பசுமை தோட்டங்கள் அமைத்தல் மூலம் கிராமத்தினை பசுமையான கிராமமாக மாற்ற முயற்சிக்க வேண்டும். சுத்தம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    தூய்மை பாரத இயக்க-சுகாதார செய்திகளை கிராமிய கலை மூலம் ஊராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுய உதவிக் குழுவினரை ஈடுபடுத்தி தண்ணீர் மற்றும் சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து அனைத்து வீடுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வீடுகள் அளவில் குப்பைகளை 100 சதவீதம் தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை கடைகள் மற்றும் வியாபார தலங்களில் பயன்பாட்டினை தடை செய்தல், நெகிழிக்கு மாற்று பயன்பாட்டினை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே தண்ணீர் மற்றும் சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பட்டறிவு பயணம் மூலம் விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

    இந்த செயல்பாடுகளில் ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், சுகாதாரத்துறை, பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வித்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் என பல்வேறு துறைகளை ஈடுபடுத்தி விழிப்புணர்வு செயல்பாடுகள் நடைபெற உள்ளது. இவ்வியக்கத்தில் அனைத்து பகுதி தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், இளைஞர் மன்றத்தினர் மற்றும் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    • உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி முதலமைச்சர் சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
    • மக்காத்தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக பிரித்துப்போட வேண்டும்.

    சென்னை:

    உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் மையக்கருவாக பிளாஸ்டிக் (நெகிழி) மாசுபாட்டை வெல்லுங்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அளவற்ற, தேவையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும். மக்காத்தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக பிரித்துப்போட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
    • மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் இடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் வனம் தன்னார்வ அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் பறை இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரமும், மஞ்சப்பையும் ெபாதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    • தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் பல்வேறு திட்டங்களும் கொண்டு வரப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, தடையை மீறி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை விற்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் பல்வேறு திட்டங்களும் கொண்டு வரப்பட்டன. அதில் முக்கியமானது மஞ்சப்பை திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பை போன்ற துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக பெரும்பாலானோர் மஞ்சப் பைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மஞ்சப்பை பயன்படுத்தபவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில்களில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தானியங்கி மஞ்சப்பை எந்திரத்தை மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி திறந்து வைத்து அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கினார்.

    தற்பொழுது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் நெகிழியை பயன்படுத்தாதவாறு மஞ்சப்பையை பயன்படுத்தும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடமான மார்க்கெட் பகுதிகளில் மேலும் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் நிறுவப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ், அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன்பாரதி, அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெகநாதன் கலந்து கொண்டனர்.

    • பொது மக்கள் துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • ரூ.10 விலையில் பொது மக்கள் மஞ்சள் பைகளை பெற்றனர்.

    திருப்பூர் :

    பொது மக்கள் துணிப்பை களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நெகிழி இல்லா திருப்பூர், மாநகராட்சியாக மாற்றிட திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் மஞ்சப்பை இயந்திரம் அமைக்கப்பட்டது. இதனை இன்று திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம், தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு.நாகராசன், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், வாலிபாளையம் பகுதி செயலாளர் மு.க. உசேன் மற்றும் நிர்வாகிகள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், திறந்து வைத்த மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தின்

    மூலம் ரூ.10 விலையில் பொது மக்கள் மஞ்சள் பைகளை பெற்றனர்.இவ்வியந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 300 பைகள் நிரப்பப்படும். பைகள் தீரும் பட்சத்தில் உடனடியாக இயந்திரத்தில் பைகள் நிரப்பப்படும். ரூ.10 காசு அல்லது நோட்டுகளாக இந்த இயந்திரத்தில் செலுத்தி பொதுமக்கள் மஞ்சள் பைகளை பெறலாம்.

    • முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
    • வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெ டுத்து செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் 2022-23-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையில மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார்.

    இது ஒருமுறைபயன்ப டுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்கு விக்கவும், தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் களுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூ ழலுக்கு உகந்தமாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

    முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.

    இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டு ப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியான திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.

    இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில் (https://Tiruvarur.nic.in) கிடைக்கும். விண்ணப்பபடிவத்தில் தனிநபர், நிறுவன தலைவர் முறையாக கையொப்பமிடவேண்டும்.

    கையொப்பமிட்ட பிரதிகள் 2 மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2023 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • தற்போது குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் :

    பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவியர்கள் மீண்டும் மஞ்சப்பை தொடர் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் சுமார் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விழாவில் பங்கேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து மாபெரும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடர் சங்கிலி நடத்திய தற்காக இந்தியன் வெர்ல்ட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட உலக சாதனை விருதினை ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சகாய செல்வியிடம், கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நீர் நிலைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து அடுத்த தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் வகையில் மாணவ, மாணவிகள் அனைவரிடமும் எடுத்துக்கூற வேண்டும்.

    இதன் தாக்கத்தை நாம் அனைவரும் புரிந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்திட முன்வர வேண்டும்.

    தொடர்ந்து நமது மாவட்டத்தை பசுமை மாவட்டமாகவும், நெகிழி இல்லா குமரி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவியர்கள் கலந்து கொண்டு, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்

    நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, சமூக நல அலுவலர் சரோஜினி, ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் கில்டா, துணை முதல்வர் லீமா ரோஸ், திருப்புமுனை இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

    • நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    • நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி உழவர் சந்தை வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.10 நாணயம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் தானிய இயந்திரம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை அல்லது துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று துண்டு பிரசவங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவ ட்டத்தி லுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கள் , தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்தும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சிவன்மலை கிராமத்தில் உள்ள கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்தும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப–பட்டது.

    நிகழ்ச்சியில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா தேவி, ராகவேந்திரன், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி , துணை தலைவர் சண்முகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், காங்கயம் அரசு கலை கல்லூரி மாணவ - மாணவிகள், பொதுமக்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மீண்டும் மஞ்சப்பை , துணிபைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • சிறிய கடைகளுக்கு ரூ.1000 அபராதம் முதல் தவணையாக விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் படி தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி நெகிழி இல்லா பகுதி என அறிவித்தார்.

    அதோடு மாணவ -மாணவிகளுக்கு சாக்குகள் வழங்கி அதில் பெரிய கோவில் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தால் அதனை சேகரித்து பாதுகாப்பான இடத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மீண்டும் மஞ்சப்பை , துணிபைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும் போது துணி பைகளை கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவ- மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிக்கப்பட்டது. தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் தொடங்கி வைக்கப்பட்டது.

    அதுபோல் தஞ்சை பெரிய கோவிலிலும் உரிய அனுமதி பெற்று மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பிளாஸ்டிக் பயன்படுத்தும் பெரிய கடைகளுக்கு ரூ.25000, துணிக்கடை போன்ற கடைகளுக்கு ரூ.10000 , சிறிய கடைகளுக்கு ரூ.1000 அபராதம் முதல் தவணையாக விதிக்கப்படும்.

    மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் . பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மரக்கன்று நடுதல் மற்றும் மஞ்சப்பை வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.
    • பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மரக்கன்று நடுதல் மற்றும் மஞ்சப்பை வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

    பள்ளி வளாகத்தில் மகளிர் கலந்து கொண்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தேசிய பசுமை படை நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மற்றும் தலைமை ஆசிரியை செல்லம்மாள், பள்ளியின் தேசிய பசுமை படை ஆசிரியர் காட்சன், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
    • தமிழகம் முழுவதற்கும் ஒருங்கிணைத்து பைகள் தயாரித்து விற்பனை செய்யும்போது விலை குறையும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஊட்டி மார்க்கெட்டில் மஞ்சப்பை வினியோகிக்கும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

    இதன் செயல்பாட்டை கலெக்டர் அம்ரித் முன்னிலையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சிந்தனை செல்வன் கூறியதாவது:-

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

    நீலகிரி மாவட்டத்தில் 20 இடங்களில் மஞ்சப்பை வினியோகிக்கும் தானியங்கி எந்திரங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் எந்திரம் ஊட்டியில் உள்ள உழவர் சந்தையில் நிறுவப்பட்டது.

    தற்போது மார்க்கெட் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தில் ரூ.10 மதிப்பிலான ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்களை செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும். ஒரு பைக்கு ரூ.14 வரை செலவாகிறது. ஆனால் நாங்கள் ரூ.10க்கு விற்பனை செய்கிறோம்.

    மாவட்ட அளவில் பைகள் விற்பனை செய்யப்படுவதால், பையின் விலை கூடுதலாக உள்ளது. தமிழகம் முழுவதற்கும் ஒருங்கிணைத்து பைகள் தயாரித்து விற்பனை செய்யும்போது விலை குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×