search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் பைகளை தடுக்க நடவடிக்கை- காஞ்சிபுரம் கோவில்களில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம்
    X

    பிளாஸ்டிக் பைகளை தடுக்க நடவடிக்கை- காஞ்சிபுரம் கோவில்களில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம்

    • தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் பல்வேறு திட்டங்களும் கொண்டு வரப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, தடையை மீறி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை விற்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் பல்வேறு திட்டங்களும் கொண்டு வரப்பட்டன. அதில் முக்கியமானது மஞ்சப்பை திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பை போன்ற துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக பெரும்பாலானோர் மஞ்சப் பைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மஞ்சப்பை பயன்படுத்தபவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில்களில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தானியங்கி மஞ்சப்பை எந்திரத்தை மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி திறந்து வைத்து அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கினார்.

    தற்பொழுது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் நெகிழியை பயன்படுத்தாதவாறு மஞ்சப்பையை பயன்படுத்தும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடமான மார்க்கெட் பகுதிகளில் மேலும் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் நிறுவப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ், அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன்பாரதி, அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெகநாதன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×