search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சப்பை"

    • குறிச்சி ஊராட்சி கட்டிட வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன.
    • பின்னர், பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வனத்துறை, தேசிய பசுமை படை சார்பில் நாகை மாவட்டம் குறிச்சி ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்ட பசுமை சகா டிவைனியா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். மாவட்ட தேசிய பசுமை ப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவி ஜான்சி ராணி, கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை ஊராட்சி மன்ற உறுப்பினர் மீனாட்சி சமூக ஆர்வலர்கள் கார்த்திகேயன் மற்றும் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் பொதுமக்களுக்கு கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பில் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    திட்டச்சேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி முதல்நிலை பேரூராட்சி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் பிளாஸ்டிக் இல்லா திட்டச்சேரி பேரூராட்சி விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர்கண்ணன் முன்னிலை வகித்தார். 

    மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவியா பாரிகள் மற்றும் பொதுமக்க ளுக்கு மஞ்சப்பை, விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    இந்த பேரணி திட்டச்சேரி பேரூராட்சி வளாகத்தில் தொடங்கி திட்டச்சேரி கடைத்தெரு வழியாக கொந்தகை கடைத்தெரு வரை நடைபெற்று மீண்டும் திட்டச்சேரி பேரூராட்சி வளாகத்தில் முடிவடைந்தது.இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகம்மது சுல்தான். 

    வரித்தண்டலர் ஜெகவீரபாண்டியன் மற்றும் அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×