search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊதிய உயர்வு"

    • நாம் தமிழர் தொழிற்சங்கம் கோரிக்கை
    • ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நாம் தமிழர் ஒருங்கிணைந்த தொழிற்சங்க தலைவர் ஆல்பன், குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், நிர்வாகிகள் மரிய ஜேம்ஸ், அனீஸ் ஆகியோர் இன்று நாகர்கோவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் 1,500 நிரந்தர பணியாளர்களும், 900 தற்காலிக பணியாள ர்களும் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் பெண்களும் அடங்குவர். இந்த தொழிலாளர்கள் ரப்பர் தோட்ட பகுதியில் அரசு அனுமதித்த குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

    ஆனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படா மல் உள்ளது. இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எனவே தொழிலா ளர்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு ரூ. 40-ஐ உடனடியாக வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரப்பர் மரம் வெட்ட கொடுக்கப்பட்ட ஒப்பந்த த்தில் ஊழல் நடந்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு
    • ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் வளாகத்தில் திங்கள்கிழமைகளில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வருகிறார்கள். திங்கள் கிழமையான இன்றும் மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பொதுமக்களை போலீசார் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர்.

    குமரி மாவட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கமோகன், பொன்ராஜா, இளங்கோ, முத்துகிருஷ்ணன் உள்பட பலர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழி லாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலவதியானது. இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் தலைமையில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஏற்படுத்தப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு ரப்பர் கழக நிர்வா கம் இதுவரை அமல்படுத்த வில்லை.

    எனவே ஊதிய உயர்வை நிலுவை தொகை யுடன் உடனே வழங்க வலியுறுத்தி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். ஆனால் தற்போது வரை எந்த தீர்வும் கிடைக்க வில்லை.

    எனவே தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஆரல்வாய்மொழி கூட்டு றவு நூற்பாலையில் வெளி ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணியில் அமர்த்த ஆலை நிர்வாக முடிவு செய் துள்ளது. அந்த முடிவை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிய வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு சிறப்பு பள்ளிகள் கவுன்சில் அமைப்பின் செயலாளர் வெற்றிவேல் முருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அறிவு சார் குறைபாடு உடைய குழந்தைகள் நலன் கருதி சிறப்பு பள்ளிகளை நடத்தி வருகிறோம்.

    பல்வேறு மாவட்டங்களில் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு உள்ள சிறப்பு பள்ளிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறோம்.

    அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இங்குள்ள சிறப்பு ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான ஊதியம் மிக மிகக் குறைவு.

    மற்ற ஆசிரியர்களைப் போல அவர்களுக்கும் பல்வேறு சலுகைகளுடன் கூடிய உரிய சம்பளத்தை வழங்கும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். இதுவரை அது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

    எனவே அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற ஆசிரியர்களைப் போல சலுகைகள் உடன் கூடிய உரிய சம்பளத்தை வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சாமித்துரை ஆஜராகி, மாணவர்கள் 8 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சிறப்பு பள்ளிகளிலும் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான ஊதிய முறைகள் குறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது. அந்த உத்தரவுகளை உரிய முறையில் அமல்படுத்த வேண்டும் என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில், சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்ற ஆசிரியர்களைப் போல ஊதிய நடைமுறைகள் வழங்குவது குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    • சுதந்திர தின உரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
    • கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு.

    அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படை உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் நிரந்தர தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு
    • புதிய ஊதிய உயர்வு வழங்கும் வரை உள்ள நிலுவை தொகையை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்குவது என முடிவு

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் ஆரல்வாய் மொழி, ஆண்டிப்பட்டி, எட்டயபுரம், அறந்தாங்கி, ஊத்தாங்கரை, ராமநாத புரம் ஆகிய 6 இடங்களில் கூட்டுறவு நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 31.12.2020-ம் ஆண்டு முடிவுற்றது.

    இதையடுத்து மத்திய தொழிற்சங்கங்கள் கைத்தறி துறை உதவி இயக்குன ருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி கைத்தறி துறை அமைச்சர் முன்னிலையில் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் நிரந்தர தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வும், ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவுற்ற மாதத்தில் இருந்து புதிய ஊதிய உயர்வு வழங்கும் வரை உள்ள நிலுவை தொகையை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டதாக தொழிற்சங்கம் சார்பில் கூறப்பட்டது.

    ஆனால் அறிவிக்கப்பட்ட புதிய ஊதிய உயர்வு, நிலுவை தொகை இதுவரை வழங்கப்பட வில்லை. எனவே, புதிய ஊதிய உயர்வையும், நிலுவை தொகையையும் தொழிலாளர்கள் நலன் கருதி காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊதிய உயர்வு வழங்கிடக்கோரி துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் 102 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக நாள் ஒன்றிற்கு ரூ 385 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பெயரில் நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழி லாளர்களுக்கு ஆண்டுக்கொரு முறை ஊதியம் உயர்த்தி வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    அந்த வகையில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் ரூ 449 ஊதியம் உயர்த்தி வழங்கிட மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 மாதங்களை கடந்த நிலையில், நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு இன்னும் பழைய முறைப்படியே ரூ385 வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே இதனைக் கண்டித்து ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி ஊதியம் உயர்த்தி வழங்கிடக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சி தொழிலாளர்கள் சங்க அறந்தாங்கி கிளைச் செயலாளர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்று வருகின்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் முகமதுஅலிஜின்னா, டி ஒய்எஃப்ஐ மாவட்ட தலைவர் கர்ணா, சிபிஎம் நகரச் செயலாளர் கணேசன் 100க்கும் மேற்பட்ட ஓப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகியுள்ள நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தப்பட்ட ஊதியம் இன்னும் வீரர்களுக்கு வந்து சேரவில்லை.

    உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வருகிறது. வினோத் ராய் தலைமையிலான இந்த நிர்வாக கமிட்டி, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதில், வரவேற்கத்தக்க அம்சங்களும் இருந்தன. பல நடவடிக்கைகள் விமர்சனத்திற்கும் உள்ளாயின.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஊதிய உயர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. ஏ+ பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு 5 கோடி, பி பிரிவில் உள்ளவர்களுக்கு 3 கோடி மற்றும் சி பிரிவில் உள்ளவர்களுக்கு 1 கோடி ஆகிய முறைகளில் ஆண்டு ஊதியம் உயர்த்தப்பட்டது.


    வினோத் ராய்

    இந்த ஊதிய உயர்வையே வீரர்கள் போராடிதான் பெற்றார்கள் என அப்போது கூறப்பட்டது. குறிப்பாக கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு நிர்வாகிகள் செலவினங்களை குறைப்பதில் குறியாக இருந்தனர்.

    இந்நிலையில், நாளை இந்திய அணி இங்கிலாந்து டூர் செல்ல உள்ளது. சுமார் 3 மாதங்கள் அங்கு தங்கியிருந்து 5 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போடப்பட்ட புதிய ஊதிய ஒப்பந்தப்படி இன்னும் ஊதிய உயர்வை வீரர்கள் பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து இன்று பொறுப்பு நிர்வாகிகள் கூடி முடிவெடுக்க உள்ளதாக தெரிகிறது. எனினும், வினோத் ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டிக்கு எதிராக பொறுப்பு நிர்வாகிகள் ஒன்று திரண்டு விவாதிக்க உள்ளனர். பொறுப்பு நிர்வாகிகளின் பொதுக்குழுவில் ஊதிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை எனில், நிர்வாக கமிட்டி ஒப்புதல் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 2 வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது.
    சென்னை:

    ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு ஐகோர்ட் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. 

    செவிலியர்கள் தரப்பில் தற்போது உள்ள ரூ.7 ஆயிரம் ஊதியத்தை ரூ.22 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என குழுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

    இன்று இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 15 நாட்களில் அரசாணை வெளியிடப்படும் என தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது. மற்ற கோரிக்கை குறித்து 6 மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சுகாதார செயலர் தலைமையிலான குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
    மாநில கவர்னர்களுக்கான மாத ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனை மறுத்து பழைய ஊதியமே போதும் என சத்தீஸ்கர் கவர்னர் பால்ராம்ஜி தாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
    ராய்ப்பூர்:

    நாட்டின் அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுக்கான ஊதியம் கடந்த மார்ச் மாதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாக ஊதியம் உயர்த்தப்பட்டது. இந்த ஊதிய உயர்வு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, 26 மாதங்கள் நிலுவைத்தொகையுடன் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், சத்தீஸ்கர் கவர்னராக உள்ள  பால்ராம்ஜி தாஸ் ஊதிய உயர்வை ஏற்க மறுத்து கடந்த மாதம் கடிதம் எழுதியுள்ள நிகழ்வு தற்போது வெளியாகியுள்ளது. பழைய ஊதியமே தனக்கு போதுமானதாக இருப்பதாகவும், புதிய உயர்த்தப்பட்ட ஊதியம் தேவையில்லை என பால்ராம்ஜி தாஸ் அம்மாநில கணக்குப்பிரிவு தலைவருக்கு (தணிக்கை) கடிதம் எழுதியுள்ளார்.

    பால்ராம்ஜி தாஸின் கோரிக்கையை ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கணக்குப்பிரிவு தலைவர் பழைய ஊதியமே அவருக்கு செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
    ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வருகிற 30, 31 ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர். #Bankstrike
    சென்னை:

    வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    வங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனவே நவம்பர் மாதத்தில் புதிய ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால் போடாததால், புதிய ஊதிய விகிதம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

    இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மும்பையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை. எனவே வெறும் 2 சதவீதம் தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கடந்த மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைந்த ஓராண்டில் வங்கிகளின் மொத்த லாபம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ஆகும். பெரும் முதலாளிகள் பெற்ற வராக்கடன்களை சமாளிப்பதற்காக வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

    பெரும் முதலாளிகளை காப்பற்றுவதற்காக வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சுமையை திணிப்பது ஏற்புடையது அல்ல. இது கண்டனத்துக்குரியது.

    இந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி வருகிற 30 (புதன்கிழமை) மற்றும் 31 (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை, தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

    நாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 55 ஆயிரம் பேரும் கலந்துகொள்கின்றனர். 2 நாட்களும் எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Bankstrike #BankEmployees #Bank #Strike
    ×