search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் நிரந்தர தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு
    • புதிய ஊதிய உயர்வு வழங்கும் வரை உள்ள நிலுவை தொகையை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்குவது என முடிவு

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் ஆரல்வாய் மொழி, ஆண்டிப்பட்டி, எட்டயபுரம், அறந்தாங்கி, ஊத்தாங்கரை, ராமநாத புரம் ஆகிய 6 இடங்களில் கூட்டுறவு நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 31.12.2020-ம் ஆண்டு முடிவுற்றது.

    இதையடுத்து மத்திய தொழிற்சங்கங்கள் கைத்தறி துறை உதவி இயக்குன ருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி கைத்தறி துறை அமைச்சர் முன்னிலையில் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் நிரந்தர தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வும், ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவுற்ற மாதத்தில் இருந்து புதிய ஊதிய உயர்வு வழங்கும் வரை உள்ள நிலுவை தொகையை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டதாக தொழிற்சங்கம் சார்பில் கூறப்பட்டது.

    ஆனால் அறிவிக்கப்பட்ட புதிய ஊதிய உயர்வு, நிலுவை தொகை இதுவரை வழங்கப்பட வில்லை. எனவே, புதிய ஊதிய உயர்வையும், நிலுவை தொகையையும் தொழிலாளர்கள் நலன் கருதி காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×