search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊதிய உயர்வு"

    • ஐஐடி சென்னை மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 3 பேருடன் உருவாக்கியது பெர்ப்லெக்சிடி
    • 300 சதவீதம் ஊதிய உயர்வு ஆச்சரியம் அளிப்பதாக அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்

    இணையவழி உள்ளடக்க தேடலில் உலகின் முன்னணி தேடல் இயந்திரம் (search engine) அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் "கூகுள் தேடல் இயந்திரம்".

    கடந்த 2022 இறுதியில் தோன்றிய "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்" (Artificial Intelligence) எனும் "செயற்கை நுண்ணறிவு" தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது.

    செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT) முன்னாள் மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் 3 பேர் இணைந்து 2022ல் உருவாக்கிய நிறுவனம், பெர்ப்லெக்சிடி. இந்நிறுவனத்தின் தேடல் இயந்திரம், "பெர்ப்லெக்சிடி ஏஐ" (Perplexity AI).

    பெர்ப்லெக்சிடி நிறுவனத்தில் பணியாற்ற கூகுள் நிறுவன "தேடல்" (search) பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர், கூகுள் மேலதிகாரிகளிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.

    ஆனால், அந்த ஊழியருக்கு கூகுள், அவர் வாங்கி வரும் ஊதியத்தை விட 300 சதவீதம் அதிகம் வழங்கி அவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்டது.


    ஒரு பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மேலும் கூறியதாவது:

    செயற்கை நுண்ணறிவு துறையில் இல்லாமல் தேடல் துறை பணியாளராக இருந்தும் எங்களிடம் பணியாற்ற விரும்பிய நபரை கூகுள் மிக அதிக தொகையை ஈடாக தந்து, தக்க வைத்து கொண்டது.

    இது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

    பணிநீக்கங்களை பொறுத்தவரையில் மென்பொருள் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள்தான் குறி வைக்கப்படுவதாக தெரிகிறது.

    இவ்வாறு அரவிந்த் தெரிவித்தார்.

    கடந்த 2023 ஜனவரி மாதம் சுமார் 12 ஆயிரம் ஊழியர்களையும், சில தினங்களுக்கு முன் 1000 ஊழியர்களையும் கூகுள் நீக்க போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இப்பின்னணியில், 300 சதவீத ஊதிய உயர்வு அளித்து ஒருவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்ட செய்தியை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.

    • ஐரோப்பாவிலேயே லுஃப்தான்ஸா விமான சேவை 2-ஆம் இடம் வகிக்கிறது
    • லுஃப்தான்சா விமான நிறுவனத்தில் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்

    ஜெர்மனியின் புகழ் பெற்ற விமான சேவை நிறுவனம், லுஃப்தான்சா (Lufthansa).

    அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி செல்வதில் ஐரோப்பாவிலேயே லுஃப்தான்சா விமான சேவை இரண்டாம் இடம் வகிக்கிறது.

    லுஃப்தான்சா விமான நிறுவனத்தில் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்த விமான நிறுவனத்தின் பல்வேறு நிலையங்களில் தரை கட்டுப்பாட்டில் பணி புரியும் 25,000 ஊழியர்களுக்காக அவர்கள் இணைந்துள்ள வெர்டி (Verdi) தொழிற்சங்கம், நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

    ஜெர்மனியின் பல துறைகளை சேர்ந்த ஊழியர்களை கொண்ட மிக பெரிய தொழிலாளர் நலச்சங்கம் வெர்டி என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், இதில் சுமூக முடிவு எட்டப்படாததால், லுஃப்தான்சா விமான தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், ஃப்ராங்க்ஃபர்ட், மியூனிச், ஹாம்பர்க், பெர்லின் மற்றும் டஸ்ஸல்டார்ஃப் ஆகிய இடங்களுக்கான விமான சேவை பாதிக்கப்பட உள்ளது.

    இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள வெர்டி தொழிற்சங்கம், பிப்ரவரி 7, புதன்கிழமை காலை 04:00 மணிக்கு தொடங்கி மாலை 07:10 மணி வரை பணி நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.


    இதனால் சுமார் 90 சதவீத விமான சேவைகள் பாதிக்கப்படுவதுடன் 1 லட்சம் பயணிகளுக்கும் பயண தடை ஏற்படும்.

    வெர்டி தொழிற்சங்கம், ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 12.5 சதவீத உயர்வை கோரி போராடி வருகிறது. ஒரு-நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பயன் இல்லையென்றால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வெர்டி அறிவித்துள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே ஜெர்மனியில் விமானம், பேருந்து, ட்ராம் (tram), ரெயில், டிரக் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளிலும், விவசாய துறையிலும் பல வேலைநிறுத்த போராட்ட அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை.

    ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை இயக்குனர், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குனர், மருத்துவம், ஊரக நல பணிகள் துறை இயக்குனர் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

    • முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
    • அங்கி அணிவகுப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.செந்தில், பி. பாலகிருஷ்ணன், ஏ.ராமலிங்கம், சி.சுரேந்திரன் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களும் ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் ஏறத்தாழ 2 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், அந்த அரசாணையை மதிப்பாய்வு செய்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    அதேநேரத்தில், தற்போதைய அரசு ஊதிய உயர்வுக்காக கொண்டு வந்த அரசாணை 293-ல் சங்கங்கள் கோரிய மாற்றங்களும் மேற்கொள்ளப் படவில்லை. அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைந்த கோரிக்கைகளை அரசுக்கு அளித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்திய பிறகும், அதன் பேரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    எனவே, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 16-ந் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை முன்வெள்ளை அங்கி அணிவகுப்பு பேரணி நடத்துவது என அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றனர்.

    • பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊதிய உயர்வு வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல் லூர் அருகே உள்ள பெரிய செவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊதிய உயர்வு வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பாக அண்ணா தொழிற் சங்க தலைவரும். கூட்டமைப்பு செயலாளருமான பழனி தலைமையில் கூட்டமைப்பு தலைவர் தங்கவேல் முன்னிலையில் ஊதிய உயர்வு வழங்க கோரி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பப் பட்டன. இதில் பணியாளர் சங்கம் பொறுப்பாளர் முரளி, அண்ணா தொழிற் சங்க செயலாளர் திருவேங்கடம், பா.ம.க. செயலாளர் பழனிவேல், அம்பேத்கார் இயக்கம் செயலாளர் ஆறுமுகம் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • குப்பை களை அகற்ற 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழி யர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • நாள் ஒன்றுக்கு ரூ.442 ஊதியமாக வழங்க ப்பட்டு வருகிறது.

    கோபி, 

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் தேங்கும் குப்பைகளை அகற்ற 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழி யர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.442 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று பணியை புறக்கணித்தனர். இதையடுத்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் தேங்கிய குப்பைகள் நிரந்த ஊழியர்கள் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது. 

    • ஊதிய உயர்வு மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.527.08 கோடி கூடுதல் செலவாகும்.
    • ஊதிய உயர்வின் மூலம் பயன்பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்து 978 ஆகும்.

    சென்னை:

    சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்களுடன் ஊதிய விகித உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நேற்று இரவு 5 மணி நேரம் நடைபெற்றது.

    உடன் மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குனர் ரா.மணிவண்ணன், இயக்குனர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன், செயலாளர் ஆ.மணிக்கண்ணன், தொழிலாளர் நலன் கூடுதல் ஆணையர் எம்.சாந்தி, உயர் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 19 மின் வாரிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மின்சார வாரிய ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அன்று பெறும் ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற முடிவுக்கு நிர்வாகமும், தொழிற்சங்கங்களும் ஏற்றுக்கொண்டு உள்ளன. அதேபோல், 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அன்று 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக அன்றைய தேதியில் இருந்து பெறும் ஊதியத்தில் 3 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்பதற்கும் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.

    ஊதிய உயர்வு மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.527.08 கோடி கூடுதல் செலவாகும்.

    இந்த ஊதிய உயர்வு மூலம் ஏற்படும் நிலுவைத் தொகை 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி முதல் கருத்தியலாகக் கணக்கிட்டு 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் பணப்பலன்கள் வழங்கவும், அதே தேதியில் இருந்து வருகிற 31-ந்தேதி வரை வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை 2 தவணைகளாக அதாவது முதல் தவணை வருகிற ஜூன் மற்றும் 2-வது தவணை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்த நிலுவைத் தொகை ரூ.516.71 கோடியாகும். 28 மாதத்திற்கான நிலுவைத் தொகையில் ஒவ்வொரு பணியாளருக்கும் குறைந்தபட்சம் தொகுக்கப்பட்ட நிலுவைத் தொகையாக ரூ.500 வீதம் கணக்கிட்டு இந்நிலுவைத் தொகையை 2 தவணைகளாக வழங்கப்படும். இதற்காக ரூ.106 கோடி கூடுதல் செலவாகும்.

    ஊதிய உயர்வின் மூலம் பயன்பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்து 978 ஆகும். 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக 3 சதவீதம் ஊதிய உயர்வு மூலம் பயன்பெறும் பணியாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 548 ஆகும். சராசரியாக வாங்கும் சம்பளத்தில் 9 சதவீதம் அதிகமாக வழங்கப்படும். வேலைப்பளு குறித்த ஒப்பந்தம் தொழிற்சங்கங்களுடன் பின்னர் பேசி முடிவு எடுக்கப்படும்.

    இந்த முடிவை அனைத்து தொழிற்சங்கங்களும் மனமகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டு நன்றி தெரிவித்து கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு, பதவி உயர்வை மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வருவாரா? என முன்னாள் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
    • இதற்கான அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என்றார்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பிரமுகருமான டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    நாட்டின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருகிறது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தரமான மருத்துவ சிகிச்சையை குறைந்த செலவில் பெறபலரும் தமிழகத்திற்கு வருகிறார்கள்.

    நமது மாநிலம் சுகாதாரத் துறையில் முன்னணி மாநில மாக திகழ்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு பலரது பாராட்டையும் பெற்று தந்தார். தமிழக மக்களுக்கும் குறைந்த கட்ட ணத்தில் தரமான சிகிச்சை கிடைக்க அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

    ஆனால் தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தங்கள் ஊதிய, பதவி உயர்வுக்காக தொடர்ந்து போராட வைக்கப்படுகிறார்கள். இது நியாயமா? தற்போதுள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடித்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை 5, 9, 11, 12 ஆண்டு கள் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்று கடந்த 2009-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் கருணா நிதி ஆட்சியின்போது அர சாணை பிறப்பிக்கப்பட்டது.

    மத்திய அரசு மருத்து வர்கள் 4, 9, 13, 20 ஆண்டுகள் கழித்து ஊதிய, பதவி உயர்வு பெறுகின்றனர். அவர்க ளுக்கு 7-வது ஊதிய குழுவில் 14-வது ஆண்டில் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் அடிப்படை ஊதியமாக பெறுகிறார்கள். மத்தியஅரசு மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் குறைந்தது 15 அல்லது 20 ஆண்டுகள் கழித்து பெறுகின்ற நிலை உள்ளது. இதன் காரணமாக மாநில அரசு மருத்துவர் ரூ.86 ஆயிரம் மட்டுமே அடிப்படை ஊதியமாக பெறுகிறார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இதுதொடர்பாக சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர், எனது கோரிக்கைக்கு ஆவண செய்யப்படும் என பதில் அளித்தார். ஆனால் கொரோனா காரணமாக காலதாமதமானது. கடந்த 2009-ம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னையில் மருத்துவர்கள் உண்ணா விரத போராட்டம் நடத்தி னர்.

    அப்போது மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சி அமைந்தவு டன் கோரிக்கை நிறைவேற் றப்படும் என உறுதி அளித்தார். தி.மு.க. ஆட்சி அமைத்து 1½ வருடம் ஆகியும் மருத்துவர்களின் நியாயமான ஊதிய, பதவி உயர்வு நிறைவேற்றப்படவில்லை. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுக்க 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.
    • மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள், பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நிலையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களிடம் ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைக்க 2021 நவம்பரில் இல்லம் தேடி கல்வி மையங்கள் துவங்கப்பட்டன.தமிழகம் முழுக்க 1.80 லட்சம் மையங்களில் 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.

    இவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. மாலை நேர வகுப்பு மட்டுமல்லாமல், அரசுப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவிலும், தன்னார்வலர்கள் உறுப்பினராக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இல்லம் தேடி கல்வி மைய ஆலோசகர் லெனின் பாரதி கூறுகையில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அறிவியல் கண்காட்சி, கற்பித்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றல், தனித்திறன் போட்டிகள் நடத்துதல், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு கல்விசார் பணிகள், தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஊதியத்தை 2 ஆயிரமாக உயர்த்தி தர ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    • அனைத்து பாத்திரத்தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டிக் கூட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு. பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து சங்கங்களின் தலைவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.

    அனுப்பர்பாளையம், டிச. 22 -

    திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 200- க்கும் மேற்பட்ட எவர்சில்வர், பித்தளை, செம்பு உள்ளிட்ட பாத்திர பட்டறைகள் உள்ளன. அங்கு பாத்திர தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் முடிவடைய உள்ளது.

    இந்த நிலையில் அனைத்து பாத்திரத்தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டிக் கூட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு. பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், பாத்திரத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து சங்கங்களின் தலைவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.

    இதன் முடிவில் எவர்சில்வர் வகை பாத்திரத்திற்கு 50 சதவிகிதமும், பித்தளை, தாமிரம், வார்பு பொருட்களுக்கு 60 சதவிகிதமும், ஈயப்பூச்சுக்கு 70 சதவீதமும் ஊதிய உயர்வு கேட்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதுகுறித்து எவர்சில்வர் பாத்திரப் பட்டறைதாரர் சங்கத்திற்கும், பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திற்கும் கோரிக்கைக்கடிதம் அனுப்புவது என்றும், தொழிலாளர் துறைக்கும் கோரிக்கை கடிதம் அனுப்புவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

    • மாற்றத்திறன் படைத்த குழந்தைகளுக்கென சிறப்பாசிரியர்கள் மூலம் பிரத்யேக பயிற்சி கல்வி வழங்கப்படுகிறது.
    • சைகை மொழி பேச்சு, பிரெய்லி எழுத்துக்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.

    திருப்பூர் : 

    அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் உள்ள பன்முகத் திறமையை வெளிக்கொணர பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலை விழா நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளை சமுதாயத்தில் இருந்து மாறுபடுத்தி காண்பிக்காமல் அவர்களுக்கும் உள்ளடக்கிய கல்வி வழங்க பள்ளிக்கல்வித்துறை ஊக்குவித்து வருகிறது.

    அதன்படி மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளையும், சாதாரண நிலையில் கல்வி பயிலும் பிள்ளைகளுடன் இணைத்து கல்வி கற்பிக்க செய்வதே உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் நோக்கமாகும். சாதாரண குழந்தைகளுடன் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளின் தன்மைகேற்ப அவர்களை பழக்கப்படுத்துவது, அமர வைப்பது, சிறப்பாசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்க செய்வது உள்ளிட்ட பணிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

    ஏற்கனவே ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் சார்பில் வட்டார அளவில் மாற்றத்திறன் படைத்த குழந்தைகளுக்கென சிறப்பாசிரியர்கள் மூலம் பிரத்யேக பயிற்சி கல்வி வழங்கப்படுகிறது. சைகை மொழி பேச்சு, பிரெய்லி எழுத்துக்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.

    சிறப்பு கல்வி வழங்குவது, இயன்முறை மருத்துவம், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்குவது உள்ளிட்ட பணிகளை சிறப்பு பயிற்றுனர்கள் செய்து வருகின்றனர். ஆனால் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு மெத்தனம் காண்பித்து வருவதாக அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் சிறப்பு பயிற்றுனர்களுக்கு தற்காலிக பணி ஆணை, அடிப்படை பணிச்சலுகை கூட வழங்கப்படுவதில்லை. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் ஒன்றரை ஆண்டுகளில் மூன்று முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், உள்ளடக்கிய சிறப்பு பயிற்றுனர்களுக்கு 4 ஆண்டில் ஒரு முறை கூட ஊதியம் உயர்த்தப்படவில்லை.உள்ளடக்கிய கல்வி தகுதி பெற்ற சிறப்பு பயிற்றுனர்களை மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

    இக்கோரிக்கையை முன்வைத்து மாவட்ட கலெக்டர்களிடம் மனு வழங்குவது, முற்றுகை போராட்டம் நடத்துவது என அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாக திருப்பூர் மாவட்ட சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • பொதுவாக வடகிழக்கு பருவ மழை ஓய்ந்த பின்னர் நவம்பர் மாதம் 2 வது வாரம் மற்றும் டிசம்பர் மாதங்கள் ரப்பர் பால் சீசன் ஆகும்
    • தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீ லினை செய்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

    கன்னியாகுமரி:

    அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களின் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி தொழிலாளர் துறை, வனத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ஆகிய 3 துறை அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தினசரி ரூ.40 ஊதிய உயர்வு வழங்குவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தமாக மாற்றப்படாமலும், ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் 3 அமைச்சர்கள் முன்னி லையில் ஒப்பு கொள் ளப்பட்ட ரூ.40 ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

    இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் தினந்தோறும் தொழிலாளர்கள் ரப்பர் கழக கோட்ட மேலாளர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் 18-வது நாளாக நேற்று வேலை நிறத்தம் நடைபெற்ற நிலையில், கோதையாறு, சிற்றாறு, மணலோடை மற்றும் கீரிப்பாறை கோட்ட மேலாளர்கள் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் காத்திருப்புப் போராட் டங்கள் நடைபெற்றன.

    பொதுவாக வடகிழக்கு பருவ மழை ஓய்ந்த பின்னர் நவம்பர் மாதம் 2 வது வாரம் மற்றும் டிசம்பர் மாதங்களில் ரப்பர் பால் சீசன் என்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் காரணமாக ரப்பர் கழகத்திற்கு தினம்தோறும் தமிழக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவ தாக கூறப்படுகிறது. இதைப் போன்று தொழிலா ளர்களுக்கு ஊதிய இழப்பும் ஏற்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் தினமும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவரமாக நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீ லினை செய்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

    இந்நிலையில் கால வரையற்ற வேலை நிறுத் தித்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதர வாக கன்னியாகுமரி மாவட்ட சி.ஐ.டி.யூ. தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் குலசேகரம் அரசமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்தில் சங்க பொதுச் செயலாளர் வல்சகுமார், தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×