search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wage hike"

    • பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊதிய உயர்வு வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல் லூர் அருகே உள்ள பெரிய செவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊதிய உயர்வு வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பாக அண்ணா தொழிற் சங்க தலைவரும். கூட்டமைப்பு செயலாளருமான பழனி தலைமையில் கூட்டமைப்பு தலைவர் தங்கவேல் முன்னிலையில் ஊதிய உயர்வு வழங்க கோரி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பப் பட்டன. இதில் பணியாளர் சங்கம் பொறுப்பாளர் முரளி, அண்ணா தொழிற் சங்க செயலாளர் திருவேங்கடம், பா.ம.க. செயலாளர் பழனிவேல், அம்பேத்கார் இயக்கம் செயலாளர் ஆறுமுகம் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • 29.5 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பித்தளை, செம்பு, வார்ப்பு பாத்திரங்கள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து பின்னர் உற்பத்தியாளர்களுடன் பேசி முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமர–ம்) செந்தில்குமரன் முன்னிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பாத்திர வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் மனோகரன், செயலாளர் முத்தையா, பொருளாளர் குமார் உள்ளிட்டவர்களும், தொழிற்சங்கம் சார்பில் கண்ணபிரான், தேவராஜ் (ஏ.டி.பி.), குப்புசாமி, குருணாமூர்த்தி (சி.ஐ.டி.யு.), வேலுச்சாமி, ரத்தினசாமி (எல்.பி.எப்.), செல்வராஜ், நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), திருஞானம், அப்புக்குட்டி (எச்.எம்.எஸ்.), பரமேஸ்வரன், அசோக் (ஐ.என்.டி.யு.சி.), சீனிவாசன், லட்சுமிநாராயணன் (பி.எம்.எஸ்.), அர்ஜூனன், ஆறுமுகசாமி (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்கப்பட்டது. தொழில் அமைதி ஏற்படுத்தும் வகையில் இருதரப்பினர் ஏற்றுக்கொண்டபடி ஒப்பந்தமானது. அதன்படி பித்தளை, செம்பு, வார்ப்பு அயிட்டங்கள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கூலியுடன் 22.5 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். பித்தளை ஈயப்பூச்சு அயிட்டமான டேசாவுக்கு 29.5 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இந்த கூலி உயர்வு 1-1-2023 முதல் 3 ஆண்டுகளுக்கு அதாவது 31-12-2026 வரை அமலில் இருக்கும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதுபோல் எவர்சில்வர் பாத்திர உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திருப்பூர் வட்டார முழு கூலி பட்டறைதாரர்கள் சங்கம் தரப்பில் தலைவர் துரைசாமி, துணை தலைவர்கள் குமாரசாமி, மதிவாணன், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். தொழிற்சங்கம் தரப்பில் வேலுச்சாமி (எல்.பி.எப்.), ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.), தேவராஜ் (ஏ.டி.பி.), நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), அப்புக்குட்டி (எச்.எம்.எஸ்.), சீனிவாசன் (பி.எம்.எஸ்.), அசோக் (ஐ.என்.டி.யு.சி.), அர்ஜூணன் (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    எவர்சில்வர் பாத்திர தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தற்போது 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் கூலியுடன் சேர்த்து 16 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும். இந்த கூலி உயர்வு 1-1-2023 முதல் வருகிற 31-12-2026 வரை அமலில் இருக்கும் என்று ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    • நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
    • மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.


    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மே ளன தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான ராஜேந்திரன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

    கைத்தறி நெசவு தொழில் என்பது நூற்றாண்டு பாரம்பரிய மிக்க அரிய குடிசை தொழில். சிறு தொழிலாகும். தற்சமயம் கைத்தறி நெசவு கூட்டுறவு அமைப்பின் கீழ் அரசை நம்பி மட்டுமே நடந்து வருகிறது.

    தொழில்துறை மாற்றங்கள் மற்றும் நவீன விசைத்தறிகளின் வருகை யால் கைத்தறி நெசவை மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு கொண்டு சென்று உள்ளது.

    தொழில் துறை மாற்ற ங்கள் ஒருபுறம் இருந்தாலும் அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றளவும் கிடைக்க பெறாததும் கைத்தறி நெசவின் அழி விற்கு முக்கிய காரணமாகும்.

    எனவே நெசவாளர்களது உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெற்று தர வேண்டியது நம் எல்லோ ருடைய முக்கிய கடமை யாகும். நெசவாளர்களுக்கு கூலியை அரசுதான் வழங்கி வருகிறது.

    நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

    நெசவாளர் சங்கங்களில் நிதி ஆயிரத்திலிருந்து தான் கூலி வழங்கபடுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். நெசவாளர் ஊதியத்திற்கும், அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் எதற்காக ஊதிய உயர்வு வழங்கும் நிலையை அரசு தன்கட்டுப் பாட்டில் வைத்து கொண்டு உள்ளது.

    ஊதிய உயர்வை வழங்கும் நிலையை அரசு தன் கட்பாட்டிலிருந்து மாற்றி கூட்டுறவு சங்கங் களின் மண்டல அல்லது சரக அளவில் முடிவு செய்து கொள்ள உரிய அனுமதியை உடனடியாக வழங்கிட தங்களை அன் போடு கேட்டுக் கொள்கிறோம்.

    இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரில் கைத்தறி நெசவா ளர்களுக்கு 20 சதவீத கூலி உயர்வை வழங்க அரசானை வெளியிட ஆவண செய்ய வேண்டும்.

    தற்சமயம் தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு எவ்வித மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.

    கடந்த காலங்களில் மாநில அரசின் பங்களிப்போடு மத்திய அரசின் மூலம் ஆண்டு ஒன்றிக்கு ரூ.30 ஆயிரம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது.

    தற்சமயம் கைத்தறி நெசவில் ஈடுபட்டு உள்ளவர்கள் 60 வயதை நெருங்கியவர்களும் அதனை தாண்டியவர்களும் உள்ளனர்.

    மருத்துவ செலவினங்களுக்காக மாதம் ஒன்றுக்கு குறைந்தது ரூ.300 வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

    இதை அறிந்து தான் தமிழக அரசே நெசவாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடைமுறை படுத்த கடந்த ஆண்டே அறிவிப்பு வழங்கி இருந்தது.

    எனவே இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலாவது புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி அரசைமட்டும் நம்பி வாழும் தமிழக கைத்தறி நெசவா ளர்கள் குடும்பங் களை காப்பாற்ற வேண்டுகி–றோம்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    2014-ம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் சொர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

    அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற மறுநாள் ஊதிய உயர்வுக்கான நாளாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத உயர்வை வழங்கலாம் என்று 2014-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2014 டிசம்பர் 31-ந்தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது.

    தற்போது இந்த சலுகை 2014 டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு ஓய்வுபெற்றவர்களுக்கும் பொருந்தும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சலுகையை மாநிலம் முழுவதும் உள்ள ஓய்வுபெற்ற ஊழியர்கள் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து இந்திய வங்கிகள் சங்கம், அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினரும் இன்று மும்பையில் மீண்டும் சந்தித்து சம்பள உயர்வு தொடர்பாக விவாதிக்கின்றனர். #BankUnion #WageHike
    மும்பை:

    இந்தியாவில் உள்ள பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்திய வங்கிகள் சங்கம் சம்பள நிர்ணயம் செய்கிறது. வங்கி ஊழியர்களின் 2-ம் கட்டத்துக்குரிய சம்பளத்தை நிர்ணயிக்க பேச்சுவார்த்தை கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. ஆனால் வங்கிகள் சங்கம் 2 சதவீத அளவிற்கே ஊதிய உயர்வு அளிக்க முடியும் என்று கூறியது. இதனால் அதிருப்தி அடைந்த வங்கி ஊழியர்கள் மே மாத இறுதியில் நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கம், அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினரும் இன்று (திங்கட்கிழமை) மும்பையில் மீண்டும் சந்தித்து சம்பள உயர்வு தொடர்பாக விவாதிக்கின்றனர். இதுபற்றி ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் மராட்டிய மாநில அமைப்பாளர் தேவிதாஸ் கூறுகையில், “எங்களது கோரிக்கை 25 சதவீத ஊதிய உயர்வு. என்றபோதிலும் எங்கள் நிலையில் இருந்து இறங்கி வரத் தயாராக இருக்கிறோம். இதுவரை சம்பள உயர்வு இரட்டை இலக்க சதவீதத்தில்தான் வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கையில் வங்கிகள் நிர்வாகம் 2 சதவீதம்தான் தர முடியும் என்று கூறுவதை ஏற்க இயலாது” என்றார்.  #BankUnion #WageHike #tamilnews 
    ×