என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊதிய உயர்வு கேட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
- குப்பை களை அகற்ற 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழி யர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- நாள் ஒன்றுக்கு ரூ.442 ஊதியமாக வழங்க ப்பட்டு வருகிறது.
கோபி,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் தேங்கும் குப்பைகளை அகற்ற 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழி யர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.442 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று பணியை புறக்கணித்தனர். இதையடுத்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் தேங்கிய குப்பைகள் நிரந்த ஊழியர்கள் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
Next Story






