search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளாட்சி தேர்தல்"

    • சிவகாசி யூனியனில் காலியாக இருந்த 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இன்று தேர்தல் நடந்தது.
    • சிவகாசி யூனியனில் தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகர, கிராம உள்ளாட்சி அமைப்புகளில் 25 பதவிகள் காலியாக இருந்தன. இதற்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி வேட்பு மனு பெறப்பட்டது.

    இதில் 14 கிராம ஊராட்சி வார்டு பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 11 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மேற்கண்ட 11 இடங்களுக்கு 38 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

    இன்று மேற்கண்ட பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 28 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். சில இடங்களில் மந்த நிலை காணப்பட்டது.

    28 வாக்குச்சாவடிகளில் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்ட 9 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சி.சி.டி.வி. கேமிரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் 7 ஆயிரத்து 202 ஆண்களும், 7 ஆயிரத்து 664 பெண்களும், இதரர் 1 என மொத்தம் 14 ஆயிரத்து 867 பேர் வாக்களிக்கின்றனர்.

    சிவகாசி யூனியனில் காலியாக இருந்த 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இன்று தேர்தல் நடந்தது. சிவகாசி யூனியனில் தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    2795 ஆண்களும், 2990 பெண்கள் என மொத்தம் 5785 வாக்காளர்கள் ஓட்டுபோடுகின்றனர். இன்று அதிகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் 9 வாக்குசசாவடிகளில் பணியமர்த்தப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

    • அம்பை யூனியன் வாகைகுளம் ஊராட்சியில் 8-வது வார்டு, சேரன்மகாதேவி யூனியன் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டு ஆகியவற்றில் போட்டி இருந்ததால் அங்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
    • மேலப்பாவூர் கிராம ஊராட்சியின் 1-வது வார்டு உறுப்பினர் மரணம் அடைந்ததால் அந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் விடுபட்ட ஊரக உள்ளாட்சிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விடுபட்ட காலியிடங்களில் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் காலியிடங்களுக்கான தற்செயல் தேர்தல் கடந்த மாதம் 20-ந்தேதி அறிவிக்கப்பட்டு இன்று நடைபெற்றது.

    மாவட்டத்தில் மொத்தம் 7 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுவதாக இருந்த நிலையில் களக்காடு யூனியன் படலையார்குளம், மானூர் யூனியன் சுண்டங்குறிச்சி, பாளை யூனியன் கீழப்பாட்டம், பாப்பாக்குடி யூனியன் திருப்புடைமருதூர், வள்ளியூர் யூனியன் ஆனைகுளம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

    இந்நிலையில் அம்பை யூனியன் வாகைகுளம் ஊராட்சியில் 8-வது வார்டு, சேரன்மகாதேவி யூனியன் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டு ஆகியவற்றில் போட்டி இருந்ததால் அங்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த வாக்குகள் அனைத்தும் வருகிற 12-ந்தேதி காலை 8 மணிக்கு அந்தந்த யூனியன் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி யூனியன், உமரிக்கோட்டை, செய்துங்கநல்லூர், பராக்கிரமபாண்டி, பிச்சிவிளை, வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்து, பிடாநேரி, கோமாநேரி, சுரைக்காய்பட்டி, சிதம்பரபட்டி, ஜெகவீரபாண்டியபுரம், ஜமீன் கோடாங்கிபட்டி, கீழ்நாட்டுக்குறிச்சி, மாதலாபுரம் ஆகிய பகுதிகளில் 16 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிச்சிவிளை ஊராட்சி 6-வது வார்டில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

    இதைத்தொடர்ந்து அகரம், குறிப்பன்குளம், வெள்ளானகோட்டை ஆகிய பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 10 பேரும், மறவன்மடம் பஞ்சாயத்து 2-வது வார்டு, முடிவைத்தானேந்தல் பஞ்சாயத்து 8-வது வார்டு, பிச்சிவிளை பஞ்சாயத்து 2-வது வார்டு, 3-வது வார்டு, வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்து 9-வது வார்டு, வெள்ளாளன்விளை பஞ்சாயத்து 1-வது வார்டு, சந்திரகிரி பஞ்சாயத்து 6-வது வார்டு ஆகிய 7 வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 16 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் பதிவாகும் வாக்குகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைத்து எண்ணுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பாவூர் கிராம ஊராட்சியின் 1-வது வார்டு உறுப்பினர் மரணம் அடைந்ததால் அந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இந்த வார்டில் மொத்தம் 550 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதனையொட்டி மேலப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குசாவடியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.

    • உள்ளாட்சி ேதர்தலில் போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மீதமுள்ள 6 பதவிக்கு 29 பேர் போட்டியிட்டுள்ளனர். இதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ள கவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதம் உள்ள 6 பதவிகளுக்கு நாளை 9ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியிடுகிறார்.

    மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.

    இதற்கான பிரசாரம் நேற்று ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகி–றார்கள்.

    சேலம் ஒன்றியம் 8வது வார்டில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஊராட்சி மன்ற வார்டுகளுக்கும் வார்டுக்கு ஒரு வாக்குச்சவாடி அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இன்று மாலைக்க ள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபடுகிறார்கள்.

    • தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 9-ந் தேதி அன்று காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும்
    • முககவசம் அணிந்து வருவதுடன் போதிய தனிநபர் இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்கவும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

    குமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் 30 வரை ஏற்பட்ட காலியிடங்களுக்கு வரும் 9-ந் தேதி அன்று தற்செயல் தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 10-க்கான வார்டு உறுப்பினர், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 7-க்கான வார்டு உறுப்பினர், மருதூர்குறிச்சி கிராம ஊராட்சி வார்டு எண் 5-க்கான வார்டு உறுப்பினர், கண்ணனூர் கிராம ஊராட்சி வார்டு 4-க்கான வார்டு உறுப்பினர் மற்றும் காட்டாத்துறை கிராம ஊராட்சி வார்டு எண்.5 வார்டு உறுப்பினர்ஆகிய காலி பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தல் வரும் 9-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது.

    தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 9-ந் தேதி அன்று காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிமுதல் 6 மணி வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ள வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

    தற்செயல் தேர்தலுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வருவதுடன் போதிய தனிநபர் இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அனைத்து வகையான பிரசாரங்களையும் இன்று (7-ந் தேதி) மாலை 6 மணியுடன் நிறுத்த வேண்டும் என்பதை அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் சம் பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்ட்டுள்ள பாதுகாப்பறையில் காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்படும். வாக்குகளின் எண் ணிக்கை ஜூலை 12-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டு, முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் இடங்களில் இன்று காலை 10 மணி முதல் வாக்குபதிவு நடைபெறும் நாளான 9-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மதுபான கூடங்கள் செயல்படாது.

    அதுபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மதுபான கூடங்கள் 12-ந் தேதி அன்றும் செயல்படாது.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்த னர்.
    • வருகின்ற 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்த னர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.

    இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு– 4, நம்பியூர் யூனியன் கெட்டி செவியூர் பஞ்சாயத்து வார்டு எண்– 10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 5, பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்– 4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்– 11, கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 1, புஞ்சைளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்– 3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண் –2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    இதுதவிர அம்மா பேட்டை யூனியன் சிங்கம் பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்–2-ல் 2 பேர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்– 3-ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 3-ல் 2 பேர், கோபிசெட்டி பாளையம் யூனியன் கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண் –1-ல் 2 பேர்,

    மொடக்குறிச்சி யூனியன் 46 புதூர் பஞ்சாயத்து வார்டு எண்– 1-ல் 4 பேர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–3-ல் 3 பேர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்– 2-ல் 3 பேர் என 7 பதவிக்கு 20 பேர் போட்டியில் உள்ளனர்.

    இந்த பகுதியில் வருகின்ற 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.

    • தி.மு.க சார்பில் சந்திரா மாதையன், பா.ம.க., அருண்மூர்த்தி, தே.மு.தி.க. அசோக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
    • இடைத்தேர்தல் கட்சி சின்னம் பெறுவதில் ஏற்பட்ட குழப்பத்தால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் 17-வது வார்டு கவுன்சிலராக இருந்த தி.மு.க பிரமுகர் மாதையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார்.

    இதையடுத்து இடைத்தேர்தல் வரும் 9-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் பரிசீலனை செய்து 13 பேர் வேட்பு மனு ஏற்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வில் கட்சி சின்னம் தொடர்பாக நிலவி வரும் குழப்பத்தால் அதி.மு.க. சார்பில் வேட்பு மனு செய்தவர்கள் நேற்று மனுவை வாபஸ் பெற்றனர்.

    இதே போல் பா.ஜ.க. வேட்பாளர் உள்பட 10 பேர் வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் பி.டி.ஓ கிருஷ்ணன் தலைமையில் அலுவலக வளாகத்தில் ஒட்டப்பட்டது.

    இதன்படி, தி.மு.க சார்பில் சந்திரா மாதையன், பா.ம.க., அருண்மூர்த்தி, தே.மு.தி.க. அசோக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இடைத்தேர்தல் கட்சி சின்னம் பெறுவதில் ஏற்பட்ட குழப்பத்தால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 510 பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
    • இதில் 40 ஊராட்சி தலைவர், 436 கிராம வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கட்சி சார்ந்த சின்னங்கள் ஒதுக்கப்படுவது இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

    இந்த நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவம் வழங்கப்படாததால் 9-ந்தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட 34 பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு அவர்களது சின்னங்கள் ஒதுக்கப்படும். அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் இந்த பதவிகளுக்காக போட்டியிடும் நிர்வாகிகளுக்கு பார்ம் ஏ மற்றும் பார்ம் பி.யில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட வேண்டும்.

    தற்போது அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவங்கள் அ.தி.மு.க.வினருக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள்.

    இதன் காரணமாக அ.தி.மு.க.வினர் கலக்கம் அடைந்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தால் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் உள்ளாட்சி தேர்தல் இடைத்தேர்தலில் களம் கண்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஆனால் சுயேட்சையாக போட்டியிடுவதால் புதிய சின்னங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது சிரமமான விஷயமாகவே மாறி உள்ளது என்றும், இதனால் வெற்றி வாய்ப்பு பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ள அ.தி.மு.க.வினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 510 பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் 40 ஊராட்சி தலைவர், 436 கிராம வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கட்சி சார்ந்த சின்னங்கள் ஒதுக்கப்படுவது இல்லை. இதனால் இந்த பதவி இடங்களுக்கான போட்டியில் சின்னம் தொடர்பான பிரச்சினை எழவில்லை.

    • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • இந்த 34 பதவி இடங்களும் மாவட்ட பஞ்சாயத்துகள், ஒன்றிய பஞ்சாயத்துகள், டவுன் பஞ்சாயத்துகள், மாநகராட்சி மற்றும் நகர சபைகளில் உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 510 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 498 இடங்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும், 12 இடங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ளன.

    இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதையடுத்து 510 உள்ளாட்சி அமைப்புகளிலும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த 510 இடங்களிலும் கடந்த 20-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.

    நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்வது நிறைவடைந்தது. நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. போட்டியில் இருந்து விலகுவதற்கு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள் ஆகும்.

    மொத்தம் உள்ள 510 பதவிகளுக்கு 800 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் 436 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 40 பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த 476 இடங்களுக்கும் கட்சி சார்பு இல்லாமல் தேர்தல் நடைபெறும்.

    ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 34 பதவி இடங்களும் மாவட்ட பஞ்சாயத்துகள், ஒன்றிய பஞ்சாயத்துகள், டவுன் பஞ்சாயத்துகள், மாநகராட்சி மற்றும் நகர சபைகளில் உள்ளன.

    இந்த 34 பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கட்சி சின்னத்தை பெறுவதற்கு படிவம் 'ஏ' மற்றும் படிவம் 'பி' ஆகியவற்றை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் உள்ள கட்சி தலைவரின் ஒப்புதல் கையெழுத்தை அடிப்படையாக வைத்து தான் தேர்தல் அதிகாரி கட்சி சின்னங்களை ஒதுக்கீடு செய்வார்.

    வேட்பாளர் பட்டியலில் கட்சியின் சின்னம் இடம் பெற்றிருந்தால் தான் அந்த வேட்பாளர் பெயர் பட்டியலில் முதன்மை இடத்துக்கு வரமுடியும். ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அந்த நிலைக்கு வரமுடியாத துரதிருஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தனித்தனியே செயல்பட தொடங்கி உள்ளனர். இதுவரை அவர்கள் சமீபத்திய தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரது கையெழுத்தை பெற்று இரட்டை இலை சின்னம் மூலம் போட்டியிட்டனர்.

    தற்போது இருவரும் பிரிந்துள்ளதால் கட்சி சார்பில் ஏ, பி படிவங்களை வழங்கவில்லை. இதனால் 34 உள்ளாட்சி பதவிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தை பெறமுடியவில்லை.

    படிவம் இல்லாத காரணத்தால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக உள்ளாட்சி தேர்தலில் நிறுத்தி வைக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது. தேர்தல் ஆணையம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கட்சி தலைவர்கள் இடையே ஏற்பட்ட பிளவு காரணமாக தானாகவே சின்னம் முடக்கப்படும் நிலைக்கு சென்று விட்டது.

    இது அ.தி.மு.க. வேட்பாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

    என்றாலும் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று அ.தி.மு.க.வினர் அறிவித்துள்ளனர். அந்தந்த மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் தங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சுயேட்சையாக போட்டியிடுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறும்போது, 'எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கையெழுத்திட்ட படிவங்கள் எங்களிடம் உள்ளது. வேட்பு மனு தாக்கலின் போது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை படிவங்களில் எழுதிக் கொடுப்பது வழக்கம். இந்த முறை இரு அணிகளாக இருப்பதால் அ.தி.மு.க. வினர் வெற்றி பெறும் போது சிக்கலை ஏற்படுத்தும். அதனால் சுயேட்சையாகவே போட்டியிடுமாறு அறிவுறுத்தி இருக்கிறோம்' என்றனர்.

    மாநில தேர்தல் ஆணையத்திடம் சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்காக ஒதுக்கீடு செய்ய 60 சின்னங்கள் தயாராக உள்ளன. இவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. சுயேட்சைகளின் விருப்பத்திற்கேற்ப சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    நாளை மாலை மனுக்கள் வாபஸ் பெறும் கால அவகாசம் முடிந்ததும் சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு நடைபெறும். அப்போது அ.தி.மு.க. வேட்பாளர்கள் என்ன சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பது தெரிய வரும்.

    • உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
    • காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    சென்னை:

    உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

    498 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும் என மொத்தம் 510 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான அறிவிக்கை 20-ந்தேதி வெளியிடப்படும் என்றும், அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 12-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.

    கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளாரா? உள்ளிட்ட விபரங்கள் விண்ணப்ப படிவங்கள் மூலமாக சேகரிக்கப்படுகின்றன.
    திருப்பூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இந்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறுவது எல்லா கட்சிகளிலும் தொடங்கி விட்டது.

    இந்தநிலையில் ஓட்டுச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர் பட்டியல் தயாரிக்க ஒவ்வொரு துறைக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து திருப்பூர்  மாவட்ட கல்வித்துறையில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 

    அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்வி அலுவலக ஊழியர்கள் பெயர், பள்ளி, வசிக்குமிடம், சொந்த ஊர், ஏற்கனவே தேர்தல் பணியாற்றி உள்ளாரா? கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளாரா?  உள்ளிட்ட விபரங்கள் விண்ணப்ப படிவங்கள் மூலமாக சேகரிக்கப்படுகின்றன.
    உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, இந்த தேர்தலுக்கான தயார் வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. #TamilnaduEC
    சென்னை:

    ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர்  பட்டியலின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் தயார் வழிமுறைகள் தொடர்பான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

    இதில் மாவட்டம், ஊராட்சி, ஒன்றியம்  வாரியாக வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான அனைத்து தயார் நிலைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்யும்  பணிகள் குறித்த விவரங்களும் உள்ளன. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. #TamilnaduEC 
    மாநில தேர்தல் ஆணையம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வார்டு மறுவரையறை செய்யாமல், உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNLocalBodyElection #TamilNaduCivicPolls
    சென்னை:

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த அப்போதைய சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி உத்தரவிட்டனர். 

    ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை. இதையடுத்து அவர்கள் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு, ஆகஸ்டு 6-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

    எனினும், ஆகஸ்ட் 6-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்கு கூடுதலாக 3 மாதம் அவகாசம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

    உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வார்டு வரையறை  அறிக்கை ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாகவும், அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்ட 3 மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றும்   மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இந்நிலையில், இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்கல் செய்யப்படும் வார்டு மறுவரையறை பரிந்துரைகளை அரசு எப்போது ஏற்றுக்கொள்ளும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, ‘அறிக்கை கிடைத்த பின்பு தான் அதுகுறித்து முடிவு செய்யப்படும்’ என தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.

    வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது. வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுக தான் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.

    ‘பலமுறை அவகாசம் வழங்கிய போதிலும், 2019-ம் ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீர்கள் போல’ என நீதிபதி தனது அதிருப்தியை தெரிவித்தார். 

    இதனை அடுத்து, மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. #TNLocalBodyElection #TamilNaduCivicPolls
    ×