search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elected without contest"

    • ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்த னர்.
    • வருகின்ற 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்த னர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.

    இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு– 4, நம்பியூர் யூனியன் கெட்டி செவியூர் பஞ்சாயத்து வார்டு எண்– 10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 5, பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்– 4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்– 11, கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 1, புஞ்சைளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்– 3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண் –2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    இதுதவிர அம்மா பேட்டை யூனியன் சிங்கம் பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்–2-ல் 2 பேர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்– 3-ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 3-ல் 2 பேர், கோபிசெட்டி பாளையம் யூனியன் கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண் –1-ல் 2 பேர்,

    மொடக்குறிச்சி யூனியன் 46 புதூர் பஞ்சாயத்து வார்டு எண்– 1-ல் 4 பேர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–3-ல் 3 பேர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்– 2-ல் 3 பேர் என 7 பதவிக்கு 20 பேர் போட்டியில் உள்ளனர்.

    இந்த பகுதியில் வருகின்ற 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.

    ×