என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளாட்சி தேர்தல்"

    • "நகராட்சியில் LDF தோல்வியடைந்தால், நான் என் மீசையை மழித்துவிடுவேன்" என்று தேர்தலுக்கு முன்பு சபதம் எடுத்தார்.
    • முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF, இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.

    கேரளாவில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது. 

    மேலும் நகராட்சிகளிலிலும் காங்கிரஸ் கூட்டணி (UDF) கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    LDF கணிசமான இடங்களில் வென்றாலும் காங்கிரஸ் கூட்டணியை விட பின்தங்கியது பேசுபொருளாகி வருகிறது.

    இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இடது முன்னணி LDF தொண்டர் ஒருவர் தனது மீசையை சிரைத்துள்ளார்.

    "நகராட்சியில் LDF தோல்வியடைந்தால், நான் என் மீசையை மழித்துவிடுவேன்" என்று தேர்தலுக்கு முன்பு பகிரங்கமாகக் கூறிய பாபு வர்கீஸ், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கூறியது போல் தனது மீசையை மழித்துக் கொண்டார்.

    பத்தனம்திட்டா மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 16 இடங்களில் 12 இடங்களை வென்றதன் மூலம் காங்கிரசின் UDF பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

    முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF, இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.

    கூடுதலாக, UDF 34 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் ஏழு தொகுதி பஞ்சாயத்துகளில் பெரும்பான்மையைப் பெற்றது.

    • எர்ணாகுளத்தில் உள்ள ஏலூர் பகுதியை சேர்ந்தவர் 46 வயதான சுபாஷ் சந்திரன்
    • கடந்த 2006 இல் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார்.

    கேரளாவில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது.

    மேலும் நகராட்சிகளிலிலும் காங்கிரஸ் கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது முன்னணி கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் பின்னால் உள்ள உண்மைக் கதைக்கு சொந்தக்காரரான சுபாஷ் சந்திரன் ஏலூர் நகராட்சியில் உள்ள 27-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனநாயக முன்னணி வேட்பாளராக களமிறங்கினார்.

    எர்ணாகுளத்தில் உள்ள ஏலூர் பகுதியை சேர்ந்த 46 வயதான சுபாஷ் சந்திரன், கடந்த 2006 இல் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார்.

    அப்போது அவரை நண்பர் ஒருவர் சக நண்பர்கள் உதவியுடன் மீட்டு கொண்டுவந்தார். இதை வைத்து இயக்கப்பட்ட 'மஞ்சும்மல் பாய்ஸ்' பெரு வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் சுபாஷ் சந்திரன் தான் போட்டியிட்ட ஏலூர் நகராட்சி வார்டில் வாக்கு எண்ணிக்கையில் 3-ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார்.  

    • 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
    • திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனை நான் பாராட்ட விரும்புகிறேன்.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து திருவனந்தபுரம் எம்.பியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

    "கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் என்னவொரு அற்புதமான முடிவுகள் நிறைந்த நாள். மக்கள் ஆணை தெளிவாக உள்ளது, மேலும் மாநிலத்தின் ஜனநாயக உணர்வு பிரகாசமாகத் தெரிகிறது.

    பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய வெற்றியைப் பெற்றகாங்கிரசின் UDF -க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரமும், மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையும் ஆகும்.

    கடின உழைப்பு, ஒரு வலுவான செய்தி மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவை அனைத்தும் 2020-ஐ விட மிகச் சிறந்த முடிவை அடைய உதவியுள்ளன.

    திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனையும் நான் பாராட்ட விரும்புகிறேன். மேலும் நகர மாநகராட்சியில் அவர்கள் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிக்கு எனது பணிவான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது தலைநகரின் அரசியல் களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் ஒரு வலுவான செயல்திறனாகும். 45 ஆண்டுகால இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தவறான ஆட்சிக்கு ஒரு மாற்றத்திற்காக நான் பிரச்சாரம் செய்தேன், ஆனால் வாக்காளர்கள் இறுதியில் ஆட்சியமைப்பில் ஒரு தெளிவான மாற்றத்தை விரும்பிய மற்றொரு கட்சிக்கு வெகுமதி அளித்துள்ளனர்.

    அதுதான் ஜனநாயகத்தின் அழகு. ஒட்டுமொத்தமாக UDF-ஆக இருந்தாலும் சரி, அல்லது எனது தொகுதியில் பாஜக-வாக இருந்தாலும் சரி, மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்.

    கேரளாவின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், மக்களின் தேவைகளுக்காக வாதிடுவோம் மற்றும் நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம். முன்னேறிச் செல்வோம்!" என்று தெரிவித்துள்ளார். அணமைக் காலமாக சசி தரூர் பாஜக மற்றும் மோடியை புகழ்ந்து வருவது காங்கிரஸ் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் இந்த வாழ்த்து முக்கியத்துவம் பெறுகிறது. 

    • ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.
    • இது ஒரு தீர்க்கமான மற்றும் உற்சாகமளிக்கும் மக்கள் தீர்ப்பு.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

    ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது. கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூரில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இது நகர்ப்புறங்களில் LDF-இன் பிடியைப் பெரிதும் பாதித்துள்ளது.

    நகராட்சி மட்டத்திலும் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை அடைந்தது. 87 நகராட்சிகளில் 54 நகராட்சிகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.

    எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரசின் யுடிஎஃப் மீது நம்பிக்கை வைத்த கேரள மக்களுக்கு எனது வணக்கங்கள். இது ஒரு தீர்க்கமான மற்றும் உற்சாகமளிக்கும் மக்கள் தீர்ப்பு.

    இந்த முடிவுகள் யுடிஎஃப் மீதான நம்பிக்கை வளர்ந்து வருவதற்கான தெளிவான அறிகுறியாகும். மேலும், இது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

    செய்தி தெளிவாக உள்ளது: கேரளா, மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து, பதிலளித்து, வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பான ஆட்சியை விரும்புகிறது.

    இப்போது எங்கள் கவனம் அசைக்க முடியாதது - கேரளாவின் சாமானிய மக்களுடன் நிற்பது, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் கையாள்வது, மற்றும் வெளிப்படையான, மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை உறுதி செய்வது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் எனது வாழ்த்துகள். இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் செயல்பட்ட ஒவ்வொரு கட்சித் தலைவர் மற்றும் தொண்டருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்" என்று தெரிவித்தார்.    

    • ஆறு மாநகராட்சிகளில் நான்கை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.
    • எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 

    ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது. கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூரில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இது நகர்ப்புறங்களில் LDF-இன் பிடியைப் பெரிதும் பாதித்துள்ளது.

    திருவனந்தபுரம் மாநகராட்சியை வென்றதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கேரளாவில் காலூன்றி உள்ளது.

    UDF மற்றும் NDA இரண்டிலிருந்தும் கடுமையான சவாலை எதிர்கொண்ட போதிலும், கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டுமே LDF தனது பிடியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    நகராட்சி மட்டத்திலும் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை அடைந்தது. 87 நகராட்சிகளில் 54 நகராட்சிகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.

    எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட சில பாரம்பரிய கோட்டைகளை LDF வென்ற போதிலும், 2020 ஆம் ஆண்டு செயல்திறனுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த செயல்திறன் குறைவே.

    ஒட்டுமொத்தமாக, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மறுமலர்ச்சிக்கான அறிகுறியாகும்.      

    தேர்தல் முடிவுகள் விவரம்:

    152 ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகளில் UDF - 79, LDF - 63

    14 மாவட்ட பஞ்சாயத்துகளில் UDF - 7, LDF - 7

    87 நகராட்சிகளில் UDF - 54, LDF - 28, NDA - 1, மற்றவை - 1

    6 மாநகராட்சிகளில் UDF - 4, LDF - 1, NDA - 1 இடங்களைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.

    • 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
    • பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    அதே சமயம் கேரளாவில் பெரிய செல்வாக்கு இல்லாத பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்புரம் மாநகராட்சியில் பாஜக முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-

    திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக- என்டிஏ கூட்டணி வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம். கேரள மாநில மக்களின் விருப்பம், வளர்ச்சியை எங்களால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

    திருவனந்தபுரம் போன்ற துடிப்பான நகரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.
    • காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    12 மணி நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    மொத்த கிராம பஞ்சாயத்துகளில் காங்கிரசின் UDF, 445 இடங்களிலும், ஆளும் இடது முன்னணியான LDF, 370 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மேலும், நகராட்சிகளிலும் UDF 55 இடங்களைப் பிடித்து முன்னிலை வகிக்கிறது. 87 நகராட்சிகளில் UDF - 55 இடங்களிலும் LDF 28 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. கோழிக்கோட்டில் இடது முன்னணியான LDF முன்னிலை வகிக்கிறது. 

    அதே சமயம் கேரளாவில் பெரிய செல்வாக்கு இல்லாத பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 6 இடங்களில் வெற்றி பெற்றால், மேயர் பதவியைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    கேரள உள்ளாட்சி தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் நிலையில் ஆளும் இடது முன்னணி பின்னடைவை சந்தித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. 

    • அனைத்து மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
    • முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

    முதல் கட்டத்தில் 71 சதவீதம், இரண்டாம் கட்டத்தில் 76 சதவீதம் என மொத்தத்தில் 73.69 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலை விட 2 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியிருந்தது. உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.


    வாக்கு எண்ணக்கை மையம் முன்பு அரசியல் கட்சியினர் திரண்டிருந்ததை படத்தில் காணலாம்.

    வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களில் நடைபெற்றது. அனைத்து மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    காலை 8.30 மணியளவில் முன்னணி நிலவரம் வெளியாக தொடங்கியது. காலை 9.45 மணி நிலவரப்படி மாநிலத்தில் உள்ள 6 மாநகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 3 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 2 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும், தேசய ஜனநாயக முன்னணி ஒரு இடத்திலும் முன்னிலை வகித்தன.

    இதேபோல் மாநிலத்தில் உள்ள 86 நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 46 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 30 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

    941 கிராம பஞ்சாயத்துகளில் இடது ஜனநாயக முன்னணி 340 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 32 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மாநிலத்தில் உள்ள 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 7 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 5 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

    மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக கூட்டணி மாறி மாறி முன்னிலையில் இருந்துவந்தன.

    • தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
    • முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஹசீனா என்பவர் நேற்றுமுன்தினம் இரவு பிரசாரம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது மயங்கிவிழுந்து இறந்தார்.

    கேரளாவில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இறந்ததால் 2 இடங்களில் இன்று நடக்க இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் உள்ள விழிஞ்சம் வார்டை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஜஸ்டின் பிரான்சிஸ்(வயது60) நேற்று முன்தினம் இரவு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் போட்டியிட்ட விழிஞ்சம் வார்டுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரியான துணை ஆட்சியர் ஆல்பிரட் அறிவித்தார்.

    இதேபோல் மலப்புரம் மாவட்டம் மூத்தேடம் பஞ்சாயத்து 7-வது வார்டில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட்ட முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஹசீனா(49) என்பவர் நேற்றுமுன்தினம் இரவு பிரசாரம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது மயங்கிவிழுந்து இறந்தார். இதனால் அவர் போட்டியிட்ட வார்டிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 36,630 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் ஆண்கள் 17,056 பேர். பெண் வேட்பாளர்கள் 19,573 பேர் ஆவர்.
    • பல வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே ஏராளமான வாக்காளர்கள் வந்துவிட்டனர்.

    கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைவதையடுத்து இன்று மற்றும் நாளை மறுநாள் (11-ந்தேதி) இரண்டு கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் பத்தினம்திட்டா, இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 595 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டது. 471 கிராம பஞ்சாயத்துகள், 75 தொகுதி பஞ்சாயத்துகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள், 39 நகராட்சிகள், 3 மாநகராட்சிகளில் உள்ள 11,168 வார்டுகளில் வாக்குப்பதிவு நடந்தது.

    இன்று நடந்த முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 36,630 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் ஆண்கள் 17,056 பேர். பெண் வேட்பாளர்கள் 19,573 பேர் ஆவர். மொத்தம் 15,432 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. முதலில் காலை 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

    அதன்பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டுப்போட்டு சென்றனர். காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் முதல் இரண்டு மணி நேரத்தில் மிகக்குறைவான சதவீதமே வாக்குகள் பதிவாகியிருந்தது.

    பல வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே ஏராளமான வாக்காளர்கள் வந்துவிட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர். மத்திய மந்திரி சுரேஷ்கோபி காலையிலேயே தனது மனைவி ராதிகா நாயருடன் திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்து நின்று ஓட்டு போட்டார்.

    இதேபோல் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் காலையிலேயே தங்களது பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரக்கூடிய வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ஓட்டுப்பதிவு நடைபெற்ற அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதட்டமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று தேர்தல் நடைபெற்ற 7 மாவட்டங்களிலும் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கேரள மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள்(11-ந்தேதி) உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    • டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

    கேரளாவில் வரும் டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுக போட்டியிடுவதாக கடந்த மாதம் அறிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர்கள் பெயரையும் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இடுக்கி மாவட்டத்தில் 19 இடங்கள், பாலக்காடு மாவட்டத்தில் 4 இடங்கள், திருவனந்தபுரம் மாநகராட்சியில் 2 இடங்கள் என மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். 

    கேரள மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சியின் தொண்டர்களும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறந்த முறையில் தேர்தல் பணியாற்றி, கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

    • தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.
    • எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று கூறினார்.

    கேரளாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 90 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நாராயணன் நாயர் போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆஷமன்னூர் கிராமப் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக நாராயணன் போட்டியிடுகிறார். இதுவே இவருக்கு முதல் தேர்தல் களம் ஆகும்.

    அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் கூட்டமாகச் செல்ல, வேட்பாளர் நாராயணன் நாயர் தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.

    தனது முதுமை குறித்துக் கேட்கப்பட்டபோது, எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று நாராயணன் நம்பிக்கையுடன் கூறுகிறார். தனது வார்டு வளர்ச்சிக்காக நிறைய செய்ய வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் குறிப்பிடுகிறார்.

    போஸ்டர்கள், பேனர்கள் ஆகியவற்றை விட மக்களை நேரடியாகச் சந்தித்தால் தான் பலன் கிடைக்கும். திருமண அழைப்பிதழ்கள் கூட நேரில் சென்று கொடுத்தால் தான் திருமணத்துக்கு வருவார்கள் என நாராயணன் தெரிவிக்கிறார்.

    இவரது நேர்மையான அணுகுமுறைக்கு வாக்காளர்கள் மத்தியிலும் வரவேற்பு நிலவுகிறது.

    கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடதப்பட்டு டிசம்பர் 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.   

    ×