search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரட்டை இலை சின்னம் கிடைக்காத விரக்தியில் வேட்புமனுவை வாபஸ் பெற்ற அ.தி.மு.க.வினர்
    X

    இரட்டை இலை சின்னம் கிடைக்காத விரக்தியில் வேட்புமனுவை வாபஸ் பெற்ற அ.தி.மு.க.வினர்

    • தி.மு.க சார்பில் சந்திரா மாதையன், பா.ம.க., அருண்மூர்த்தி, தே.மு.தி.க. அசோக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
    • இடைத்தேர்தல் கட்சி சின்னம் பெறுவதில் ஏற்பட்ட குழப்பத்தால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் 17-வது வார்டு கவுன்சிலராக இருந்த தி.மு.க பிரமுகர் மாதையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார்.

    இதையடுத்து இடைத்தேர்தல் வரும் 9-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் பரிசீலனை செய்து 13 பேர் வேட்பு மனு ஏற்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வில் கட்சி சின்னம் தொடர்பாக நிலவி வரும் குழப்பத்தால் அதி.மு.க. சார்பில் வேட்பு மனு செய்தவர்கள் நேற்று மனுவை வாபஸ் பெற்றனர்.

    இதே போல் பா.ஜ.க. வேட்பாளர் உள்பட 10 பேர் வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் பி.டி.ஓ கிருஷ்ணன் தலைமையில் அலுவலக வளாகத்தில் ஒட்டப்பட்டது.

    இதன்படி, தி.மு.க சார்பில் சந்திரா மாதையன், பா.ம.க., அருண்மூர்த்தி, தே.மு.தி.க. அசோக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இடைத்தேர்தல் கட்சி சின்னம் பெறுவதில் ஏற்பட்ட குழப்பத்தால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×