என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இஷான் கிஷன்"
- முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது.
- அடுத்து ஆடிய வங்காளதேசம் 182 ரன்களில் ஆல் அவுட்டானது.
சிட்டகாங்:
வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெற்றது. டாஸ்வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும். அவருக்கு பக்கபலமாக ஆடிய விராட் கோலி சதமடித்தார். 2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.
இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது, எபாட் ஹொசைன், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 29 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் 43 ரன்னில் வெளியேறினார். யாசிர் அலி 25 ரன்னும்,
மகமதுல்லா 20 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வங்காளதேச அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டும், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்காளதேச அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.
- முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 409 ரன்களை குவித்துள்ளது..
- இஷான் கிஷன் இரட்டைச் சதமடித்தார். விராட் கோலி சதமடித்தார்.
சிட்டகாங்:
வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது.
டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.
இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.
அவருக்கு பக்கபலமாக விராட் கோலியும் விளையாடினார். கோலி சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.
இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 3 ரன்னும், கே.எல்.ராகுல் 8 ரன்னும், அக்சர் படேல் 20 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்க உள்ளது.
- வங்காளதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
- இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார்.
சிட்டகாங்:
வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது. டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.
இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.
- உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதில் இருந்தால் அதை செய்யுங்கள்.
- சதத்தை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது.
ராஞ்சி:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே ராஞ்சியில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன் அடித்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 84 பந்துகளில் 93 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஷான் கிஷன் கூறியதாவது:
சில வீரர்களுக்கு ஸ்டிரைக்கை சுழற்றும் பலம் உண்டு, சிக்ஸர் அடிப்பதே எனது பலம். நான் சிரமமின்றி சிக்ஸர் அடித்தேன், பலரால் அதைச் செய்ய முடியாது. சிக்ஸர் அடித்து ரன்கள் குவித்தால், ஸ்ட்ரைக் ரேட் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதாக இருந்தால் அதை செய்யுங்கள். ஒற்றை ரன்னாக எடுத்திருக்கலாம், சதம் அடித்திருக்கலாம். ஆனால் நான் எனக்காக விளையாட மாட்டேன்.
![](https://media.maalaimalar.com/h-upload/2022/10/09/1774196-ishan-kishan-1.jpg)
எனது தனிப்பட்ட ஸ்கோரை நினைத்தால், எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது, நான் ரசிகர்களை ஏமாற்றி விடுகிறேன். சதத்தை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது, ஆனால் 93 ரன் அணிக்கு ஒரு பெரிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன். ரன் எடுப்பதில் வேகத்தை அளித்து அணியை பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, இதனால் அடுத்து வரும் வீரர்கள் மீது அழுத்தம் குறைவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 278 ரன்களை எடுத்துள்ளது.
- அடுத்து ஆடிய இந்திய அணி 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
ராஞ்சி:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும் அவுட்டாகினர். டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கினர்.
தவான் 13 ரன்னிலும் கில் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது இந்தியா 2 விக்கெட்டுக்கு 48 ரன் எடுத்திருந்தது.
அடுத்து இறங்கிய இஷான் கிஷன் ஜோடி நேர்த்தியாக ஆடியது. கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். அரை சதம் கடந்த இஷான் கிஷன் அதிரடியில் மிரட்டினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்னில் ஆட்டமிழந்தார்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 161 ரன்களை குவித்து அசத்தியது. அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் ஒத்துழைக்க இந்திய அணி வெற்றிப் பாதைக்குச் சென்றது.
பொறுப்புடன் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் சதமடித்து அசத்தினார். இது அவரது 2வது சதமாகும்.
இறுதியில், இந்திய அணி 45.5 ஓவரில் 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன்னுடனும், சாம்சன் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.
- டி20 கிரிக்கெட்டின் பந்து வீச்சு தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.
- பேட்டிங் தரவரிசையில் முதல் இரண்டு இடத்தில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர்.
டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பொறுத்தவரை இந்திய அணியில் இஷான் கிஷன் மட்டுமே இடம் பெற்றுள்ளார். சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு 6-வது இடம் கிடைத்துள்ளது.
6-வது இடத்தை ஆஸ்திரேலியா வீரர் கான்வேவுடன் இஷான் கிஷன் பகிர்ந்துள்ளார். முதல் இரண்டு இடத்தில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர். பாபர் ஆசம் முதல் இடத்திலும் ரிஷ்வான் இரண்டாவது இடத்திலும் தொடர்கின்றனர். இலங்கை அணி வீரர் நிசாங்கா ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2022/06/22/1717124-ishan.jpg)
தினேஷ் கார்த்திக் - இஷான் கிஷன்
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி நிலையில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் 21 இடங்கள் (108-ல் இருந்து 87) முன்னேறி உள்ளார்.
டி20 கிரிக்கெட்டின் பந்து வீச்சு தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. இந்தியா தென் ஆப்பிரிக்கா தொடரில் சொதப்பிய நோர்க்கியா ஒரு இடம் பின் தங்கி 7 இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீசிய ஹசரங்கா ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹசில்வுட் முதல் இடத்தில் தொடர்கிறார்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய அணியின் அஸ்வினை பின்னுக்கு தள்ளி வங்களாதேச வீரர் சகீப்-அல்-ஹசன் 2-இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இந்திய அணி வீரர் ஜடேஜா தொடர்கிறார்.
- தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
- வான் டெர் டுஷன்-டேவிட் மில்லர் ஜோடி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினர்.
புதுடெல்லி:
இந்தியா- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 76 ரன்கள் குவித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 31 ரன்கள், ரிஷப் பண்ட் 29 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் அதிரடி காட்டிய பிரிட்டோரியஸ், 29 ரன்களில் வெளியேறினார். குயின்டன் டி காக் 22 ரன்களே சேர்த்தார்.
அதன்பின்னர் வான் டெர் டுஷன்-டேவிட் மில்லர் ஜோடி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினர். பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, விரைவாக அரை சதம் கடந்ததுடன், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்ஷல் பட்டேல் பந்துவீச வந்தார். அவர் வீசிய 19வது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் வான் டெர் டுஷன். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
- இந்திய அணியின் துவக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 76 ரன்கள் விளாசினார்.
புதுடெல்லி:
இந்தியா- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
டாஸ்வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.
துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 23 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் இஷான் கிஷன், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அதிரடியாக ஆடிய அவர் 76 ரன்கள் விளாசினார். இவரது ஸ்கோரில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களும் அடங்கும். ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்கள் சேர்த்தார்.
கேப்டன் ரிஷப் பண்ட் 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 31 ரன்களும், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் ஒரு ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)