search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணி திருவிழா"

    • சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 5-வது நாளான நேற்று காலை உலவாக் கோட்டை அருளிய லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் உலவாக் கோட்டை அருளிய லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்தனர்.

    விழாவில் உலவாக் கோட்டை அளித்த லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

    அடியார்க்கு நல்லார் என்ற ஒரு அடியார் மதுரையில் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே உண்பது என்ற கொள்கை உடையவராக இருந்தார். அவரது செல்வம் குறைந்த போதும் கடன் பொற்றாவது தனது கடமையை ஆற்றி வந்தார். கடனும் கிடைக்காத நிலையில் அவர் வருந்தினார். இந்தநிலையில், தனது மனைவியுடன் சோமசுந்தரரை தரிசித்து பின் உயிர் துறப்பது என நினைத்து கோவிலுக்கு சென்றார்.

    அவரது தருமநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாக தோன்றி வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ள குறையாத நெல்மணிகளை கொண்ட உலவாக் கோட்டை ஒன்றை அளித்துள்ளோம் என்று கூறினார். அதன்படியே இருவருக்கும் வீடு திரும்பி உலவாக் கோட்டை மூலம் கிடைத்த நெல்மணிகளை கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்க்கு உணவளித்து வாழ்ந்தனர் என்று புராணம் கூறுகிறது.

    • ஆவணி மூல திருவிழாவில் இன்று உலவாக்கோட்டை அருளிய கோலத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் பவனி வந்தனர்.
    • மதுரையில் அடியார்க்கு நல்லார் என்பவர் வாழ்ந்து வந்தார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா நடந்து வருகிறது. 5-ம் நாளான இன்று உலவாக்கோட்டை அருளிய லீலை நடந்தது.

    மீனாட்சி அம்மன்- பிரியாவிடையுடன் சுந்தரே சுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம்- அபிஷேகம் நடத்தது. அதன் பிறகு சுவாமிகள் தம்பதி சமேதராக கருப்பண்ண சுவாமி மண்டபம், தெற்கு ஆவணி மூல வீதி, வடக்கு ஆவணி மூல வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது.

    உலவாக்கோட்டை அருளிய லீலை பற்றி புராண வரலாற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மதுரையில் அடியார்க்கு நல்லார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே சாப்பிடும் பழக்கம் உடையவர். இதற்காக அவர் பலரிடமும் கடன் வாங்கினார். இதனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. அவருக்கு ஒரு கட்டத்தில் எவரிடமும் பணம் கிடைக்கவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர், சோமசுந்தரரை தரிசனம் செய்து விட்டு, மனைவியுடன் உயிர்நீப்பது என்று முடிவு செய்தார்.

    அவர்கள் கோவிலுக்கு சென்று கண்ணீர் விட்டு தொழுதனர். அப்போது இறைவன் அசரீரியாக தோன்றி, உடனே வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ள குறையாத நெல்மணிகளை கொண்ட உலவாக் கோட்டை அளித்துள்ளோம் என்றார். சிவனடியார் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு உலவாக் கோட்டை இருந்தது.

    அதன் மூலம் கிடைத்த நெல்மணிகளை கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்க்கு உணவளித்து வாழ்ந்தார்.

    • மதுரை வந்ததும் நால்வர் மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • 10-ந்தேதி வரை மதுரையிலேயே தங்கி நகர்வலம் வருகிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், ஆவணி மாதத்தில் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழாவின் பிட்டுக்கு மண் சுமந்த லீலை ஆகிய 2 நிகழ்ச்சிகளிலும் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளுவது வரலாற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலதிருவிழாவின் முத்தாய்ப்பாக வருகிற 6-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது.

    இதில் பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பங்கேற்கிறார்.இதற்காக வருகின்ற 5-ந்தேதி கோவிலில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டு மீனாட்சி அம்மன், சொக்கநாதர் அருள் ஆட்சி புரியும் பாண்டிய மண்டலமான மீனாட்சி பட்டணத்திற்கு (மதுரை) வருகிறார்.

    திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை வரை வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் திருக்கண் அமைத்து ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன்வழிபடுகிறார்கள். மீனாட்சி அம்மன்கோவிலுக்கு வந்ததும் நால்வர் மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மறுநாள் 6-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் பாண்டிய மன்னனாக முருகப் பெருமான் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதனை தொடர்ந்து வருகின்ற 10-ந்தேதி வரை மதுரையிலேயே தங்கி நகர்வலம் வருகிறார். பிறகு 10-ந் தேதி மாலையில் பூப்பல்லக்கில் தன் இருப்பிடமான திருப்பரங்குன்றத்திற்கு புறப்பட்டு வருகிறார்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா நடைபெற்று வருகிறது.
    • விழாவின் 4-ம் நாளில் தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை நடந்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா நடைபெற்று வருகிறது. சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் சிறப்பு அலங்காரங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன. விழாவின் 4-ம் நாளான நேற்று தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

    முன்பு மதுரையை சூடாமணி பாண்டியன் (செண்பகப்பாண்டியன்) என்ற மன்னன் ஆட்சி செய்தான்.

    இறைவனுக்கு பூஜை செய்ய நறுமணமிக்க செண்பக மரங்களை தன் நந்தவனத்தில் வளர்த்து வந்தான். இளவேனிற் காலத்தில் அரசி அங்கிருக்கும் போது அந்த நந்தவனத்திலே உன்னதமான ஒரு புதிய வாசனையை மன்னன் உணர்ந்தான். அது தன் தேவியின் கூந்தலில் இருந்து வருவதாக உணர்ந்த அவன் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதோ என்று சந்தேகம் கொண்டான்.

    தன் ஐயத்தை நீக்குபவருக்கு ஆயிரம் பொன் பரிசாக கொடுக்கப்படும் என்று கூறி அதனை சங்க மண்டபத்தில் தொங்க விட்டான். பல புலவர்கள் தங்கள் மனதில் தோன்றியதை பாடினார்கள். ஆனால் அரசனின் ஐயம் தீரவில்லை.

    இந்த நிலையில் தருமி என்ற ஒருவன் சொக்கநாதரை பூஜிக்க விரும்பினான். ஆனால் மணமான பிறகே சிவனை பூஜிக்கலாம் என்பதால் அரசன் அறிவித்த பரிசு தனக்கு கிடைத்தால் அதன் மூலம் தானும் மணம் புரிந்து, இறைப்பணி செய்யலாம் என்று கருதி இறைவனை வேண்டினான்.

    அவனது வேண்டுகோளை ஏற்று இறைவன், "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ, பயிலியது கெழிஇய நட்பின் பயிலியற், செறியெயிற் றரிவை கூந்தலில், நறியவு முளதோ நீ அறியும் பூவே" என்ற பாடல் எழுதப்பட்ட ஓலையினை அவனுக்கு வழங்கினார்.

    தருமியும் சங்கத்திற்கு சென்று அந்த பாடலை படித்து காட்ட, அரசன் தன் சந்தேகம் தீர்ந்ததாக கூறி, அந்த பொற்கிழியை அவருக்கு அளிக்க உத்தரவிட்டான். அப்போது தலைமைப்புலவர் நக்கீரர் குறுக்கீட்டு தடுத்து நிறுத்தி, அந்த பாட்டில் பிழை உள்ளது என்று கூறினார். உடனே இறைவன் ஒரு புலவர் வடிவத்தில் சங்க மண்டபத்திற்கு வந்தார். அங்கு தன் பாடலில் என்ன குற்றம் என்று கேட்க, நக்கீரரும் பொருட்குற்றம் உள்ளது என்றார். இருவருக்குமிடையே வாக்குவாதம் தொடர இறுதியாக இறைவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து காட்டினார். இறைவனே வந்திருக்கிறார் என்ற அறிந்த பின்னரும் நக்கீரர், நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என வாதாட இறைவனின் நெற்றிக் கண்ணின் வெப்பம் தாளாமல் பொற்றாமரை குளத்தில் நக்கீரர் விழுந்தார். அதன்பின்னர் இறைவனும் மறைந்தார்.

    இவ்வாறு நக்கீரரின் தமிழ்ப்புலமையை உலகுக்கு உணர்த்திய இறைவன் மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கு இறங்கி, பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரரை உயிர்ப்பித்து கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியை தருமிக்கே கொடுக்கும்படி செய்தார் என்று புராணம் கூறுகிறது.

    • ஆவணி மூல திருவிழாவில் மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை நடந்தது.
    • வருகிற 9-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா நடந்து வருகிறது. அப்போது சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில், 12 லீலைகள் அரங்கேற்றம் செய்யப்படும். நேற்று ''மாணிக்கம் விற்ற லீலை'' நடந்தது.

    4-ம் நாளான இன்று ''தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை'' நடந்தது. இதையொட்டி மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரருக்கு சிறப்பு அலங்காரம்- அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு சுவாமி தம்பதி சமேதராக ராமசாமி பிள்ளை மண்டபம், தெற்கு ஆவணி மூல வீதி, சித்திரை வீதி, கீழ பட்டமார் தெரு, வடக்கு ஆவணி மூல வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி ஆவணி மூலத் திருவிழா தொடங்கியது. வருகிற 9-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக ஆவணி மூல திருவிழா நடக்கவில்லை.

    இந்த நிலையில் பக்தர்களின் பங்களிப்புடன் ஆவணி மூலத் திருவிழா தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • 10-ந் தேதி மாலை 5 மணிக்கு 4 ரத வீதிகளில் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் ஆவணி மாத திருவிழாவை தவிர மற்ற 3 திருவிழாக்களும் தாணுமாலய சாமிக்கு நடைபெறும்.

    ஆவணி மாத திருவிழா மட்டும் திருவேங்கடம் விண்ணவரம் பெருமாளுக்கு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நாளை (2-ந் தேதி) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ கொடியேற்றி வைக்கிறார்.

    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம் காலை மற்றும் மாலை வேளை களில் நடக்கிறது. 9-ம் திருவிழா நாளான 10-ந் தேதி மாலை 5 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் 4 ரத வீதிகளில் உலா வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 10ந் திருவிழாவான 11-ந் தேதி திரு ஆராட்டு வைபவம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்து உள்ளனர்.

    • ஆவணி மூலத்திருவிழா வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது.
    • திருவிழாவில் திருவிளையாடல் நிகழ்ச்சி தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது. அதில் திருவிளையாடல் நிகழ்ச்சி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. அதில் 3-ம் நாளான நேற்று காலை மாணிக்கம் விற்ற லீலை நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் மாணிக்கம் விற்ற லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் இரவு சாமி கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்தனர்.

    விழாவில் சாமி மாணிக்கம் விற்ற லீலை நிகழ்ச்சி குறித்த புராண வரலாறு வருமாறு:-

    மதுரையை வீரபாண்டியன் என்ற அரசன் நீதியுடன் ஆட்சி புரிந்தான். அவனுக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அந்த நேரத்தில் வேட்டையாட சென்ற அரசன் புலிக்கு இரையாகி இறந்தான். அந்த நேரத்தில் மக்கள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், அரசனின் மகுடத்தையும் கவர்ந்து சென்றனர்.

    இதற்கிடையில் இளவரசனுக்கு முடிசூடலாம் என்று அமைச்சர்கள் முடிவு செய்தனர். அப்போது தான் மணிமகுடம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் களவு போனதை அறிந்து சோமசுந்தர பெருமானிடம் முறையிட கோவிலுக்கு சென்றனர்.

    அப்போது சோமசுந்தர பெருமானே ஒரு நவரத்தின வியாபாரியாக தோன்றி அங்கு வந்து நடந்ததை கேட்டறிந்தார். மேலும் அவர் புதிய மணிமகுடம் செய்ய விலை உயர்ந்த நவமணிகளை கொடுத்து, அந்த மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார் எந்த மணியை அணிய வேண்டும் என்ற செய்திகளையும் கூறினார்.

    பின்னர் புதிய மணிமகுடம் செய்து அதனை இளவரசனுக்கு சூட்டி அவரை அபிடேகபாண்டியன் என்று அழையுங்கள் என்று கூறி விட்டு இறைவன் மறைந்தார்.

    இதற்கிடையில் கவர்ந்து செல்லப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைக்க பெற்று அனைவரும் நலமுடன் வாழ்ந்தார்கள். மேலும் அபிடேக பாண்டியன் செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்று புராணம் கூறுகிறது.

    • 10-ந்தேதி மாலை 5 மணி அளவில் தேரோட்டம் நடக்கிறது.
    • 11-ம் தேதி திரு ஆராட்டு வைபவம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை, மார்கழி, மாசி திருவிழா தாணுமாலய சாமிக்கும், ஆவணி மாத திருவிழா திருவேங்கட விண்ணவரம் பெருமாளுக்கும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா வருகிற 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. 2-ந் தேதி காலை 9.15 மணிக்கு மேல் திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ கொடியேற்றுகிறார்.

    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம் காலை மற்றும் மாலை வேளையில் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 10-ந் தேதி மாலை 5 மணி அளவில் இந்திரன் தேராகிய சப்பர தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அமர செய்து நான்கு ரத வீதிகளில் உலா வரும் தேரோட்டம் நிகழ்ச்சியும், 10-ம் திருவிழாவான 11-ம் தேதி திரு ஆராட்டு வைபவமும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆவணி மூலவீதியில் வீதி உலா நடந்தது.
    • 8-ந்தேதி சட்டத்தேர் வீதி உலா நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதில் சித்திரை திருவிழாவில்தான் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்து, 4 மாதங்கள் அம்மன் ஆட்சி புரிவதாக ஐதீகம்.

    அதைதொடர்ந்து ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அவர் 8 மாதங்கள் மதுரையை ஆட்சி செய்வதாக பக்தர்களின் நம்பிக்கை.

    சிவபெருமான், நடத்திய 64 திருவிளையாடல்களில், 12 திருவிளையாடல்களை விளக்கும் லீலை அலங்கார காட்சிகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது.

    இதையொட்டி திருவிளையாடல் லீலை அலங்காரங்கள் நேற்று முதல் தொடங்கின. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகள் கோவிலின் உள்ளேயே நடந்தன. இந்த ஆண்டுதான் வழக்கம் போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    சிவபெருமான் கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் லீலை அலங்காரத்தில் நேற்று சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். இந்த திருவிளையாடல் பற்றிய புராண வரலாறு வருமாறு்-

    முற்பிறவியில் பல புண்ணிய காரியங்களை ஒருவன் செய்திருந்தான். ஆனால், அவன் சிறிது பாவமும் செய்ததால், அவன் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறந்தான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. காகங்களுக்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து தன் நிலையை எண்ணி வருந்தியது.

    அச்சமயம் அந்த மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த சிலர், மதுரையை பற்றியும், பொற்றாமரைக்குளத்திலே நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்று கூறினர். அதை கேட்ட கருங்குருவி நேராக மதுரைக்கு பறந்து பொற்றாமரைக்குளத்திலே நீராடி இறைவனை வணங்கியது.

    இதை கண்ட இறைவன் குருவியின் பக்திக்கு இறங்கி மிருத்யுஞ்சிய மந்திரத்தை உபதேசித்தார். மேலும் இறைவன் கருங்குருவியின் இனத்தையே எளியான் என்னும் பெயர் மாற்றி வலியான் என வழங்கினார் என்று ஐதீகமாக சொல்லப்படுகிறது.

    இதை விளக்கும் விழாவையொட்டி நேற்று காலை மற்றும் இரவில் ஆவணி மூல வீதியில் சுவாமி-அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு சுவாமி ஆவணி மூல வீதியில் வலம் வருவதை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று (30-ந் தேதி) நாரைக்கு முக்தி கொடுத்தல், நாளை மாணிக்கம் விற்ற லீலை, 1-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 2-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 3-ந் தேதி அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நடைபெறுகிறது.

    4-ந் தேதி காலை வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 6-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 7-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளன.

    8-ந் தேதி சட்டத்தேர் வீதி உலா நடக்கிறது. அன்று இரவு சப்தாவர்ண சப்பரத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.. 9-ந்தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.

    11-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 11 மணிக்கு அய்யா பச்சை பல்லக்கு வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வைகுண்டசாமி எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட பணிவிடைகளை குரு பால ஜனாதிபதி நிகழ்த்தினார். குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் பள்ளி அலங்கார பணிவிடைகளை செய்திருந்தனர்.

    பள்ளியறை பணி விடைகளை குருமார்கள் ஜனாயுகேந்த், ஜனாவை குந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். தலைப்பாகை அணிந்து காவியுடை தரித்த அய்யா வழி பக்தர்கள் 'அய்யா சிவசிவா அரகரா' என்ற பக்தி கோ‌ஷத்திற்கிடையே தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    தேர் கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக மாலை 3 மணிக்கு வடக்கு ரதவீதியில் உள்ள வடக்கு வாசல் பகுதிக்கு வந்தடையும். வடக்கு வாசலில் அய்யா வழி பக்தர்கள் பூ, பழம், பன்னீர், தேங்காய், போன்றவற்றை சுருள்களாக வைத்து வழிபட்டனர். மாலை 6 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வருகிறது.

    இரவு 7 மணிக்கு ரி‌ஷப வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் குமரி, தூத்துக்குடி, நெல்லை உட்பட பல மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அய்யாவழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜன், பால்மணி, ராஜலட்சுமி, சத்தியசேகர், ராதாகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா நிறைவு பெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவி லில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளையில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.

    7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்திருப்பு, மாலையில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா, 8ம் திருவிழா காலையில் வெள்ளை சாத்திக்கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி வீதி உலாவும், மதியம் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்த ருளி வீதி உலாவும் நடை பெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்தாம் திருவிழா தேரோட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெற்றது.

    ஆவணி 12-ந் திருவிழாவான நேற்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் மலர் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் சிறிய மலர் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து விழா நிறைவு பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

    பக்தர்கள் கரும்புத் தொட்டிலில் குழந்தையை சுமந்து சென்றும், அக்னி சட்டி ஏந்தியும் கோவிலை வலம் வந்தும், கோவிலுக்கு முன்புறம் மற்றும் தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று மூலஸ்தான அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    இந்நிலையில், நேற்று ஆவணி மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி காலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவில் ஆஸ்தான மண்டபத்தில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து தங்க சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மேற்பார்வையில் மணியக்காரர் பழனிவேல் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×